Sunday 7 August 2022

புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்

 புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்

பிறை 9 (திங்கட்கிழமை வைக்கும்) நோன்பின் நிய்யத்:

நவய்த்து ஸவ்ம கதின் அன் அதாயி சுன்னத்தத் தாஸுஆஅ  ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹித் தஆலா:


பொருள்:

இந்த வருடத்தின் முஹர்ரம் மாதத்தின் *ஒன்பதாம் நாளின்* *சுன்னத்தான* நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன் 

(யா அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வாயாக)




புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்*


பிறை 10 (செவ்வாய் கிழமை வைக்கும்) நோன்பின் நிய்யத்: 


*நவய்த்து ஸவ்ம கதின் அன் அதாயி சுன்னத்தல் ஆஷுராஅ ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹித் தஆலா:*


பொருள்:

இந்த வருடத்தின் முஹர்ரம் மாதத்தின் *பத்தாம் நாளின்* *சுன்னத்தான* நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன் 

(யா அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வாயாக)

ஆஷுரா நாளில் செய்ய வேண்டிய பத்து நற்செயல்கள்:

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஆஷுரா நாளில் செய்ய வேண்டிய பத்து நற்செயல்கள்:


*1-பிறை 9-10 ல் நோன்பு நோற்பது* அதனால் கடந்த ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது 



*2-தன் குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வது*

 அதனால் ஆண்டு முழுவதும் விசாலமான வாழ்வாதாரத்தை அல்லாஹ் வழங்குவான்

 

*3-யாரேனும் ஒருவர் ஒரு நாளில் நோன்பு நோற்று* 

*ஏழைக்கு உணவளித்து நோயாளியை நலன் விசாரித்து ஜனாஸாவில் கலந்து கொண்டால்* 

*அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்* எனவே *ஒரே நாளில் இந்த நான்கு காரியங்களையும்* செய்திட முயற்சிக்க வேண்டும்


* 4-அதிகமாக (ஸதகா)*

*தர்மம் செய்வது* 


*5-நோன்பாளிகளுக்கு ஸஹர் இஃப்தாருக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது* 


*6-குளித்து சுத்தமாக இருப்பது இதனால் ஆண்டு முழுவதும் பெரும் வியாதி லிருந்து பாதுகாப்பு கிடைக்கும்*


*7-தந்தை இல்லாத அனாதை (யதீம்)களின்* *அன்பாக ஆதரவாக தலையை தடவி உதவி செய்வது* 

*அதனால் உள்ளத்தில் இரக்க குணமும் கணக்கிட முடியாத நன்மைகளும் கிடைக்கும்*


*8-பசித்தவர்களுக்கு உணவும் தாகித்தவர்களுக்கு நீரும் கொடுப்பது* 


*9-முடிந்தளவு ஆஷுரா இரவில்  அதிக அமல்கள் செய்வது* 


*10-அதிகமாக துஆக்கள் செய்வது குறிப்பாக சிறப்பு மிக்க துஆக்களை அதிகமாக ஓதுவது*


நமது அமல்களை அல்லாஹ் கபூல் செய்து நிரந்தரமான நிலையான ஈமானையும் நல்அமல்களையும் அஃப்வு என்னும் மன்னிப்பையும் ஆஃபியத் எனும் ஆரோக்கியத்தையும் நம் அனைவருக்கும் அருள்வானாக 

உங்கள் துஆவில் மறக்காமல் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் 

வஸ்ஸலாம்

ஆஷுரா (பத்தாம்) நாளின் பத்து சிறப்புகள்:

 ஆஷுரா (பத்தாம்) நாளின்  பத்து சிறப்புகள்:

1-அல்லாஹ்வின் அர்ஷ்-லைஹுல் மஹ்ஃபூல் -கலம் ஆகியவற்றை அல்லாஹ் படைத்த நாள்:


2--ஜிப்ரீல்( அலை) படைக்கப்பட்ட நாள்:


3--உலகில் முதன் முதலில் மழை பொழிந்த நாள்: 


4--அல்லாஹ்வின் ரஹ்மத் இந்த பூமியில் இறக்கப்பட்ட நாள்: 


5--ஆதம் அலை அவர்களின் பாவ மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 


6--நூஹ் அலை அவர்களின் கப்பல் ஜுதி மலையில் ஒதுங்கி மக்கள் பாதுகாப்பு பெற்ற நாள்: 


7--உலகின் மிகப்பெரிய அநியாக்காரனாகிய ஃபிர்அவ்னும் அந்த அநியாயக்காரனுக்கு  துனை போனவர்களும் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு மூஸா அலை அவர்களும்  அவர்களை பின்பற்றியவர்களும் பாதுகாக்கப்பட்ட நாள்: 


8--துஆக்கள் கபூலாகும் நாள்: 

-கபூலான துஆக்கள் நிறைவேறும் நாள்:


9--அநியாயக்கார்களுக்கு முடிவு கட்டப்படுப்பட்டு நல்லவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள்:

10-கியாமத்எனும் உலக அழிவு ஏற்படும் நாள்: