Tuesday 31 July 2018

*வீடுகளில் பரகத் ஏற்படுவதற்கான வழிமுறைகள்

*வீடுகளில் பரகத் ஏற்படுவதற்கான வழிமுறைகள்*

🔖பரகத் (அபிவிருத்தி) என்பது நாம் அடிக்கடி செவிமடுக்கும் ஒரு சொற்பதம் ஆகும். ஆனால் எமது வீடுகளில் நாம் அதனை இழந்துள்ளோம். எமக்கு நேரத்தில், வாழ்வாதாரத்தில், செல்வத்தில், குழந்தைகளில் பரகத் இல்லை என்பதே கவலைக்குரிய விடயம்.

🤔அவ்வாறாயின், பரகத்துக்கான திறவுகோள்கள் யாவை?

🔖 **பரகத்தை ஏற்படுத்தக் கூடிய   எட்டு வகையான திறவுகோள்கள் காணப்படுகின்றன.*
*
அவை,

🔑 *சங்கை மிக்க அல்குர்ஆனை ஓதுதல்*

அல்லாஹ் கூறுகின்றான் " பரகத் செய்யப்பட்ட இந்த வேதத்தை  நாமே இறக்கி வைத்தோம்". (6:155)
அல்லாஹ் அல்குர்ஆனை, அதனை ஆராய்வதனூடாகவும் அன்றாட வாழ்வில் அதன் போதனைகளை நடைமுறைப்படுத்துவதனூடாகவும் பாக்கியம் நிறைந்ததாக ஆக்கியுள்ளான். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆன் ஓதப்படுகின்ற வீட்டைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்: "(அவ் வீட்டில்) மலக்குமார்கள் குடியிருப்பர். ஷைத்தான்கள் வெளியேறிவிடும். குடும்பத்தில் அபிவிருத்தி ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கும்".

🔑 *பிஸ்மி கூறலும், அல்லாஹ்வை நினைவுபடுத்தலும்* .

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதர் தனது வீட்டினுள்   நுழைகின்ற போதும், உணவு உட்கொள்கின்ற போதும் அல்லாஹ்வை நினைவு கூறுகின்றார். அப்போது ஷைத்தான் தனது தோழர்களைப் பார்த்து 'இங்கு (எமக்கு) தங்குமிடமும் இல்லை. உணவும் இல்லை' எனக் கூறுவான்.

🔑 *தர்மம்*

வீட்டினுள் பரகத் ஏற்படுவதற்கான பிறிதொரு வழிமுறையாக தர்மம் செய்தல் காணப்படுகின்றது. (அதிலும்) குறிப்பாக இரகசியமாக வழங்கப்படும் தர்மம். ஏனெனில் அது இரட்சகனின் கோபத்தை தனித்து விடும்.

🔑 *குடும்ப உறவுகளைப் பேணுதல்*

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "நிச்சயமாக குடும்ப உறவுகளைப் பேணுவதும் நன்னடத்தையும் நல்ல நட்பும் வாழ்வாதாரத்தை விருத்தி செய்து, வாழ்நாட்களையும் அதிகரிக்கின்றது."

🔑 *தொழிலுக்காக  அதிகாலையிலே புறப்பட்டுச் செல்லுதல்*

ஒரு ஹதீஸில் "எனது சமூகத்திற்கு அதன் அதிகாலைப் பொழுதுகளில் பரகத் செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அதிகாலைப் பொழுதில் வாழ்வாதாரத்தைத் தேடிச் செல்வதில் பரகத் இருக்கின்றது.

🔑 *தொழுகையை நிலைநாட்டல்*

தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுதல். அல்லாஹ் தஆலா கூறுகின்றான்: "மேலும் நீர் உம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டு ஏவுவீராக! நீரும் அதன் மீது (பொறுமையுடன்) நிலைத்திருப்பீராக. நாம் உம்மிடம் உணவைக் கேட்கவில்லை. உமக்கு  நாமே உணவளிக்கின்றோம். மேலும் நல்ல முடிவு பயபக்திக்கே உரியதாகும்". (20:132)

🔑 *அல்லாஹ் மீதான உண்மையான தவக்குல்*

ஒரு ஹதீஸில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "நீங்கள் அல்லாஹ் மீது உண்மையான தவக்குல் வைப்பீர்களானால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் அவன் உங்களுக்கு உணவளிப்பான். அவை வெறும் வயிற்றோடு (கூட்டை விட்டு) வெளியேறுகின்றன. பின்னர் வயிறு நிரம்பியவையாக (கூட்டை) அடைகின்றன"

🔑 *தொடர்ந்தேர்ச்சையாக பாவமன்னிப்புக் கோறல்*

பாவமன்னிப்பு என்பது வாழவாதாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் அடிப்படையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "யார்  தொடர்ச்சியாகப் பாவமன்னிப்புக் கோறுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் அனைத்து வகையான கஷ்டங்களிலிருந்தும் மீளக்கூடிய வழியையும், அனைத்துத் துன்பத்திலிருந்தும் விடிவையும்  ஏற்படுத்துகின்றான். எதிர்பாரா விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான்".

🤲🏻அல்லாஹ் உங்களுக்கும் எமக்கும் (வாழ்வில்) பரகத்தையும் (அவனது) திருப்தியையும் வழங்குவானாக...🤲🏻

திருக்குர்ஆன் கேள்வி பதில்

…...…,•’``’•,•’``’•,
…...…’•,`’🌹’` ,•’
...……...`’•, ,•’,•’``’•,•’``’•,
,•’``’•,•’``’•,’•…’•,`’🌹’` ,•’
’•,`’🌹’` ,•’….....`’•, ,•’
....`’•, ,•’ ...

وَعَلَيْكُمْ السَّلاَمُ وَرَحْمَةُ اللهِ
 وَبَرَكَاتُهُ

*வ அலைக்கும் ஸலாம்*
*வ ரஹ்மத்துல்லாஹி*
*வ பரக்காத்துஹூ*

"""""""""""""""""""""""""""""""""""""

இறைவனின் சாந்தியும்
சமாதானமும் உங்கள்  மீதும்

உங்கள்  குடும்பத்தார்  மீதும்
என்றென்றும்  நிலவட்டுமாக
ஆமீன்

🔴 திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை ?
⚫ 6666

🔴 தும்மினால் என்ன சொல்ல வேண்டும் ?
⚫ அல்ஹம்து லில்லாஹ்.,

🔴 வஹீ என்றால் என்ன வென்று ?
⚫ அல்லாஹ்வின் செய்தி.

🔴வஹீ கொண்டு வரும் வானவர் யார் ?
⚫ஜிப்ரயீல் (அலை)

🔴 இஸ்திக்பார் என்றால் என்ன ?
⚫ பாவமன்னிப்பு தேடுவது.

🔴 முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார் ?
⚫ பிலால் (ரலி)

🔴 முதல் கலீபா யார் ?
⚫ அபூ பக்கர் சித்தீக் (ரலி)

🔴 மன்னிக்கப்படாத பாவம் எது ?
⚫ குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.

🔴 கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார் ?
⚫ நபி மூஸா (அலை)

🔴 எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும் ?
⚫ குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு

🔴 அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது ?
⚫ பள்ளிவாசல்

🔴 யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது ?
⚫ தாயின் காலின் கீழ்.

🔴பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது? ⚫ 7 வயது.

🔴பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும் ?
⚫ ஃபீ அமானில்லாஹ்

🔴நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன ?
⚫ கிராமன் காதிபீன்.

🔴 பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது ?
⚫ எகிப்து (மிஸ்ர்)

🔴 இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது ?
⚫ நபி, ரசூல்

🔴 இஸ்லாம் என்பதின் பொருள் என்ன ?
⚫ அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.

🔴 உலகம் முழுவதையும் படைத்தது யார் ?
⚫ அல்லாஹ்.

🔴 அஸ்ஸலாத் என்றால் என்ன ?
⚫ தொழுகை

🔴 திருக்குர்ஆன் எந்த மொழியில் உள்ளது ?
⚫ அரபி மொழியில்.

🔴 அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன ?
⚫ அளவற்ற அருளாளன்.

🔴 திருக்குர்ஆனின் முதல் ஸூரா எது ?
⚫ ஸூரா அல் பாத்திஹா

🔴 முஸ்லிமின் முதல் கடமை என்ன?
⚫ தொழுகை.

🔴 மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது ?
கஃபா.

🔴அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது ?
⚫ நரகம்.

🔴 பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர் ?
⚫ 313 ஸஹாபாக்கள்

🔴ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன ?
⚫ நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.

🔴 நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
⚫ ஒன்று

🔴 நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார் ?
⚫ நபி சுலைமான் (அலை)

🔴நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள் ?
⚫ஏழுபேர். 3ஆண்கள் , 4 பெண்கள்.

🔴 ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார் ?
⚫அபூ ஹுரைரா (ரலி)

🔴அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) அவர்களின் மனைவி யார் ?
⚫ அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா

🔴 திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத ஸூரா எது ?
⚫ ஸூரா தவ்பா.

🔴முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
⚫கதீஜா (ரலி)

🔴 திக்ருகளில் சிறந்தது எது ?
⚫ லாஇலாஹ இல்லல்லாஹ்

🔴 சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
⚫ அலி (ரலி)

🔴 நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார் ?
⚫அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)

🔴 ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள் ?
⚫ 2 ரக்அத்கள். பர்லு

🔴 நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர் ?
தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.

🔴 நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும் ?
⚫ அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.

🔴 நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும் ?
⚫ ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.

🔴இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும் ?
⚫ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.

🔴 முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது ?
⚫ ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.

🔴 சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது ?
⚫ ஜன்னதுல் பிர்தவ்ஸ்.

🔴 எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை ?
⚫ மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு

🔴நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார் ?
⚫முஸைலமதுல் கத்தாப்.

🔴 ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது ?
⚫ ஸஹீஹுல் புகாரி.

🔴 உண்மையான வீரன் யார்?
⚫ கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்
கொள்பவன்.

🔴 நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
⚫ 63 ஆண்டுகள்.
❥═════════❥

Tuesday 24 July 2018

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?

தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?


தண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்க வேண்டாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி குடித்தால் அது உடலில் ஒட்டாது என்றும் கூறுவார்கள். அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அப்படி குடிப்பதால் சிறுநீரகம், இரைப்பை குடல் பாதை போன்றவை பாதிக்கப்படுவதோடு, ஆர்த்திரிடிஸ் அபாயம் உள்ளதாம்.

இங்கு நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கும், மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து, உட்கார்ந்து குடியுங்கள்.

1 - இரைப்பை குடல் பாதை பாதிப்பு நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

2 - சிறுநீரக பாதிப்பு தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

3 - ஆர்த்ரிடிஸ் சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

4 - நரம்புகள் டென்சன் ஆகும் பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

5 - குறிப்பு உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம். * காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். * மதிய உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் தண்ணீர் குடிக்கவும். * முக்கியமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சிறிது குடிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
நூல் : முஸ்லிம் 4118

இறைவனின் தூதராக முஹம்மது[ஸல்] இருந்தாலன்றி
இன்றைய அறிவியலை அன்றே கூறமுடியாது !👇

பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் #பெற்றோர்கள் கவனத்திற்கு

பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

#பெற்றோர்கள் கவனத்திற்கு:


1. பெண் குழந்தைகளுக்கு, "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

26. பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள்.  சிலவகை ஆடைகள் சிலருக்கு பொருந்துவது இல்லை. அதுவே ஆபாசமாகக் காட்சியளிக்கின்று.



🙏🙏🙏🙏🙏

Sunday 22 July 2018

*கொசு ஓர் அதிசயம்!!!*

*தெரிந்து கொள்ளுங்கள்..*

*கொசு ஓர் அதிசயம்!!!*




*திருக்குர்ஆனில் கொசுவைப் பற்றிய வசனமும் அதன் படைப்பைப் பற்றிய அறிவியல் விளக்கமும்....*

========================


கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.
மேற்கொண்டு படியுங்கள்.

1. அது பெண்பால்.

2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.

3. அதன் வாயில் 48 பற்கள்.

4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.

5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.

6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்

7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.

8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..

9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது.

 அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.

10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.

11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது.

அது என்ன வசனம் தெரியுமா?
 *إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا*
*நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)*

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான்.
இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.
அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.

நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)

அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம்.
அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும்,
முகத் தோற்றத்தையும்,
B அதன் நுண்ணிய கண்களையும்,
C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம்.

*ஸுப்ஹானல்லாஹ் !!!!!*
*அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.*
*வல்லமையுள்ளவன்...*
*என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்...*

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:


படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...


சம்பவம்-1 👇👇👇👇👇👇


24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..


மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"


அவனருகில் இருந்த அவனது அப்பா

சிரித்துக்கொண்டார்.


ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....


மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.


"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்

நம்மோடு வருகின்றன..; என்றான்...


இதைக்கேட்டு தாங்க முடியாத

தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்


"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"


 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்

கொண்டே சொன்னார்...


"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...


என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு

தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."


அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை

இழந்துவிடலாம்.


சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.


'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்

எடை போடவேண்டாம்.


சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇


ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..


 அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....


தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...


பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..


தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...


உடனே அந்த சிறுமி, தாயிடம்

சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....


நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..


அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.


அடுத்தவருக்கு போதுமான அளவு

இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.


நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.


எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..


மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.


சம்பவம்-3  👇👇👇👇👇👇


செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை

விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.


வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."


 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""


 "ஐந்து ரூபாய்"


ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.


மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"


"இல்லம்மா வராதும்மா"


அதெல்லாம் முடியாது.


 மூன்று ரூபாய் தான்


பேரம் பேசுகிறாள் அந்த தாய்.


பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு


"மேல ஒரு ரூபாய் போட்டு

கொடுங்கம்மா" என்கிறாள்"


முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.


கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு


"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.


"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"


இல்லம்மா போய்தான் கஞ்சி

காய்ச்சிணும்"


"சரி. இரு இதோ வர்றேன்." என்று

கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..


திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"


என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.


எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..


"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு

பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு

வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு

முப்பது ரூபாய் வருதும்மா.....?


என்று கேட்கஅதற்கு அந்த தாய்,


"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.


இது தான் உண்மையில் மனித நேயம் ......


சம்பவம் 4 👇👇👇👇👇👇👇


 மாலையில் நடைப் பயிற்சியை

முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்

வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.


வரும் வழியில் ஒரு

கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.


சற்று இருட்டியதால் இருவரும்

வேகமாக நடக்கத் தொடங்கினர்...


 திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்

ஓடத்தொடங்கினர்.


கணவர் வேகமாக ஓடினார்.


கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து

முடிக்கும் போது தான் மனைவி

பாலத்தினை வந்தடைந்தார்.


மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து

வந்ததால் மனைவி பாலத்தை கடக்க

பயப்பட்டாள்.


அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...


 இருட்டில் எதுவும் தெரியவில்லை.


மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...


தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள்.


கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.


அவளுக்கு அழுகையாய் வந்தது.


இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.


மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.


பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு

இக்கட்டான நிலமையில் கூட உதவி

செய்யாத கணவனை நினைத்து

வருந்தினாள்.


ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...


 கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.


அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டிருந்தார்.


சில சமயம் கணவர் குடும்பத்திற்கு

எதுவும் செய்யாமல் மௌனமாக

இருப்பதாக தோன்றும்...


ஆனால்


உண்மையிலேயே அவர் தன்

குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்

கொண்டுதான் இருப்பார்.


தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.


வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.


தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.


இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?


நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.


 அப்போது தான் கோவம், EGO, இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.


வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.


எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.


வாய்ப்புகளை கொடுத்தும், வாய்ப்புகளில் சரியானதை தேர்ந்தெடுத்தும்  வாழ கற்றுக் கொள்ள வேண்டும்👍👍👍👍

படித்ததில் பிடித்ததாய் பகிர்கின்றேன்

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குமார் இறங்காத அவர்கள் துஆ செய்யாத 10 வீடுகள்...

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குமார் இறங்காத அவர்கள் துஆ செய்யாத 10 வீடுகள்...

1) அல் குர்ஆன் ஓதப்படாத வீடுகள்
2) பிந்திய இரவில் உறங்கி சுபஹ் தொழாமல் சூரியன் உதித்தபின்பும் உறங்கும் வீடுகள்
3) இறைவன் விரும்பாத (பாடல்கள்+இசை+சினிமா+நாடகம்+பிக்பாஸ் நிகழ்ச்சி என) வீண்விரயமான தொலைக்காட்சி நிகழ்சிகளில் நேரத்தை செலவிடும் வீடுகள்
4) நாய்கள் வளர்க்கப்படும் வீடுகள்
5) கணவனை மதிக்காத வீடுகள்
6) உணவுகள் வீண்விரயம் செய்யப்படும் வீடுகள்
7) இஸ்லாம் அனுமதிக்காத ஆடம்பரம் மற்றும் வீண்விரயங்களை செய்யும் வீடுகள்
8) முதியோர்கள் மரியாதை செய்யப்படாத வீடுகள்
9) மது போன்ற போதைதரும் ஹறாமான பானங்கள் பரிமாறப்படும் வீடுகள்
10) சப்தமிட்டு குரல்களை எழுப்பும் பெண்கள் உள்ள வீடுகள்

Friday 20 July 2018

குர்ஆன் போதிப்பது என்ன ? சிறு தொகுப்பு!!!


*︵︻︵︻︵︻︵︻︵︻︵︻︵︻︵︻*
*✨بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ✨*
*︶︼︶︼︶︼︶︼︶      
குர்ஆன் போதிப்பது என்ன ?
சிறு தொகுப்பு!!!

..  ஒப்பந்தங்களை முறித்துமாறு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:27,16:92*
.. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.
*குர்ஆன் 2:27,47:22*
.. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.
*குர்ஆன் 2:42*
..  நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.
*குர்ஆன் 2:44 61:2*
.. பூமியில் குழப்பம் செய்து திரிய கூடாது.
*குர்ஆன் 2:60*
..  ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்க கூடாது.
*குர்ஆன் 2:79*
.. பெற்றோருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும்
*குர்ஆன் 2:83*
... வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது.
*குர்ஆன் 2:84*
.. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்றியுங்கள்.
*குர்ஆன் 2:109*
..  நல்லவற்றை/ தூயவற்றையே சாப்பிட வேண்டும்.
*குர்ஆன் 2:168 ,172*
.. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்ற கூடாது.
*குர்ஆன் 2:170*
.. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும்,  ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளுக்கும் கொடுத்து, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.
*குர்ஆன் 2:177*
.. மற்ற மனிதர்களின் சொத்துக்களை அபகரிக்க கூடாது. லஞ்சம் கொடுக்க கூடாது.
*குர்ஆன் 2:188*
.. உங்களுடன் போர் புரிபவர்களோடே போர் புரிய வேண்டும். அதிலும் வரம்பு மீற கூடாது. போர் செய்யாது விலகிக்கொண்டால், அநியாய காரர்கள் மீதே தவிர வேறு எவர் மீதும் பகைமை கொல்ல கூடாது.
*குர்ஆன் 2:190-193*
எதிரிகளில் ஒருவன் அடைக்களம் கேட்டால் கொடுத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும்
*குர்ஆன் 9:6*
உங்களுடன் போரிட சக்தியற்றவர்களுடன் போர் செய்ய கூடாது. அவர்கள் எதிரியாக இருந்தாலும் சரி
*குர்ஆன் 4:90*
எதிரிகள் சமாதானத்தை விரும்பினால், சமாதனமாக வேண்டும்.
*குர்ஆன் 8:61*
அப்பாவிகளை பலவீனர்களை காப்பாற்றவே போர் செய்ய வேண்டும்.
*குர்ஆன் 4:75*
..  பூமியில் குழப்பம் செய்ய, விவசாயத்தை அழிக்க கூடாது..
*குர்ஆன் 2:205*
.. நல்ல வழியில் அநாதைகளுக்கு குடும்பத்திற்க  வழிப்போக்கர்களுக்கு தர்மம் செய.
*குர்ஆன் 2:215*
.. மதுபானம் சூதாட்டம் கூடாது.
*குர்ஆன் 5:90*
.. அநாதைகளை சீர்திருத்தி பராமரிக்க வேண்டும்.
*குர்ஆன் 2:220*
...மாதவிடாய் காலத்தில் உடலுறவு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:222*
... தர்மத்தை தனக்கு தரும் கடனாக இறைவன் பார்க்கிறான். அக்கடனை திருப்பி கொடுத்துவிடுவான்.
*குர்ஆன் 2:245*
.. . மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
*குர்ஆன் 2:256 10:99 18:29*
,... தர்மம் செய்து விட்டு சொல்லிக்காட்ட கூடாது.
*குர்ஆன் 2:262-264*
.. நல்லதையே தர்மம் செய்ய வேண்டும்..
*குர்ஆன் 2:267*
... தேவையுள்ளவர்களை கண்டுபிடித்து உதவ வேண்டும்.
*குர்ஆன் 2:273*
....வட்டி வாங்க கூடாது.
*குர்ஆன் 2:275-276,279*
... கடன் வாங்கியவருக்கு திருப்பி தர முடியாவிட்டால், அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
*குர்ஆன் 2:280*
....கடன்  கொடுக்கல் வாங்கல்களை எழுதி கொள்ள வேண்டும். அதற்காக நல்ல சாட்சியாளர்களை வைத்து கொள்ள வேண்டும்.
எழுத முடியாவிட்டால், அடைமானங்களை வைத்து செய்ய வேண்டும்.
*குர்ஆன் 2:281-282*
... .நன்மையானவற்றை ஏவி தீயதை தடு.
*குர்ஆன் 3;104,110,114*
..கோபத்தை அடக்கிகொள்.  மனிதர்களை மன்னித்து விடு.
*குர்ஆன் 3:134*
.. தவறு என்று அறிந்த பின் அதில் தொடர்ந்து இருக்காதே.
*குர்ஆன் 3:135*
... மற்றவர்களுடன் மென்மையாக நடந்து,சொல்லில் கடுமையாக இல்லாமலும், மற்றவர்களுடன் ஆலோசனை செய்பவராக இருக்க வேண்டும்.
*குர்ஆன் 3:159*
... கஞ்சத்தனம் கூடாது.
*குர்ஆன் 3:180*
.. மற்றவர்களின் நோவினை செய்யும் வார்த்தைகளை கேட்டாலும், பொறுமையாக இரு.
*குர்ஆன் 3:186*
...வானங்கள் பூமியின் படைப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும்.
*குர்ஆன் 3:190-191*
.. நற்கூலி வழங்கப்படுவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை.
*குர்ஆன் 3:195 4:124 16:97 40:40*
....இறந்தவர் விட்டு செல்லும் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு.
*குர்ஆன் 4:7*
... சொத்து பிரிக்கும் போது அவ்விடத்திற்கு,  அநாதையோ, ஏழையோ வந்தால்  அவர்களுக்கும் ஏதாவது கொடுத்து, அன்பான வார்த்தைகளை அவர்களுக்கு கூற வேண்டும்.
*குர்ஆன் 4:8*
... அநாதைகளின் சொத்துக்களை  , அவர்களை பராமரிப்பதாக கூறி சாப்பிட கூடாது..
*குர்ஆன் 4:6,10*
... பெண்களை வற்புருத்தி திருமணம் முடிக்க கூடாது.
மனைவிகளுடன் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் விசயத்திலும் அநேக நன்மைகள் இருக்கும்.
*குர்ஆன் 4:19*
.... திருமணம் முடிக்க, பெண்ணுக்கு மனக்கொடையை ஆண் கொடுக்க வேண்டும்.
அவளை விவாகரத்து செய்யும்போது, ஒரு பொற்குவியலை கொடுத்திருந்தாலும் திருப்பி கேட்க கூடாது.
*குர்ஆன் 4:4,20*
..நெருங்கிய இரத்த உறவுகளை, திருமணம் முடிக்க கூடாது.
*குர்ஆன் 4:22-23*
,.. மற்றவர்களின் சொத்தை அநியாயமாக உண்ண கூடாது.
தங்களை தாங்களே அழித்து கொள்ள கூடாது.
*குர்ஆன் 4:29*
.... ஆண்களே பெண்களுக்கு செலவழிக்க வேண்டும்.
*குர்ஆன் 4:34*
... பெற்றோருக்கு,உறவினர், அநாதைகளுக்கு, ஏழைகளுக்கு, உறவினரான அயலவர், உறவினரல்லாத அயலவர், நண்பர்கள், வழிப்போக்கர்கள், அடிமைகளுக்கு உபகாரம் செய்ய வேண்டும்.
*குர்ஆன் 4:35*
....  மனிதர்களுக்கு தீர்ப்பு கூறினால் நீதமாக தீர்ப்பளிக்க வேண்டும்.  ஒப்படைக்கப்பட்டவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*குர்ஆன் 4:58*
....அப்பாவிகளை பாதுகாக்கவே போர்.
*குர்ஆன் 4:75*
..நன்மையானவற்றிற்காக பரிந்துரைத்தால், அந்நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு..
*குர்ஆன் 4:85*
...உங்களை எதிர்த்து போரிட இயலாத எதிரிகளை ஒன்றும் செய்ய கூடாது.
*குர்ஆன் 4:90*
.. மோசடி காரர்களுக்காக வாதாட கூடாது.
*குர்ஆன் 4:107*
.. பாதிக்கப்படுவது நீங்களாக, உங்கள் உறவினராக இருந்தாலும் நீதியை நிலை நிறுத்தியே சாட்சி சொல்ல வேண்டும்.
*குர்ஆன் 4:135*
*_..நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும்._*
*_பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடாது._*
*குர்ஆன் 5:2*
*_ .. ஒரு உயிரை நியாயமின்றி,கொலை செய்தால் அவர் முழு மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்._*
*_ஒரு உயிரை வாழ வைத்தால், அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்._*
*குர்ஆன் 5:32*
*_முஸ்லிம் அரசாங்கத்தின் கீழ் வாழும் ஒரு முஸ்லிமல்லாதவரை அநியாயமாக கொலை செய்பவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது._*
*(புஹாரி)*
*_... கெட்டவை அதிகமாக இருந்தாலும் , நல்லவையும் கெட்டவையும் சமமல்ல.._*
*குர்ஆன் 5:100*
*_. .. மாற்று மதத்தவர்களால் கடவுளென நம்பப்படுபவர்களை ஏச கூடாது._*
*குர்ஆன் 6:108*
*_.. பெரும்பாண்மையை  வைத்து எதையும் நல்லது என்று தீர்மானிக்க கூடாது_*
*குர்ஆன் 6:116*
*_..   தம் குழந்தைகளை  வறுமைக்கு பயந்து கொல்ல கூடாது._*
*_மானக்கேடானதில் இரகசியமானவற்றையோ, வெளிப்படையான வற்றையோ நெருங்க கூடாது._*
*_எந்த உயிரையும் உரிமையின்றி கொல்ல கூடாது._*
*குர்ஆன் 6:151*
*_.. அளவை நிறுவையில் நேர்மையாக இரு.._*
*_பாதிக்கபடுவது உறவினராக இருந்தாலும் நீதத்தையே கூறு._*
*குர்ஆன் 6:152*
*_.. ஒருவரின் பாவச்சுமைகளை மற்றவர் சுமக்க முடியாது._*
*குர்ஆன் 6:164*
*..இறைவனை பிரார்த்தனை செய்யும்போது, பணிவாகவும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.!*
*குர்ஆன் தரவேண்டும்.*,,,,,
*_.. அளவை நிறுவையில் மோசடி கூடாது._*
*குர்ஆன் 7:85*
*_ ..  மன்னிப்பதை கைக்கொண்டு, நன்மையை ஏவி, அறிவிலிகளை புறக்கணித்து விடு._*
*குர்ஆன் 7:199*
*_ ..  பெற்றோருக்கு நன்றி செலுத்த வேண்டும்._*
*_மார்க்க விசயத்திலே மட்டுமே கட்டுபட கூடாது._*
*_அவர்கள் முதுமையை அடைந்தால், அவர்களுக்கு 'சீ' என்று கூட கண்ணிய குறைவாக பேச கூடாது._*
*_அவர்களை விரட்டிவிட கூடாது._*
*_அவர்களுடன் பணிவாக இரக்கமாக நடக்க வேண்டும்._*
*குர்ஆன் 17:23-24 31:14-15*
*_இறைவனுக்கு நன்றி செலுத்து என்பதுடன் இணைத்து பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று கூறுகிறது._*
*குர்ஆன் 31:14*
*_ .. வீண் விரயம் செய்ய கூடாது. கஞ்சத்தனம் கூடாது._*
*குர்ஆன் 17:27-29*
*_...விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவும் கூடாது._*
*குர்ஆன் 17:32*
*_...கர்வம் கொண்டு நடக்க கூடாது. பணிவாக நடக்க வேண்டும்._*
*குர்ஆன் 17:37 31:18 25:63*
*_....பேசினால் நல்லதையே பேச வேண்டும்._*
*குர்ஆன் 17:53*
*_ .. பார்வையை தாழ்த்தி கற்பை பாதுகாத்துக்கொள்._*
*குர்ஆன் 24:30-31*
*_.. பொய் சாட்சி சொல்ல கூடாது._*
*_வீணான காரியங்களில் ஈடுபடாதே._*
*குர்ஆன் 25:72*
*_...  மற்ற மனிதர்களிடமிருந்து முகத்தை திருப்பிக்கொள்ளாதே!_* *_கர்வமாக நடக்காதே!_*
*_சத்தத்தை தாழ்த்திக்கொள்!_*
*குர்ஆன் 31:18-19*
*_..  மற்றவரை கேலி செய்யாதே!_*
*_கெட்ட பெயர் வைத்து கூப்பிடாதே!_*
*_புறம் பேசாதே!_*
*_துருவி துருவி மற்றவனை குறை தேடாதே!_*
*குர்ஆன் 49:11-12*
*_... மனிதர்கள் அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளே!_*
*_எவருக்கும் எவரை விடவும் சிறப்பு இல்லை!_*
*_கோத்திரங்கள், கிளைகளை ஆக்கியது அறிமுகமாகிக்கொள்வதற்காகவே!_*
*_உங்களில் சிறந்தவர் பயபக்தி உடையவரே!_*
*குர்ஆன் 49:13*
*_.... உங்களுடன் மார்க்க விசயத்தில் போரிடாத, வீட்டிலிருந்து வெளியேற்றாத மாற்று மதத்தவர்களுக்கு நன்மை செய்._*
*குர்ஆன் 60:8.*
*_....ஏழைகளுக்கு உணவளி, உணவளிக்க மற்றவர்களை தூண்டு!_*
*_இதை செய்யாதவர்களுக்கு கேடு.. நரகமே தங்குமிடம்._*
*குர்ஆன் 74:42-44 107:1-3*
*_சுவர்க்கம் போக இது முக்கிய காரணம்._*
*குர்ஆன் 76:8-12*
*_. .. குறை கூறி புறம் பேசி திரியாதே!_*
*குர்ஆன் 104:1*
*_அநாதைகளை ஒடுக்காதே!_*
*_யாசிப்போரை விரட்டாதே!_*
*குர்ஆன் 93:9-10*
*_பசித்தோருக்கு உணவளி._*
*குர்ஆன் 90:13-16*

*பெற்றோர்களின் கவனத்திற்கு..*

*பெற்றோர்களின் கவனத்திற்கு..*

இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   *Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager* போன்ற *Android* அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே
*முன்னச்செரிக்கையாக*
*phone* ல் செய்ய வேண்டியது

1) *play store*  சென்று *settings ல் parent control option* ஐ *on* செய்யவும்.

2) அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.

3) அடுத்ததாக  *Films* ஐ கிளிக் செய்து  *U* என்பதை டிக் செய்யவும்.
இப்போது  உங்கள் Smartphone  *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  *பாதுகாப்பானதாக* இருக்கும். *

4)அதேபோல் *YOU TUBE*  settings ல் *Restriction  mode* ஐ *on* செய்யவும்,

 *இவையனைத்தையும் செய்த பின்  உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்*
  

Wednesday 18 July 2018

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

Monday 16 July 2018

தமிழ் ஜோக்ஸ்

தமிழ் ஜோக்ஸ்
【【◆】【◆】【◆】【◆】【◆】】

முதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவையாம்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

சுடுகாடு சுடுகாடு னு கேவலமா பேசதீங்க அங்க போறதுக்கு அவனவன் செத்துட்டு இருக்கான்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

ரேஷன் கார்டு photo 15 வருஷத்துக்கு முன்ன நம்ம எப்படி இருந்தோம் னு காட்டுது ஆதார் 15 வருஷத்துக்கு அப்புறம் எப்படியிருக்கோம் னு காட்டுது😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வீட்டுக்குள்ளே புருசனை வெளு வெளுன்னு வெளுத்தாலும் வெளியில் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்குறதுல எங்களை அடிச்சிக்க முடியாது😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

உப்பு திண்ணா தண்ணி குடிச்சுதான் ஆகனும் -பழமொழி
கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகனும்-பது மொழி😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

பட்டுச்சேலை கட்டுனா எல்லா பொண்ணுக்கும் எடுப்பா தான் இருக்கும் ஆனா அதை வாங்கித்தர புருசனுக்கு தான் கடுப்பா இருக்கும் 😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வாலிபங்கள் ஓடும், வயதாக கூடும் ஆனாலும் பிரச்சனை குறையாதது😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

நாம் அழுதால் நமக்கே பிடிக்காது நாம் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

மாசத்துக்கு ஒரு நாள் தான் சம்பளம் தராங்க ஆனா வேலை மட்டும் தினமும் தராங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் பொண்டாட்டிங்க திட்டியே கொல்லுவோம்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கவனிக்கப்படாமல் இறந்தவர்களுக்கு செய்யும் "திதியும்"
இறந்த பின் அரசாங்கம் தரும் "நிதியும்" பயனற்றது..!!

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான் வசதி இருக்கிறவன் நாய் மேய்க்கிறான்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும், நமக்கு நாமே போன் பண்ணும்போது பிஸியாதான் இருப்போம்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

யாரோ பெத்த புள்ளயை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க சோறு போடும் அந்த உயர்ந்த உள்ளம் தான் ஆண்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

அதிர்ஷ்டம் ambassador ல ஏறி வந்தா பிரச்சனை Flight ஏறி வருது ச்சை😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கல்யாணம் ஆன பின் ஒன்னு அடி விழும் இல்ல முடி விழும் அவ்ளோதாங்க வாழ்க்கை😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

காந்தி நாட்டுக்காக பாடு பட்டார் நாம காந்தி நோட்டுக்காக பாடு படுறோம்😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

கவர்மெண்ட் Exam லட்சம் பேர் எழுதுறாங்க ஆனா லட்சம் கொடுக்குறவங்க தான் select ஆகுறாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

இந்த உலகத்துல நல்லவங்க கெட்டவங்கனு யாரும் இல்ல நமக்கு புடிச்சா நல்லவங்க புடிக்கலனா கெட்டவங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

முட்டி மோதி வாழ்க்கையில முன்னேறலாம் னு பாத்தா ஒரே முட்டுல கீழே தள்ளிவிட்டுறாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

வாழ்க்கை சிக்கல் வந்தா நக்கலா பாத்து சிரிக்கணும் புரிதா😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருந்தா பிரஷர் வரும்னு சொல்றாங்க எதையும் சாப்பிடலைன்னா அல்சர் வரும்னு சொல்றாங்க😛😕

【【◆】【◆】【◆】【◆】【◆】】

Smile and laugh share with family and friends.😂😂😂😂😂😂😁😁😁


Thursday 12 July 2018

இஸ்லாத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் .

இஸ்லாத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் .

👉 *பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுக்கச் சொன்ன மார்க்கம்.*

********************************************

👉 *திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தமே அன்றி மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல என்று சட்டம் இயற்றிய மார்க்கம் இஸ்லாம்.*

********************************************

👉 *உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று உபதேசித்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

********************************************

👉 *தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று தாய்மைக்கு பெருமை சேர்த்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

********************************************

👉 *வரதட்சணை எனும் பகல் கொள்ளையைத் தடுத்து பெண்ணுக்கு மஹர் எனும் திருமண நன்கொடையை மாப்பிள்ளை தர வேண்டும் என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம்.

********************************************

👉 *மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் கணவன் மீது மனைவிக்கும் உள்ளது என்று பெண்களின் உரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.*

********************************************

👉.
*வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தந்த மார்க்கம் இஸ்லாம்.*

********************************************

👉 *மூன்று பெண் குழந்தைகளை பெற்று அவர்களை கண்ணியமாக வளர்த்து, நல்ல முறையில் திருமணம் முடித்துத்தரும் பெற்றோர்கள், சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்கள் என்று நன்மராயம் கூறியவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

********************************************

👉 *பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று தடை விதித்த இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*

********************************************

👉 *கணவனை இழந்த பெண்கள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விதவைகளுக்கு மறுதிருமணம் செய்ய வலியுறுத்தியவர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல் ).*

********************************************

👉 *வெறும் காட்சி பொருளாக பார்த்து ரசிக்கும் கயவர்களுக்கு மத்தியில், கண்ணியமான ஆடை (பர்தா) அணிய கற்றுத்தந்ந மார்க்கம் இஸ்லாம்.*


********************************************

Wednesday 11 July 2018

தமிழ் ஜோக்ஸ் மற்றும் பழமொழி .


தமிழ் ஜோக்ஸ் மற்றும் பழமொழி .
ஞாபகம் இருக்கா. 20 years back to school time.👼

🚪"டக்" "டக்" யாரது..?

😎 "திருடன்"
"என்ன வேனும் .?

🎊 " நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??

♻ " பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??

🍏" மா" பச்சை...
"என்னம்மா..?

💇 " டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?

💯 " கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?

🏠 " வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??

🏫 " மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?

🏢 " மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??

😔 " பழனி மொட்ட...!
"என்ன பழனி..??

🍪 " வடபழனி...!!
"என்ன வட..?

🐢 " ஆமை வட..!!
"என்ன ஆமை..?

🚣🏻 🐢 "கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!

🚣🏻 " த்திரி குளம்..!!
"என்ன திரி..??

🔥 " விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??

👊 " குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/

🏯🏣🏰 சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...

💃😿🏃 அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்

👬👭 நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்

🏠நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்

👕 வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்

✒✏ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக

👖👖இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்

என்னிடம் ✏ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

✒புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்

வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
📖 புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்

நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
🎨 மை தெளித்து உதவிய தருணம்

போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)

சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
💃🏃 துள்ளி குதித்திருப்போம்

👣எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.🚸🚸🚸

விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால்😿 வருத்தப்படுவோம்

🍞🍚🍣🍛🍔 அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

🕘 ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
🕓 நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!

****************************"""************

வரம்பு மீறிய வலியை கொடுப்பவர்கள் முன்னே....

ஒருபோதும் கதறி அழுதுவிடாதீர்கள்..!!

கலகலவென சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள்..!!

“அவர்கள் குழம்பிப்போகட்டும்”

###########################################₹₹₹

*பதினாறு வகையான அர்தங்கள்*
-------------------------------------------------

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.



10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!🌹🌹🌹
இனிய இரவு வணக்கம்....😌😌😌

ஜெ.விக்னேஷ்வரா
தஞ்சாவூர்🌷🌷
[11/07, 5:56 PM] ‪+91 80973 46104‬: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.🤔🤔🤔
----------------------------------------
`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!😊
----------------------------------------
`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!☹😕
----------------------------------------
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப்' பார்க்கிறார்கள்.😫 #ஐடி பூங்காக்கள்.
----------------------------------------
டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.😞😞😞
----------------------------------------
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.😜😜
----------------------------------------
மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும். 😒😒😣
----------------------------------------
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு. 🤣🤣🤣
----------------------------------------
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்😛
----------------------------------------
தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.😍😍
----------------------------------------
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!😃😄
----------------------------------------
எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை... 😭😭😭
----------------------------------------
வாழும் காலம் வரை
அன்பை விதைப்போம்
அறத்தை வளர்ப்போம்...🤝👍

----------------_-----------------+±-----
250 கிராம் எடை கொண்ட செல்பேசியையும், 300-400 கிராம் எடை கொண்ட அதற்கான பவர் பேங்கையும் எடுத்துச்செல்ல முடிகிற நம்மால் 30 கிராம் எடை கொண்ட ஒரு துணிப்பையை நாம் எப்போதும் எடுத்துப் போக முடியாதா என்ன?

நிச்சயம் முடியும். வாருங்கள் முன்னெடுப்போம். நம் சந்ததியினருக்கு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் அபாயம் இல்லாத ஒரு உலகத்தை விட்டுச் செல்வோம்... 🌱🌱 👶🏻👶🏻🐥🐟 இயற்கை வளம் காப்போம் by. ஓம்சக்திஸ்டோர் சக்திநகர் புங்கம்பட்டி-627415 / 8122331008
[11/07, 10:09 PM] ‪+91 98405 04597‬: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.🤔🤔🤔
----------------------------------------
`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!😊
----------------------------------------
`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!☹😕
----------------------------------------
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப்' பார்க்கிறார்கள்.😫 #ஐடி பூங்காக்கள்.
----------------------------------------
டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.😞😞😞
----------------------------------------
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.😜😜
----------------------------------------
மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும். 😒😒😣
----------------------------------------
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு. 🤣🤣🤣
----------------------------------------
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்😛
----------------------------------------
தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.😍😍
----------------------------------------
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!😃😄
----------------------------------------
எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை... 😭😭😭
----------------------------------------
வாழும் காலம் வரை
அன்பை விதைப்போம்
அறத்தை வளர்ப்போம்...🤝👍

முயற்சி என்பது விதை போல.. அதை விதைத்துக் கொண்டே இரு.. முளைத்தால் மரம்.. இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்.

****************"""""****************
சிங்கம் வாழும் காட்டில் தான் மான்களும் வாழ்கின்றன...

திமிங்கலம் வாழும் கடலில் தான் சிறு மீன்களும வாழ்கின்றன...

வாழ்க்கை என்பது ஏய்த்து பிடிப்பது அல்ல போராடி ஜெயிப்பது...

பயணத்திற்கு தயாரா..?


¸.•´¸.•*¨) ¸🌹•*¨) •°´💘❤💚
🌸(¸.•´🍃(¸.•´ .•´ 🍃


இறைவனின் சாந்தியும்
சமாதானமும் உங்கள் மீதும்

உங்கள் குடும்பத்தார் மீதும்
என்றென்றும் நிலவட்டுமாக
ஆமீன்

*பயணத்திற்கு தயாரா..?*

🌹🌹கேன்சலே ஆகாத பயணம்🌹🌹

💐💐என் இனிய சகோதர, சகோதரிகளே !💐💐

🌷🌷நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது.🌷🌷

🍂பயணிகளே கவனமாக தயாராகுங்கள்.🍂

🐾ஏறும் இடம் (Departure ) : துணியா.🐾

🎄இறங்கும் இடம் (arrival) : கபர்ஸ்தான்.🎄

👭புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.👭

✈கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது. விமானமும் கேன்சல் ஆக சான்சே இல்லை.✈

🚀Destination Air போர்ட் : டெர்மினல் 01 சொர்க்கம்.
டெர்மினல் 02 நரகம்.🚀

🗼இது ஒரு ட்ரான்சிட் AIR LINE.🗼

📖இந்த அதிநவீன ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம் அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.📖

🍃இந்த அதிநவீன எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது ஏர் இந்தியா கிடையாது.🍃

🌻ஆனால் இதன் பெயரோ ஏர் ஜனாசா.🌻

✈இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத்.🚀

🌲இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம்.🌲

🌳இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான்.🌳

🏇இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது.🏇

💝ஆனால் நமது அமல்கள் எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும்.💝

✈✈✈அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே.✈✈✈

👭👭இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லை ஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும். காசு மிச்சம்தானே?👪👪

🌿🌿இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுப்பதற்கோ சிரமபட தேவை இல்லை.🌿🌿

காசும் விரயம் இல்லை.

💐💐உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது.💐💐

🙋மேலும் மகிழ்ச்சிதானே?

ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed)🙋

🏃ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது.🏃

📒📒ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டைவைத்துகொள்ள மறந்தும் இருந்து விடாதீர்கள்.📒📒

📰உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு.📰

🎎பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர்.🎎

📄📄இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்த விதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது.📄📄

📓📓ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும்.📓📓

🎎ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் (மரணம்).🎎

✉அதிலே எல்லாருக்கும் ECR கட்டா
யம் ஸ்டாம்ப் உண்டு.✉

📈எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர் மதிற்பிக்குரிய
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.📈

🎎🎎அதை சரியாக கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது.🎎🎎

🎤🎤ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்.📢📢

💐உஷார் !

உஷார் !💐

🌹உஷார் !

உஷார் !🌷

🌻அந்த மூன்று கேள்விகள் !.

உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ்.

உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம்.💐💐

💐💐உன்னுடைய நபி யார் ?
விடை முகமது சல்லல்லாஹுவசல்லம்.🌷🌷

👪👪மறந்தும் இறந்து விடாதீர்கள். பதிலை சொல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்ததால் மட்டுமே பதிலளிக்க முடியும்.👪👪

✈சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம்.✈

🌹இன்ஷா அல்லாஹ் !.💐

✈நம்முடைய ஏர் ஜனாசா பயணம் நல்ல பயணமாக அமைய துவா செய்யும்.✈

📖யா_அல்லாஹ்!
எங்களுக்கு இந்த உலகத்திலும் நல்ல வாழ்க்கை தருவாயாக,
மறுஉலகத்திலும்(மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு) நல்ல வாழ்க்கையை தருவாயாக.
மேலும நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பாயாக💐💐
❥════

Monday 9 July 2018

முகம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை!

முகம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை!

முகம்மது நபி (ஸல்) தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம்!

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.

(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.

(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

(ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334,)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

(ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.

(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஸஹீஹுத் திர்மிதி516)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.

(திர்மிதி2159,3078)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்!

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)

                              (அல்குர்அன் 5:3).

அருமையான வாக்கியங்கள்

₹ ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை

₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

₹ நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

₹ இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

₹ வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

₹மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

₹ எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
 உனை_சீரழிக்கும் துரோகியை_விட ...
 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !.....

₹ அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...

₹பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........

₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது......

£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

£ வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

அருமையான வாக்கியங்கள்........ எனக்கு வந்தவை.......
உங்களுடன் பகிர்கிறேன்........

HOW WELL YOU KNOW YOUR HOLY QUR'AN


Plz share with your kids  →HOW WELL YOU KNOW YOUR HOLY QUR'AN←

1. How many verses are in Holy Qur’an?

A. 6235
B. 6666.✔
C. 6237
D. 6238

2. How many times is the word ‘Qur’an’ repeated in Holy Qur’an?

A. 67
B. 68
C. 69
D. 70✔

3. Which is the best drink mentioned in Holy Qur’an?

A. Honey
B. Milk✔
C. Water
D. Juice

4. The best eatable thing mentioned in Holy Quran is?

A. Honey✔
B. Milk
C. Water melon
D. Dabino

5. Which is the shortest Sura of Holy Qur’an?

A. Falaq
B. NASS
C. IKLASS
D. KAUSAR✔

6. The most disliked thing by Allah Ta’ala though Halal is?

A. Hajj
B. Divorce✔
C. Marriage
D. Murder

7. Which letter is used the most time in Holy Quran?

A. Wa
B. Ba'un
C. Alif✔
D. Qaf

8. Which letter is used the least in the Holy Qur’an?

A. Zaa✔
B. Maa
C. Taa
D. Laa

9. Which is the biggest animal mentioned in Holy Qur’an?
A. Fish
B. Whale
C. Elephant✔
D. Anaconda

10. Which is the smallest animal mentioned in Holy Qur’an?
A. Fly
B. Mosquito✔
C. Spider
D. Ant

Ans = Mosquito Q.2:26

11. How many words are in the smallest Sura (kausar) of Holy Qur’an?
A. 41
B. 42✔
C. 43
D. 44

12. Which Sura of Holy Quran is called the mother of Qur’an?
A. Baqara
B. Fatiha✔
C. Iklass
D. Yaseen

13. How many Sura start with Al-Hamdulillah?

A. Four
B. Five✔
C. 6ix
D. Se7en

Ans =B. Five; [ Fatihah, Anaam, Kahf, Saba & Fatir ]

14. How many Sura’s name is only one letter?
A. Two
B. Three✔
C. Four
D. Five

Ans = B. Three; [ Qaf, Sad & Noon ]

15. How many Sura start with word ‘Inna ‘?
A. Three
B. Four. ✔
C. Five
D. 6ix.

Ans =B. Four; [ Sura Fatha, Nuh,Qadr, Kausar ]

16. How many Sura are Makkahi (revealed in Mecca)?
A. 85
B. 86✔
C. 87
D. 88

17. and how suras many are Madni (revealed in Medina)?
A. 28✔
B. 27
C. 26
D. 25

18. Which Sura is from the name of tribe of Holy Prophet?
A. Lahab
B. Quraish✔
C. Hashim
D. Sab'i

19. Which Sura is called the heart of Holy Qur’an?
A. Iklas
B. Yaseen✔
C. Fatiha
D. Mulk

20. In which Sura is the name of Allah repeated only five times?
A. An'am
B. Hajj✔
C. Maryam
D. Mu'meen

21. Which Sura is the name of one Holy war?
A. Room
B. Ahzab✔
C. Fathi
D. Nasr

22. Which Sura is the name of one metal?
A. Ra'ad
B. Hadeed✔
C. Ahzab
D. HUD

23. Which Sura is called ‘Aroos-ul-Qur’an (the Bride of the Qur’an)?
A. Fatiha
B. Yaseen
C. Jinn
D. Rahman✔

24. Which Sura is considered as 1/3 of holy Qur’an?
A. Al-Ikhlas.✔
B. Falaq
C. Nass.
D. Fatiha

25. Which Sura was revealed twice?
A. Iklaas
B. Fatiha✔
C. Ayatul kursiyyu
D. Tauba

26. In which Sura is the backbiter condemned?
A. Munafiqun
B. Humaza✔
C. Nuhu
D. Zalzala

27. In which Sura is the name of Allah repeated in every verse?
A. Iklaas
B. Mujadala✔
C. Mumtahana
D. Fatiha

28. In which Sura does the letter ‘Fa’ did not appear?
A. Al-Imaran
B. Baqara.
C. fatiha✔
D. Nass

29. How many Suras starts with word ‘ Tabara Kallazi’
A. 4
B. 3
C. 2✔
D. 1

Ans= C. 2 [Mulk & Furqan]

30. Makkan Suras were revealed in how many years?
A. 13✔
B. 14
C. 15
D. 16

31. Medina Sura were revealed in how many years?
A. 8
B. 9
C. 10✔
D. 11

32. How many Suras start with word Qad?
A. 2✔
B. 3
C. 4
D. 5

 Ans= A. 2 [Mujadala & Momenoon]

33. Which Sura is related to Hazrat Ali?
A. Humaza
B. Tagabun
C. Adiyat✔
D. Balad

34. Which Sura has every verse ending with letter ‘Dal ‘?
A. Iqra'a
B. falaq
C. Balad
D. Iklas✔

35. Which Sura is revealed in respect of Ahle Bayt?
A. Luqman
B. Qamar
C. Layl
D. Insan✔

Ans = D. Sura Insan/Dahr

36. Which Sura every verse ends with letter ‘Ra'
A. Buruj
B. Dariq
C. Kausar✔
D. Shams

37. In which Sura is the creation of human beings mentioned?
A. Hajj
B. Hijr✔
C. Hadid
D. Humaza

Ans = B. Sura Hijr verse 26.

38. In which Sura are the regulations for prisoners of war mentioned?
A. Baqara
B. Al- Imran
C. Nisa✔
D. Insan

39. Which Sura deals with the laws of marriage?
A. Dalaq
B. Mujadala
C. Nisa✔
D. Mumtahana

40. In which Sura is the story of the worship of cow of Bani Israeel mentioned?
A. Baqara
B. Taha✔
C. Qasas
D. Kahfi

41. In which Sura is the law of inheritance mentioned?
A. Nisa.✔
B. Ma'ida
C. Noor
D. Anbiya

42. In which Sura is the Hijra of the Holy Prophet mentioned?
A. A'araf
B. HUD
C. Nuhu
D. Anfal✔

43. In which Sura are the 27 Attributes of Allah mentioned?
A. Hadeed✔
B. Rahman
C.Yunus
D. Yusuf

44. Which is the best night mentioned in Holy Qur’an?
A. Qamar
B. Qadar✔
C. Najm
D. Layl

45. Which is the best month mentioned in Holy Qur’an?
A. Rajab
B. Sha'abān
C. Ramadan✔
D. Hajj

46. How many words are in the longest Sura of Holy Qur’an?
A. 25500✔
B. 26600
C. 27700
D. 28800

47. How many times is Bismillahir Rahmaanir Raheem is repeated?
A. 116
B. 115
C. 114✔
D. 113

48. How many Sura start with Bismillahir Rahmaanir Raheem?
A. 116
B. 115
C. 114
D. 113✔

49. In what surah the first aya in the holy Qur'an revealed?
A. Fatiha
B. Muzammil
C. Mudassir
D. Iqra'a✔

50. What is the translation of 'Muzammil'?
A. The enshrouded One✔
B. The cloaked One
C. The feared One
D. The Runaway One

Whatever written of Truth and benefit is only due to Allah's Assistance and Guidance, and whatever of error is of me alone. Allah Alone Knows Best and He is the Only Source of Strength.

BarakAllāhu feekum

Wa Jazākumullāhu Khyran

May Almighty Allah accept our efforts and deeds in Ibadah and grant us all janatul firdaus

Share this with friends and family.

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு.

தமிழ்நாடு Tamil nadu registration number விபரங்கள் பின்வருமாறு:


TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை

■ நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!

● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639

● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No - 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000
18001 / 044- 28592828

● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599

● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424

● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445

● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )

● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377

● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639

● போலீஸ் SMS : 9500099100

● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832

● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103

● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100

● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155