Monday 23 August 2021

நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்:

 நபி (ஸல்) அவர்கள் தடுத்தவைகள்:

1,குளிப்பு கடமையானவர்கள் குளிக்காமல் சாப்பிடுவதை தடுத்தார்கள் காரணம் அது வறுமை ஏற்படுத்தும்.

2, பழங்கள் தரும் மரங்களுக்கு கீழும் மனிதர்கள் நிழலுக்காக ஒதுங்குகிற மரத்துக்குக்கீளும் சிறுநீர் இருப்பதை தடுத்தார்கள்.

3, இடது கரத்தால் சாப்பிடுவதையும் குத்தவைத்து உட்கார்ந்து சாப்பிடுவதையும்  தடுத்தார்கள்.

4, பெண்கள் ஜனாசாவைத் பின்  தொடர்வதை தடுத்தார்கள்.

5, உயிரினங்களை நெருப்பால் கரிப்பதை தடுத்தார்கள்.

6, மார்க்கத்தை திட்டுவதை தடுத்தார்கள்.

7, வீட்டில் குப்பை இருக்குமிடத்தில் தங்குவதை தடுத்தார்கள் ஏனென்றால் அது ஷைத்தான் தங்குமிடமாகும்.

8, கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியேறுவதை   தடுத்தார்கள் காரணம் அனுமதி இன்றி வெளியேறும் பெண்ணை வானத்தில் உள்ள மலக்குமார்கள் சபித்துக் கொண்டே இருப்பார்கள் தீய ஜின்களும் மனிதர்களும் அவர்களை சுற்றி சுற்றி வருவார்கள் எதுவரைக்கும் என்றால் அவர் வீடு வந்து சேரும் வரைக்கும்.

9, ஒரு பெண் தன் கணவர் அல்லாத பிறருக்காக அலங்கரிப்பதை தடுத்தார்கள்.

10, புறம் பேசுவதையும் அதைக் கேட்டு மகிழ்வது தடுத்தார்கள்.

11, வெள்ளி தங்கத்திலான பாத்திரத்தில் நீர் அருந்துவதை தடுத்தார்கள்.

12, மதுவையும் மதுவை செய்பவர்களையும் அதை குடிப்பவர்களையும் விற்பவர்களையும் வாங்குபவர்களையும் அதில் கிடைக்கும் லாபத்தில் உண்ணுபவர்களையும் இறைவன் சபிக்கிறான்.

13, வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் அதற்கு சாட்சியாக இருப்பதையும் அதை எழுதுவதையும் தடுத்தார்கள். இறைவன் குர்ஆனில் கூறுகிறான் வட்டி வாங்குபவர்கள் உண்ணுபவர்கள் அதற்கு சாட்சியாக இருப்பவர்களையும் அதை எழுதுபவர்களை இறைவன் சபிக்கிறான்.

14, உயிரனங்களின் முகத்தில் அடிப்பதைத் தடுத்தார்கள்.

15, ஒரு மனிதர் பிற மனிதரின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.

16, ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மர்மஸ்தானத்தை பார்ப்பதை தடுத்தார்கள்.

17, உணவிலும் பானத்திலும் ஊதுவதை தடுத்தார்கள். சஜ்தா செய்யக்கூடிய இடத்தை ஊதுவதையும் தடுத்தார்கள்.

18, மிருகங்கள் கட்டி போடப்படும் தொழுவத்தில் தொழுவதை தடுத்தார்கள்.

19, தேனீக்களை கொல்வதை தடுத்தார்கள்.

20, அல்லாஹ் அல்லாதவர்களை கொண்டு சத்தியம் செய்வதை      தடுத்தார்கள்.

21, வெள்ளிக்கிழமை இமாம் மிம்பரில் ஏறி குத்பா ஓதுகின்ற போது பேசுவதை தடுத்தார்கள்.

22, சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும் நேரத்திலும் தொழுவதை தடுத்தார்கள்.

23, நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் அய்யாமுத் தஷ்ரீக் இந்த நாட்களில் நோன்பு வைப்பதை தடுத்தார்கள்.

24, மிருகங்கள் நீர் குடிப்பது போன்று ஒரேயடியாக மூச்சு விடாமல் குடிப்பதை தடுத்தார்கள்.

25, மக்கள் பயன்பாட்டில் உள்ள கிணற்றில்            உமில் வதை தடுத்தார்கள்.


அல்லாஹ்வும் ரசூலும் எதை தடுத்தார்களோ அதை விட்டு விடுவதற்கும் எதை எடுத்து நடக்க சொன்னார்களோ அதை எடுத்து நடப்பதற்கும் அல்லாஹ் தௌபீக் செய்வானாக!!!ஆமின் யாரப்பல் ஆலமீன்!

Saturday 26 June 2021

மரண இத்தா குறித்த சட்டங்கள்

 மரண இத்தா குறித்த சட்டங்கள்

⚫கணவன் இறந்துவிட்ட பெண், கர்ப்பிணியாக இல்லாவிட்டால் பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

⚫ கர்ப்பிணியாக இருந்தால் குழந்தைப் பிறக்கின்ற வரை இத்தாவின் காலம் நீடிக்கும்.

⚫ மேலும் கணவன் இறந்த சில வினாடிகளில் குழந்தை பிறந்து விட்டாலும் கூட இத்தா முடிந்துவிடும்.

⚫ இத்தாவில் பிறை கணக்கையே கடைப்பிடிக்க வேண்டும். முதல் பிறை அன்று கணவன் இறந்திருந்தால், பிறை கணக்குப்படி நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.மாத இடையில் கணவன் இறந்திருந்தால், மாதம் ஒன்றுக்கு 30 நாட்கள் வீதம் கணக்கிட்டு,130 நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

🚫கணவன் இறந்த சில பெண்கள் வெறும் 40 நாட்கள் மட்டுமே இத்தா மேற்கொள்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும்.

*மரண இத்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்கள்*

1️⃣ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

 *சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லலாம்.

  *உணவுக்கே வழி இல்லாத ஏழைப் பெண்ணாக இருப்பின், சம்பாத்தியத்திற்காகப் பகலில் வெளியே சென்று வரலாம். இரவில் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்.

  *உணவுப் பொருட்களை வாங்கித் தர ஆள் இல்லையெனில், உணவுப் பொருட்களை வாங்கி வர பகலில் வெளியே செல்லலாம்.

2️⃣ தன்னையும் தன்னுடைய ஆடையையும் எந்தவிதத்திலும் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.

  *பவுடர் அடித்துக் கொள்வது மேக்கப் செய்வது கூடாது.

3️⃣ தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவது கூடாது.

*சாதாரண கவரிங் வளையல்களையும் அணியக்கூடாது.

4️⃣ சுர்மா இடுவது கூடாது.

  *கண் வலிக்காக மருத்துவ அடிப்படையில் சுர்மா இடுவது கூடும்.

5️⃣ மேனியிலும் ஆடையிலும் வாசனைப் பூசுவது கூடாது.

*குறிப்பு*கணவனைத் தவிர  தந்தை, மகன், சகோதரர் போன்றவர்கள் மரணித்தால் மூன்று நாட்களுக்கு மேல் துக்க அனுஷ்டானங்களை மேற்கொள்வது கூடாது.

*மரண இத்தாவின் பெண்களுக்கு ஆகுமான காரியங்கள்*

1️⃣ குளிப்பது.

2️⃣ நகம் வெட்டுவது.

3️⃣ அழுக்குகளை நீக்குவது.

4️⃣ சாதாரணமாக தலை வாருவது.

5️⃣ அகற்றவேண்டிய முடிகளைக் களைவது.

6️⃣ வீட்டையும் துணிமணிகளையும் விரிப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வது.

7️⃣ ஓர் அறையில் தனியாகத் தூங்குவது.

8️⃣ வீட்டிற்குள் இருந்த படி வெளிப் பகுதியையும் வானத்தையும் பார்ப்பது.

9️⃣ மரணித்த கணவரை பார்த்து தரிசிப்பது.

🔟 திருமணம் முடிப்பது ஹராமான தந்தை, மகன், உடன் பிறந்த சகோதரன் இன்னும் மருமகன் ஆகிய ஆண்களைப் பார்ப்பது இன்னும் பேசுவது.

  இவை அனைத்தும் கணவன் மரணித்த இத்தாவில் இருக்கும்  பெண்களுக்கு ஆகுமான காரியங்களாகும்.

*குறிப்பு* இத்தாவின் காலம் - நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்காது.

  எனவே அழகான மங்களகரமான ஆடைகளை அணிவதும், தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவதும் இனி அந்தப் பெண்மணிக்குக் கூடும்.

  *கணவனை இழந்து வாடும் கைம்பெண்களுக்கு அல்லாஹ் மேலான நற்கூலி களையும் நல்ல பகரத்தையும் வழங்குவானாக!*

🕌 *புரசை ஜூம்ஆ மஸ்ஜித்* இமாம் ஷாஹுல் ஹமீது காஷிஃபி

Monday 7 June 2021

உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!

 இறைவனின் சாந்தியும்

சமாதானமும் உங்கள்  மீதும்


உங்கள்  குடும்பத்தார்  மீதும்

என்றென்றும்  நிலவட்டுமாக

ஆமீன்

❖❑❑❑❑❑❑❑❑❑❑❑❖


*உத்தம தூதரின் உன்னத வாழ்வை உலகறியச் செய்வோம்!*


*ஜாதியை* ஒழித்து காட்டியவர்.


*நிறவெறியை* அழித்து காட்டியவர்.


*இன வெறியை* விரட்டி காட்டியவர்.


*மொழி வெறியை* நீக்கி காட்டியவர். 


*பெண்ணடிமைத்தனத்தை* ஒழித்து கட்டியவர்.


*பெண் சிசுக் கொலையை* தடுத்து காட்டியவர்.


*கடவுளின் பெயரால்* வயிறு வளர்ப்பதை தடுத்து காட்டியவர்.


*தீண்டாமையை* முற்றிலுமாக  ஒழித்து கட்டியவர்.


*அடிமைத்தனத்தை* பிடிங்கி எறிந்தவர்.


*மனிதனை மனிதன்* வஞ்சக புகழ்வதை தடுத்தவர்.


*சிலைகள்* வைக்கும் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளி வைத்தவர்.


*தனக்கே* ஆனாலும் சிலைவைக்க கூடாது என்று வழிகாட்டியவர்.


*மோசடி* செய்து வாழ்கை நடத்துவர்களை திருத்திகாட்டியவர்.


*விபச்சாத்தை* ஒழித்து காட்டியவர்.


*வட்டியை* அழித்து காட்டியவர்.


*குலதெய்வ,* பலதெய்வ முறையை நீக்கி ஒரு தெய்வ முறையை நிலைநிறுத்தி காட்டியவர்.


*கடவுளுக்கு உயிர்பழி* கொடுக்கும் முறையை மாற்றிகாட்டியவர்.


*துறவறம்* கடவுளின் பெயறால்  செல்வதை தடுத்து காட்டியவர்.


*குடும்பத்தை* கவனிப்பதே கடவுளுக்கு செய்யும் மிக பெறிய தொண்டு என்றவர்.


*ஏற்ற தாழ்வு* கடவுளின் ஆலையத்தில் கிடையாது. யாரும் முதலில் உள்ளே செல்லலாம்  என்றவர்.


*ஏற்ற தாழ்வு* இல்லாமல்

யாரும் கடவுளை தொழுலாம் என்றார்.


*கடவுளின்* ஆலையத்தில் நடத்தப்படும் தீண்டாமையை உடைத்தெறிந்தவர்.


*தீமைகளை* வெறுப்பதே கடவுளின் மீது கொண்டுள்ள அன்பு என்றவர்.


*உள்ளத்தை* கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய வீரம் என்றவர்.


*குலப்பெருமை* கூடாது என்றவர்.


*மனிதர்கள்* அனைவரும் சமம் என்றவர்.


*நல்ல மனிதனே* உயர்ந்த மனிதன் என்றவர்.


*ஒருவரை ஒருவர்* கொலை செய்வது கடவுளை நம்பாதவர்கள் செய்யும் செயல் என்றவர்.


*ஏற்ற தாழ்வு* பார்க்காமல் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னவர்.


*அரசு பணத்தை* கொள்ளையடிப்பதை தடுத்து காட்டியவர்.


*மன்னராக வாழ்ந்து;* ஏழையாக மரணித்தவர்.


*மன்னராக* இருந்தும்

அரண்மனைகள் வேண்டாம் என்றவர்.


*மன்னராக* இருந்தும் பாதுகாப்புக்கு கூலிப்படைகளை வைத்து கொள்ளாதவர்.


*அரசு* பணத்தை வீன் செய்யாதவர்.


*தன்னுடைய* சொத்துக்களுக்கு மக்களை வாரிசாக்கியவர்.


*தன்* நாட்டு சிறுபான்மை இன மக்களுக்கும்

நீதியை சரியாக வழங்கியவர்.


*ஆன்மீகத்தை* சொல்லி பணம் சம்பாதிக்காதவர்.


*ஆன்மீகத்தை* சொன்னதால் தன் செல்வங்களை இழந்தவர்.


*வியாபாரத்தில்* நடக்கும் மோசடியை ஒழித்து காட்டியவர்.


*இப்படி* எண்ணில் அடங்கா புரட்சிகளுக்கு உண்மையான சொந்தக்காரர்.


யார் இவர்..!!


1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபு பாலைவனத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் தான் 


முகம்மத் ( ஸல் ) என்ற *மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள்.*


MuhammadMercyForMankind

SpreadTeachingsOfProphet

Sunday 6 June 2021

குர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு பார்வை....

.             ╲\


இறைவனின் சாந்தியும்

சமாதானமும் உங்கள்  மீதும்


உங்கள்  குடும்பத்தார்  மீதும்

என்றென்றும்  நிலவட்டுமாக

ஆமீன்


*┉̶̶┉̶̶̶̶┉̶❖☆͜͡❖̶┉̶̶┉̶̶┉̶̶┉̶̶┉̶̶┉*


*குர்ஆன் இறைவேதமென பறைசாற்றும் வசனங்கள் ஒரு பார்வை....*


பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை - 86:11


மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற அறிவியல் விளக்கம் - 4:56


விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை - 6:125


பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற உண்மை - 2:36, 7:24, 7:25


ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை - 16:79, 67:19


விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை - 17:37


பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90


பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6


பெரு வெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30


கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14


நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18


கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மை - 25:53, 27:61, 35:12 55:19,20


காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12


வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41


பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40


பெரு வெடிப்புக்குப் பின் தூசுப் படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11


மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன என்ற உண்மை - 6:98, 50:4, 71:17


விண்வெளிப் பயணம் சாத்தியமே என்று அறிவித்தல் - 55:33-35


விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4


உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2


தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது என்ற அறிவியல் - 16:69


கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன என்ற அறிவியல் கருத்து - 24:40


அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளும் அற்புதம் - 13:8


பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில் தான் உள்ளன என்ற விஞ்ஞானக் கூற்றை முன்பே தெரிவித்தது - 96:15


காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்தையும் அழித்து விடும் என்ற அறிவியல் உண்மை - 51:41,42


கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32


விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7


வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்று கூறும் வானியல் விஞ்ஞானம் - 51:7


பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:10


சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5


சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2


வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற அறிவியல் விளக்கம் - 51:47


உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற உண்மை - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49


உலக வெப்ப மயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற அறிவியல் முன்னறிவிப்பு - 13:41, 21:44


வான் மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43


அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பது பற்றிய முன்னறிவிப்பு - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32


"இருள்கள்" என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலை நீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலை நீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11


பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு - 2:259


குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50


ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42


இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது என்பது பற்றி அறிவியல் உண்மை - 57:25


படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32


பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துகிறது. - 41:9,10


நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66


மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31


வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள் தான் என்று அறிவித்தது - 9:36


கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153

முன்னறிவிப்புகள்

கஃபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு - 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4


மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு - 9:28


நபிகள் நாயகம் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் - 5:67


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் என்பவனது உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 10:92


குதிரை, ஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன் அறிந்திருந்த காலத்தில், நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 16:8


மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு - 73:20


முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகத்தின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 17:76, 54:45


நபிகள் நாயகம் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாத நேரத்தில், "சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி கொள்ளும்" என்ற முன்னறிவிப்பு - 30:2,3,4


நபிகள் நாயகம் அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு - 28:85


பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு - 28:57


ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு - 18:9


முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு - 111:1,2


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின் போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 11:44, 29:15, 54:15


மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 33:60


*குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு...*

_____________


Thursday 20 May 2021

தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் (18) பதினெட்டு வகையான உயர்ந்த சிறப்புகள்

 🌾 *بسم الله الرحمن الرحيم*🌾



🔖 *தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் (18) பதினெட்டு வகையான உயர்ந்த சிறப்புகள்* 🔖



✅ *சரிபார்த்தவர்:* 

*ஹஜ்ரத் ஹபீப் முஹம்மது தாவூதி, நத்வி அவர்கள்*


🖋️ *தொகுத்தவர்:* முஃப்தி சைபுதீன் ஹஸனி (மேலப்பாளயம்)



கொரோனாவினால் ஊரடங்கு ஏற்பட்டு மக்கள் அடையும் கஷ்டங்களை யாரும் அறியாமல் இருக்க முடியாது.

ஏழை எளிய மக்கள் அதிலும் குறிப்பாக தினக்கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து அதன் மூலம் வாழ்பவர்களின் நிலை ஊரடங்கினால் எவ்வளவு மோசமாகும் என்று சிந்தித்தாலே உள்ளம் வலிக்கிறது.


இது போன்ற இக்கட்டான சூழ்நிலையின் போது 

ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கவனித்தில் கொண்டு நாம் அவர்கள் மீது இறக்கப்பட்டு அம்மக்களுக்கு பண ரீதியான சில உதவிகளை செய்தால் அல்லாஹ்வும் நம் மீது இறக்கம் காட்டுவதுடன், பதினெட்டு வகையான சிறப்புகளையும் கொடுக்கிறான். 


அந்த பதினெட்டு சிறப்புகளையும் கீழே பட்டியலிடுகிறேன்


*ஆனால் அதற்கு முன் ஒரு விஷயம்:*


நாம் செய்யக்கூடிய தர்மம் அல்லாஹுடைய பிரியத்தை பெருவதற்காக மட்டும் இருக்க வேண்டும். 

தர்மம் செய்த விஷயத்தை சொல்லிக்காட்டி விடவும் கூடாது, 

தர்மம் செய்யப்பட்ட ஏழையின் உள்ளம் வருத்தம் ஏற்படுமாறு நடந்து கொள்ளவும் கூடாது.


குறிப்பு: ஜகாத் இல்லாமல் பொதுவான தர்மங்களை மாற்று மத ஏழைகளுக்கும் கொடுக்கலாம். இஸ்லாம் அனுமதித்துள்ளது. 

உங்களின் இந்த உதவிக்கும் தர்மம் செய்த சிறப்புகளே கிடைக்கும். 


அம்மாற்று மத ஏழை மக்களுக்கும் முஸ்லீம்களின் மீது அசைக்க முடியாத ஒரு நல்லெண்ணம் ஏற்படுத்துவதற்கு இந்த தர்மம் சிறந்த காரணமாக இருக்கும்.



☄️ *தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்*


1️⃣ *அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்*

📘 ஆதாரம்: நூல்: மராஸீலு அபீ தாவூது: ஹதீஸ் எண்: 105


2️⃣ *அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்*

📘 ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 271


3️⃣ *கஷ்டங்கள், முஸீபத்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்*

📘 ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 2863


4️⃣ *அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது*

📘 ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 22962


5️⃣ *அவருக்காக ஒரு மலக்கு துஆ செய்கிறார்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1442


6️⃣ *கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.*

📘 ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதி: ஹதீஸ் எண்: 664


7️⃣ *கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.*

📘 ஆதாரம்: நூல்: அல் முஃஜமுல் கபீர்: ஹதீஸ் எண்: 787


8️⃣ *அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.*

📘 ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ: ஹதீஸ் எண்: 664


9️⃣ *திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்.*

📘 ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 262


1️⃣ *ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹுடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 660


1️⃣1️⃣ *அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1016


1️⃣2️⃣ *ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை* 

*(எ.கா: இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி: ஹதீஸ் எண்: 1897


1️⃣3️⃣ *அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்.*

📘 ஆதாரம்: சூரத்துல் ஹதீத்: வசனம் எண்: 7


1️⃣4️⃣ *அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்.*

📘 சூரத்துல் பகரா: வசனம் எண்: 245


1️⃣5️⃣ *அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : ஹதீஸ் எண்: 2959


1️⃣6️⃣ *உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்.*

📘 ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது: ஹதீஸ் எண்: 7576


1️⃣7️⃣ *தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்.*

📘 ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 3


1️⃣8️⃣ *அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்.*

📘 ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்: ஹதீஸ் எண்: 1029


அல்லாஹு தஆலா நமக்கும் இந்த பதினெட்டு சிறப்புகளையும் அடையச் செய்வானாக... ஆமீன்



✨✨✨✨✨✨✨