Thursday 20 May 2021

தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் (18) பதினெட்டு வகையான உயர்ந்த சிறப்புகள்

 🌾 *بسم الله الرحمن الرحيم*🌾



🔖 *தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் (18) பதினெட்டு வகையான உயர்ந்த சிறப்புகள்* 🔖



✅ *சரிபார்த்தவர்:* 

*ஹஜ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி அவர்கள்*


🖋️ *தொகுத்தவர்:* முஃப்தி சைபுதீன் ஹஸனி (மேலப்பாளயம்)



கொரோனாவினால் ஊரடங்கு ஏற்பட்டு மக்கள் அடையும் கஷ்டங்களை யாரும் அறியாமல் இருக்க முடியாது.

ஏழை எளிய மக்கள் அதிலும் குறிப்பாக தினக்கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து அதன் மூலம் வாழ்பவர்களின் நிலை ஊரடங்கினால் எவ்வளவு மோசமாகும் என்று சிந்தித்தாலே உள்ளம் வலிக்கிறது.


இது போன்ற இக்கட்டான சூழ்நிலையின் போது 

ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கவனித்தில் கொண்டு நாம் அவர்கள் மீது இறக்கப்பட்டு அம்மக்களுக்கு பண ரீதியான சில உதவிகளை செய்தால் அல்லாஹ்வும் நம் மீது இறக்கம் காட்டுவதுடன், பதினெட்டு வகையான சிறப்புகளையும் கொடுக்கிறான். 


அந்த பதினெட்டு சிறப்புகளையும் கீழே பட்டியலிடுகிறேன்


*ஆனால் அதற்கு முன் ஒரு விஷயம்:*


நாம் செய்யக்கூடிய தர்மம் அல்லாஹுடைய பிரியத்தை பெருவதற்காக மட்டும் இருக்க வேண்டும். 

தர்மம் செய்த விஷயத்தை சொல்லிக்காட்டி விடவும் கூடாது, 

தர்மம் செய்யப்பட்ட ஏழையின் உள்ளம் வருத்தம் ஏற்படுமாறு நடந்து கொள்ளவும் கூடாது.


குறிப்பு: ஜகாத் இல்லாமல் பொதுவான தர்மங்களை மாற்று மத ஏழைகளுக்கும் கொடுக்கலாம். இஸ்லாம் அனுமதித்துள்ளது. 

உங்களின் இந்த உதவிக்கும் தர்மம் செய்த சிறப்புகளே கிடைக்கும். 


அம்மாற்று மத ஏழை மக்களுக்கும் முஸ்லீம்களின் மீது அசைக்க முடியாத ஒரு நல்லெண்ணம் ஏற்படுத்துவதற்கு இந்த தர்மம் சிறந்த காரணமாக இருக்கும்.



☄️ *தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்*


1️⃣ *அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்*

📘 ஆதாரம்: நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105


2️⃣ *அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்*

📘 ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 271


3️⃣ *கஷ்டங்கள், முஸீபத்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்*

📘 ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 2863


4️⃣ *அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது*

📘 ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 22962


5️⃣ *அவருக்காக ஒரு மலக்கு துஆ செய்கிறார்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1442


6️⃣ *கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.*

📘 ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதி: ஹதீஸ் எண்: 664


7️⃣ *கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.*

📘 ஆதாரம்: நூல்: அல் முஃஜமுல் கபீர்: ஹதீஸ் எண்: 787


8️⃣ *அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.*

📘 ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 664


9️⃣ *திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்.*

📘 ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 262


1️⃣ *ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹுடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 660


1️⃣1️⃣ *அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1016


1️⃣2️⃣ *ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை* 

*(எ.கா: இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1897


1️⃣3️⃣ *அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்.*

📘 ஆதாரம்: சூரத்துல் ஹதீத்: வசனம் எண்: 7


1️⃣4️⃣ *அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்.*

📘 சூரத்துல் பகரா: வசனம் எண்: 245


1️⃣5️⃣ *அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : ஹதீஸ் எண்: 2959


1️⃣6️⃣ *உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்.*

📘 ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 7576


1️⃣7️⃣ *தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்.*

📘 ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 3


1️⃣8️⃣ *அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1029


அல்லாஹு தஆலா நமக்கும் இந்த பதினெட்டு சிறப்புகளையும் அடையச் செய்வானாக... ஆமீன்



✨✨✨✨✨✨✨