Wednesday 12 June 2019

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-



01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.

06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்
ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச
வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா
செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்
பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று
எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட
வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய
வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்
கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம்
சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய
பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்
கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Tuesday 11 June 2019

70 பெரும் பாவங்கள்:

🌹🌹 *70 பெரும் பாவங்கள்*..,⁉

✒ கட்டுரை :- *ஹாஜி M.A அப்துல் நசீர், சேலம்., திருக்குர்ஆன் வசனம் குரூப்கள் அட்மீன்*.,  *93608 97222*

🌹  *தொடர் பதிவுகள்* *150/1*

1. ஷிர்க் *அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்*
2.   கொலை,
3.   சூனியம்,
4.   தொழுகையை விடுதல்,
5.   ஜக்காத்தை கொடுக்க மறுத்தல்,

6.   நோன்பை விடுதல்,
7.   ஹஜ்ஜு செய்யாமை,
8.   பெற்றோரைத் துன்புறுத்தல்,
9.   உறவினர்களை வெறுத்தல்,
10. விபச்சாரம்,
11. ஆண் புணர்ச்சி,
12. வட்டி,
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்,
14. அல்லாஹ்வின் மீதும் ரஸூலின் மீதும் பொய்யுரைத்தல்.,
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்,
16. தலைவன் அநீதி செய்தல்,
17. பெருமை,
18. பொய்ச்சாட்சி கூறல்,
19. மது அருந்துதல்,
20. சூது,
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்,
22. மோசடி செய்தல்,
23. களவு,
24. வழிப்பறி,
25. பொய்ச் சத்தியம்,
26. அநீதி இழைத்தல்,
27. கப்பம் பெறல்,
28. தகாத உணவு,
29. தற்கொலை,
30. பொய்,
31. கெட்ட நீதிபதி,
32. அதிகாரியின் இலஞ்சம்,
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்,
34. கூட்டிக் கொடுத்தல்,
35. ஆகாததை ஆகுமாக்குபவன்,
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை,
37. முகஸ்துதி,
38. கற்ற கல்வியை மறைத்தல்,
39. சதி செய்தல்,
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்,
41. விதியைப் பொய்ப்படுத்தல்,
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்,
43. கோளுரைத்தல்,
44. திட்டுதல்., *சபித்தல்*
45. வாக்கு மாறுதல்,
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்,
47. கணவனுக்கு மாறு செய்தல்,
48. உருவப் படம் வரைதல்,
49. ஒப்பாரி வைத்து அழுதல்,
50. கொடுமை செய்தல்,
51. வரம்பு மீறுதல்,
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்,
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்,
54. துறவிகளைத் துன்புறுத்தல்,
55. மமதையும், தற்பெருமையும்,
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்,
57. அடிமை ஒளிந்தோடல்,
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்,
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்,
60. மேலதிக நீரைத்தடுத்தல்,
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்,
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்,
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்,
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்,
65. தனித்துத் தொழுதல்,
66. ஜும்ஆவைத் தவற விடல்,
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்,
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்,
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்,
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்..,‼

🌹 *நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நடை முறையை பின் பற்றி வாழ்ந்து மீட்சி பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக*❗

🌹 *அல்லாஹ் இவர்களை பொருந்தி கொள்வானாக*.

🌹 *ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்*

🖊 *இஸ்லாமிய தொடர் பதிவுகள்*🖊

Monday 10 June 2019

சிறப்புடன் வாழ (108) வாழ்வியல் நெறிகள்.

👌👌👌🙏👍🙏👌👌👌

*சிறப்புடன் வாழ (108) வாழ்வியல் நெறிகள்.*

1.      கடமையை செய்.
2.      காலம் போற்று.
3.      கீர்த்தனை பாடு.
4.      குறைகள் களை.
5.      கெட்டவை அகற்று.
6.      கேள்வி வேண்டும்.
7.      கை கொடு.
8.      கோவிலுக்குச் செல்.
9.      கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100.  சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103.  வன்மம் வைக்காதே.
104.  சொல் தவறாதே.
105.  தோள் கொடு.
106.  பேராசைப் படாதே.
107.  புன்னகை அணி.
108.  நீடுழி வாழ்.   

👌👌👌👍🙏👍👌👌👌

﷽﷽﷽ "இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம்

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
"இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம்"



وتحبون المال حبا جما
நீங்கள் பொருளை அளவுகடந்து நேசிக்கிறீர்கள் (89 ; 20)
அல்லாஹ்வின் கிருபையால் நாம் குர்ஆனின் இறுதிப்பகுதியை நெருங்கி விட்டோம்.இன்றைக்கு நமது சிந்தனைக்கு விருந்தாக தேன்மறையின் ஒரு துளி.சூரத்துல் ஃபஜ்ரில் ஒரு வசனம்.நமது மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கின்ற ஓர் வசனம்.

இது திருமறைக்குர்ஆனின் எச்சரிக்கையூட்டும் வசனங்களில் ஒன்று.
உண்மையில் செல்வந்தர்கள் என்றால் யார் ? எவரிடம் பணம்,பொருள், வசதி எல்லாம் அதிகமாக இருக்கிறதோ அவர் தான் செல்வந்தர் என்று நாம் விளங்கி வைத்திருக்கிறோம்.ஆனால் செல்வந்தர் என்பதற்கு நபி ஸல் அவர்கள் கூறும் முகவரி வித்தியாசமானது.
عن أبي هريرة -رضي الله عنه- قال -صلى الله عليه وسلم-:
( ليس الغنى عن كثرة العَرَض، ولكن الغنى غنى النفس ) (1) متفق عليه
பொருள் அதிகமாக இருப்பது செல்வமல்ல. போதுமென்ற மனமே செல்வமாகும்.
அல்லாஹ் எனக்கு கொடுத்தது போதும், அல்ஹம்துலில்லாஹ்! என்று தனக்கிருக்கும் வசதியைக் கொண்டு தன்னிறைவோடு வாழ்பவர் தான் உண்மையில் செல்வந்தர்.நிறைய செல்வங்கள் இருந்தும் திருப்தி இல்லாமல் இது போதாது என்று சொல்பவர், என்று நினைப்பவர் அண்ணல் நபி ஸல் அவர்களின் பார்வையில் செல்வந்தரே அல்ல.
இதன்படி பார்த்தால் இன்றைக்கு உலகில் நிறைய பணக்காரர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.அதனால் அவர்கள் செல்வம் இருந்தும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
போதுமென்ற தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

قوله -صلى الله عليه وسلم-: ( قد أفلح من أسلم، ورزق كفافا، وقنعه الله بما آتاه )
رواه مسلم والترمذي وأحمد وابن ماجة عن ابن عمرو
போதுமென்ற மனம் கொடுக்கப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார் என்பது நபிமொழியாகும்.

وكان من دعائه صلوات الله وسلامه عليه: ( اللهم إني أعوذ بك من قلب لا يخشع، ومن دعاء لا يسمع، ومن نفس لا تشبع، ومن علم لا ينفع، أعوذ بك من هؤلاء الأربع ) رواه الترمدي
அல்லாஹ்வை அஞ்சாத உள்ளம்,பதிலளிக்கப்படாத பிரார்த்தனை, நிரம்பாத உள்ளம்,பயன் தராத கல்வி இந்நான்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்பது நபி ஸல் அவர்கள் கேட்கும் துஆக்களில் ஒன்றாகும்.(திர்மிதி)
قال سعد بن أبي وقاص لابنه: "يا بني، إذا طلبت الغنى فاطلبه بالقناعة. فإن لم تكن قناعة. فليس يغنيك مال .. "
நீ செல்வத்தைத் தேடுவதாக இருந்தால் போதுமென்ற தன்மையோடு தேடு. அந்த தன்மை இல்லையென்றால் எந்த பொருளும் உன்னை நிறைவாக்காது என்று ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் தன் மகனுக்கு கூறுவார்கள்.
مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا). رواه الترمذي
உங்களில் யார் நிம்மதி பெற்றவராகவும் உடல் ஆரோக்கியம் பெற்றவராகவும் அன்றைய நாளின் உணவு கையில் இருக்கும் நிலையில் காலையில் எழுகிறாரோ அவருக்கு உலகமே கொடுக்கப்பட்டவரைப் போல. (திர்மிதி)

وعن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "من يأخذ عني هؤلاء الكلمات، فيعْمَل بهن، أو يُعَلم مَن يعمَل بهن"؟ فقال أبو هريرة: فقلت: أنا يا رسول الله، فأخذ بيدي فعدّ خمسا، وقال: "اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك، فإن كثرة الضحك تميت القلب". أخرجه الإمام أحمد …
அமல் செய்வதற்கோ அல்லது அமல் செய்பவருக்கு கற்றுக் கொடுப்ப தற்கோ என்னிடமிருந்து இந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்பவர் யார் என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது ஹள்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் “நான்” என்று கூறினார்கள்.உடனே நபி ஸல் அவர்கள் அபூஹுரைரா ரலி அவர்களின் கரத்தைப் பிடித்து 5 விஷயங்களைச் சொன்னார்கள். 1, அல்லாஹ் தடுத்தவைகளைத் தவிர்ந்து கொள் நீ  மக்களில் வணக்கசாலியாக ஆகி விடுவாய். 2, அல்லாஹ் உனக்கு பங்கிட்டதை பொருந்திக் கொள்.நீ மக்களில் செல்வந்தனாக ஆகி விடுவாய். 3, உன் அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய். நீ முஃமினாக ஆகி விடுவாய். 4, உனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்பு.நீ முஸ்லிமாக ஆகி விடுவாய். 5, அதிகம் சிரிக்காதே. அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும். (அஹ்மது)

وفي الصحيحين عن حَكيم بن حزام رضي الله عنه، قال: سألت رسول الله صلى الله عليه وسلم، فأعطاني، ثم سألته فأعطاني، ثم سألته فأعطاني، ثم قال: "يا حَكيم، إن هذا المال خَضِرَة حُلوة، فمن أخذه بسخاوة نفس بورك له فيه، ومن أخذه بإشراف نفس لم يُبارَك له فيه، كالذي يأكل ولا يشبع، اليد العليا خير من اليد السفلى"، قال حكيم: فقلت: يا رسول الله، والذي بعثك بالحق لا أرزأ أحدا بعدك شيئا حتى أفارق الدنيا، فكان أبو بكر رضي الله عنه، يدعو حكيما إلى العطاء، فيأبى أن يقبله منه، ثم إن عمر رضي الله عنه دعاه ليعطيه فأبى أن يقبل منه شيئا، فقال عمر: إني أشهدكم يا معشر المسلمين على حكيم، أني أعرض عليه حقه من هذا الفيء فيأبى أن يأخذه، فلم يرزأ حكيم أحدا من الناس بعد رسول الله صلى الله عليه وسلم حتى توفي.
தன் தேவை குறித்து நபி ஸல் அவர்களிடம் ஹகீம் பின் ஹிஸாம் ரலி அவர்கள் மீண்டும் மீண்டும் முறையிட்ட போது, பொருள் என்பது இனிப்பானது,பசுமையானது.நிறைவான மனதோடு யார் அதை எடுத்துக் கொள்வாரோ அவருக்குத்தான் அதில் பரக்கத் ஏற்படும் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.அதன் பிறகு அந்தத் தோழர் தன் மரணம் வரை யாரிடத்திலும் தேவையாக வில்லை.(புகாரி,முஸ்லிம்)


وروى مسلم في صحيحه عن عمر بن الخطاب رضي الله عنه قال: ((دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو مضطجعٌ على حصيرٍ، فجلست، فأدنى عليه إزاره وليس عليه غيره، وإذا الحصير قد أثر في جنبه، فنظرت ببصري في خزانة رسول الله صلى الله عليه وسلم، فإذا أنا بقبضةٍ من شعيرٍ نحو الصاع، ومثلها قرظًا في ناحية الغرفة، وإذا أفيقٌ معلقٌ، قال: فابتدرت عيناي، قال: ما يبكيك يا ابن الخطاب؟ قلت: يا نبي الله، وما لي لا أبكي، وهذا الحصير قد أثر في جنبك، وهذه خزانتك لا أرى فيها إلا ما أرى، وذاك قيصر وكسرى في الثمار والأنهار، وأنت رسول الله صلى الله عليه وسلم، وصفوته، وهذه خزانتك، فقال: يا ابن الخطاب، ألا ترضى أن تكون لنا الآخرة ولهم الدنيا؟، قلت: بلى.. )). (القَرَظ) هو ورَق السَّلَم تدبغ به الجلود. (أفيق) جلد لم يدبغ.
நபி ஸல் அவர்கள் சாதாரண பாயின் மீது படுத்திருந்தார்கள்.அந்த பாயின் அடையாளம் நபியின் மேனியில் தெரிந்தது.அதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்.உலகில் மற்ற தலைவர்களெல்லாம் எத்தனை வசதிகளோடு வாழுகிறார்கள்.ஆனால் உங்களின் நிலை இவ்வாறு இருக்கின்றதோ என்று கூறினார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள், அவர்களுக்கு உலகம் கிடைத்திருக்கிறது.ஆனால் நமக்கு மறுமை கிடைக்கும் என்றார்கள்.  (முஸ்லிம்)
எனவே இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக.

           ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ