Monday 16 December 2019

பழமொழி விளக்கம்:


பழமொழி விளக்கம்:


1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.* அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

*2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.*'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

*3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம*்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

*4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'*

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

*5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.*'

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

*6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'*

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
*7.  'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'*

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

*8.  'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'*

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
*9.  முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'*

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

*10.  தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'*

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

*11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'*

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

*12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'*  இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

படித்ததில்.  பிடித்தது...

Tuesday 10 December 2019

வாடகை ஒப்பந்த பத்திரம் - Rental Agreement

வாடகை ஒப்பந்த பத்திரம் - Rental Agreement

வாடகை ஒப்பந்த பத்திரம்

--------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai திரு Raja அவர்கள்
1வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான் -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல் வசித்து வரும் திரு/திருமதி ------------------------
அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 23 சேதுபதி நகர், chennai முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு
கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் ---------------------(ரூபாய் ------------------------------------------------------------------------------------------------------------------------------)
பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று ----------------------------------------------------- ரூபாய் -------------------------------------------------------- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி
தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
  மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய் ------------- பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது ------------------------- தேதி முதல் ------------------------------- தேதி வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு
கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.



வாடகை சொத்து விபரம்.

23, முதல் தளம்,  சேதுபதி நகர், chennai-600026,


1வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)


2வது பார்ட்டி
(வாடகைதாரர்)



சாட்சிகள்


1)




2)

Friday 4 October 2019

வெற்றியின் அடிப்படைகள் :

*வெற்றியின் அடிப்படைகள் :*
===========  ============
                                                         
 1.எல்லோரையும் வாழ்த்தப் பழகுங்கள்.

2.எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்.

3.அன்றாட காரியங்களை நிறைவேற்றப் பழகுங்கள்.

4.நன்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5.பிறரிடம் தர்க்கம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

6.நல்ல எண்ணங்களுடன் உங்களது  நாளைத் தொடங்குங்கள்.

7.இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்க பழகிக் கொள்ளுங்கள்.

8.இப்பொதுதே எதையும் செய்துவிடுகிற பழக்கத்தைக் கொண்டிருங்கள்.

9.உலகம் போட்டி நிறைந்தது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

10.உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுய மதிப்பினை வளர்த்துக் கொளுங்கள்.

11.அவசியம் செய்யவேண்டிய காரியங்களை விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்.

12.இவ்வுலகத்தில் நல்லதும் கெட்டதும் இருந்தே தீரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Sunday 29 September 2019

நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...

நபிகள்_நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் உபதேசங்கள்...
------------------------------
🎀01. Fajr மற்றும், அசர் மற்றும் மக்ரிப், மக்ரிப் மற்றும் இஷா இடையே தூங்க வேண்டாம்.
------------------------------
🎀02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.
------------------------------
🎀03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
---------------------------------
🎀04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
------------------------------
🎀05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
---------------------
🎀06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
------------------------------
🎀07. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
------------------------------
🎀08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது.
------------------------------
🎀09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
------------------------------
🎀 10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
------------------------------
🎀11. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
------------------------------
🎀12. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
------------------------------
🎀13. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
------------------------------
🎀14. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
------------------------------
🎀15. Azan மற்றும் Iqamath இடையே பேச வேண்டாம்.
------------------------------
🎀16. கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.
------------------------------
🎀17. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
------------------------------
🎀18. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
------------------------------
🎀19.நடந்து செல்லும்போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்.
------------------------------
🎀20. நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.
------------------------------
🎀21. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
------------------------------
🎀22. எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது.
------------------------------
🎀23. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
------------------------------
🎀24. மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
------------------------------
🎀25. தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
------------------------------
🎀26. உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
------------------------------
🎀27. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
------------------------------
🎀28. உணவை குறைக்கூற வேண்டாம்.
------------------------------
🎀29. பெருமை வேண்டாம்.
------------------------------
🎀30. பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காதீர்கள்.
------------------------------
🎀31. விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.
------------------------------
🎀32. வறுமையின் போது பொருமை காக்கவும்.
------------------------------
🎀33. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
------------------------------
🎀34. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
------------------------------
🎀35. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
------------------------------
🎀36. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
------------------------------
🎀37. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
------------------------------
🎀38. ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு தேடுங்கள்.
------------------------------
🎀39. இருட்டில் சாப்பிட கூடாது.
------------------------------
🎀40. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .‼‼‼‼‼‼‼‼‼‼
*முடியுமான வரை பகிருங்கள்.

Saturday 28 September 2019

சுவர்கத்தின் சுருக்கமான பயணம்

#சுவர்கத்தின் சுருக்கமான பயணம்.
முழுமையாக படியுங்கள்
இத்தகைய சிறப்பு மிக்க சுவனம் எட்டு ஆகும்.

1. தாருல் ஜலால் ஒளியாலும் !

2. தாருல் ஸலாம் செம்மனியாலும் !

3. தாருல் கரார் பவளத்தாலும் !

4. ஜன்னத்துல்  அத்ன் மரகதத்தாலும் !

5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும் !

6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும் !

7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும் !

8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும் படைக்கப்பட்டு இருக்கிறது !

     ஆதாரம் : திர்மதி

பத்து வகையான மனிதர்களை சுவனம் தேடுகின்றன.

1. நள்ளிரவில் இரண்டு ரக அத் தொழுபவர் .

2 கோடைகாலத்தில்   நோன்பு நோற்பவர் .

3. முதல் தக்பீரை ஜமாத்துடன் தவறவிடாதவர் .

4. இரவில் அதிக நேரம் தூங்காதவர் .

5. உண்மையை அன்றி வேறெதனையும் பேசாதவர் .

6. தம் மனைவி மக்களிடம் இரக்கம் உடையவர் .

7. எப்பொழுதும் உளுவுடன் இருப்பவர்கள் .

8. மது அருந்தாமலும் ஹராமான செயல்களை செய்யதிருப்பவர் .

9. எப்பொழுதும் அண்ணல்  நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொன்டிருப்பவர் .

10. பசித்தவனுக்கு உணவளிப்பவர் தாகமுள்ளவருக்கு தண்ணீர் புகட்டியவர்.

இவர்களை சுவனம் தேடுகின்றது .
 
சுவனம் செல்லாத பத்து பேர்கள்

1. இரக்கம் இல்லாதவர் .

2. கோள் சொல்பவன் புறம் பேசுவபன் .

3. பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவன் .

4. தன் மனைவியைக் கூட்டிக்குடுப்பவன் .

5. மோசடி செய்வபன்.

6. இசைக்கறுவி இசைப்பவர் .

7. பிறர் கேட்கும் மன்னிபை எற்காதவர் .

8. ஆடை அணிந்த நிர்வாணிகள்

9. உலகில் மீது  அதிகம் ஆசை உள்ளவன் .

10. தன் தாய் தந்தையரை துன்புறுத்துபவன்.

    ஆதார நூல்: முநப்பிஹாத்

நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் )அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஆறு விஷயங்களைச் செய்வதாக எனக்கு உறுதி அளித்தால் நான் உங்களுக்கு சுவர்கத்தை பெற்றுத்தர உறுதியளிப்பேன்.

1. பேசினால் உன்மையே பேசுங்கள் .

2. வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்.

3. அமானிதத்தைப் பாதுகாத்து வாருங்கள்.

4. நாவையும் மர்ம உறுப்பையும் பாதுகாதுக்கொள்ளுங்கள்.

5. தீமையை விட்டும் உங்கள் பார்வைத் திருப்பிக்கொள்ளுங்கள்.

6. உங்கள் கரங்களை தீமையை விட்டும் தடுத்துக்கொள்ளுங்கள்.
 
   ஆதாரம் : மிஷ்காம் பக்கம் 415

சுவர்கவாசிகளுக்கு அல்லாஹுத்தாலா சுவர்கம் நுழையும்  மறுமையில் உலகம் ஒரு ரொட்டியாக மாறிவிடும்

அதனை அல்லாஹ் தன் சக்திமிக்க கைகளால்  சுவர்கவாசிகலுக்கு புரலச்செய்வான்.

அல்லாஹுத்தால மீன் இறைச்சியும் மாட்டு இறைச்சியும் சுவனவாசிகளிக்கு கறியாக கொடுப்பான்

அந்த மீனின் ஈரலை மட்டும் 80.000 பேர் புசிப்பார்கள்

ஆதாரம் : புகாரி முஸ்லிம் .

சுவனத்தினுல் போகும் முதல் கூட்டத்தினரின் உருவங்கள் முழுமதி போல் ஒளிரும்.

இரண்டாம் கூட்டத்தினரின் உருவம் விண்மீன் போன்று ஒளிரும்.

சுவனத்தில் எச்சில் மலம் சிறுநீர் தும்மல்  இருமல் சளி நோய் நொடி எதுவும் கிடையாது

சுவர்கத்தில் பாத்திரங்கள் வெள்ளியாலும் தங்கத்தாலும் இருக்கும்

அங்கு தலை சீவும் சீப்பு தங்கமாகவும் அவர்களின் நறுமணப்புகை சந்தனக்கட்டையாகவும் வியர்வை கஸ்தூரி மணமுள்ளதாகவும் இருக்கும். 
         ஆதார நூல் : புகாரி முஸ்லிம்.

நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

 சுவனவாசிகலுக்குப் பணிவிடை செய்ய அழகிய சிறுவர்கள் இருப்பார்கள்.

மேலும் அவர்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஹூருல் ஈன் எனும் கண்ணழகிகள் இருப்பார்கள்.

அவர்கள் ஆனிமுத்துக்களைப் போல் இருப்பார்கள். அந்த ஹூருல் ஈன்கள் இந்த உலகை எட்டிப்பார்த்தால்,,,

இந்த பூமி வெளிச்சமாகவும் நறுமணமாகவும் ஆகிவிடும் அந்த ஹூருல் ஈன் பெண்களின் எச்சில் கடலில் பட்டால் கடல் தேனாக மாறிவிடும்.

 சுவர்கத்தில் ஒவ்வெரு ஆணுக்கும் மானிடப்பெண்கள் 70 பேரும் ஹூருல் ஈன்கள் 30 பேரும் மனைவியாக்கி கொடுக்கப்படும்
     ஆதாரம் : திர்மதீ

சுவர்க்கவாசிகள் வாரத்தில் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் தங்களின் உற்றார் உறவினர்களை சந்திப்பார்கள்.

1. பிள்ளைகள் சனிக்கிழமையன்று தங்கள் பெற்றோரைச் சந்திப்பார்கள்.

2. ஞாயிற்றுக்கிழமையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திப்பார்கள்.

3. திங்கட்கிழமையன்று மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைச் சந்திப்பார்கள்.

4. செவ்வாய்கிழமையன்று ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களைச் சந்திப்பார்கள்.

5. புதன்கிழமையன்று நபிமார்களை தனது உம்மத்தினர் சந்திப்பார்கள் .

6. வியாழன் அன்று உம்மத்தினரை நபிமார்கள் சந்திப்பார்கள்.

7. வெள்ளிக்கிழமையில் சுவனவாசிகள் அனைவரும் தங்கள் இறைவனைச் சந்திப்பார்கள் என்று நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்)  அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் )
அவர்கள் கூறினார்கள்  சுவர்கத்தில் எப்போதும் ஒரு பாடல் ஒளித்துக்
கொண்டே இருக்கும்

நாங்கள் என்றும் வாழ்ந்து வருவோம்
நாங்கள் அழிந்து விடமாட்டோம்

நாங்கள் எப்பொழுதும் சுகபோகத்தில் இருப்போம்
நாங்கள் கவலை அடைய மாட்டோம்
நாங்கள் எப்பொழுதும் திருப்தியுடன் இருந்து வருவோம்
என்று பாடிக் கொண்டிருப்பார்கள்

சுவனத்தில் பல்வேறு பிரம்மாண்டமான மரங்கள் இருப்பினும் இம்மை மறுமை எல்லை இல்லா மரமாகும்.

இதன் கனிகள் ஒவ்வொன்றும் யானைக்காது போன்றும் அதிக ஒளி வீசக்கூடியதாகவும் ஒவ்வொரு கனியிலும் எழுபத்திரண்டு வகையான சுவையிருக்கும் .

அதன் வேர்ப்பகுதியில் இருந்துதான் சுவனத்தின் நதிகள் யாவும் ஊற்றெடுக்கும்

சுவனத்தில் எண்ணற்ற அரண்மனைகள் இருக்கும் அவை ஒவ்வொன்றிலும் ஒரே மாணிக்கத்தினால் ஆன 70.000 அறைகள் இருக்கும். 

ஒவ்வொரு சுவர்கவாசிக்கும் இது போன்ற கட்டிடங்கள் பல இருக்கும்

   ஆதாரம் : புகாரி முஸ்லிம்

நபி (ஸல்லல்லாஹூ  அலைஹி  வஸல்லம் )அவர்கள் கூறினார்கள்.

சுவர்கவாசிகலுக்கு பயணம் செய்ய விரும்புவீராயின் சிவப்பு நிறப் பவளக் குதிரையில் ஏற்றப்படுவீர்.

அது நீர் நாடிய இடத்திற்கு உம்மை பறந்து சுமந்து  கொண்டுச்
செல்லும் சுவர்கவாசியின் ஆடை பட்டினாலும் நவரத்திங்களாளும் இழைத்து உருவாக்கப்பட்டிருக்கும்.

சுவனத்தில் நிச்சயமாக கடைத்தெரு ஒன்று உள்ளது அங்கு விற்பனையோ வாங்குவதோ கிடையாது

ஆண்களின் மாற்றமும் பெண்களின் தோற்றங்கள் தான் இருக்கும்

  ஆதாரம் :  திர்மதி

அல்லாஹ் சுவர்வாசிகளை அழைப்பான் சுவர்கவாசிகள் அல்லாஹ்வுக்கு முன்னால் ஒன்று கூடுவார்கள்

அப்போ அல்லாஹ் சுவர்கவாசிகளை பார்த்து கேட்பான் திருப்தி அடைந்தீர்களா  சுவர்கவாசிகள் சொல்வார்கள்.

யா ரப்பே நீ யாருக்கும் கொடுக்காததையல்லவா  எங்களுக்கு கொடுத்திருக்கிறாய் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம்

அல்லாஹ் கூறுவான் இதைவிட ஒன்று நான் உங்களுக்கு அறிவிக்கவா.

சுவர்க்கவாசிகள்  சொல்லுவார்கள் இதை விட ஒன்றா..... அல்லாஹ் கூறுவான் என் பொருத்ததை உங்கள் மீது ஹலாலாக்குகிறேன்.

இதற்கு மேல் உங்கள் மீது நான் கோபபட மாட்டேன் என்று சொல்லிவிட்டு

அல்லாஹ் தனக்கு முன்னால் உள்ள எழுபது திரையையும் அகற்றுவான்.

#சுவர்க்கவாசிகள் யாருக்காக தொழுதார்களோ யாருக்காக நோன்பு வைத்தார்களோ யாருக்காக ஜகாத் கொடுத்தார்களோ,,,

யாருக்காக இரவில் எழுந்து தொழுதார்களோ யாருக்காக நல்லமல்கள் செய்தார்களோ யாரை அஞ்சி வாழ்ந்தார்களோ 

அந்த அல்லாஹ்வை அந்த இரண்டு கண்களால் சுவர்க்கவாசிகள் பார்ப்பார்கள் அதைவிட சுவர்க்கத்தில் எதும் ஈடாகாது.

யா அல்லாஹ் நகரத்தை விட்டு பாதுகாத்து இந்த உலகில் உண்மை வாழ்கை வாழ்ந்து,,,

சுவர்க்கத்தில் நுழைய வைத்து உன்னை இந்த இரண்டு கண்களால் பார்க்கக்கூடிய பாக்கியதை எனக்கும்,,,

உங்களுக்கும் இந்த உலக முஸ்லீம் அனைவருக்கும் அல்லாஹ் கொடுப்பானாகவும். آمين يا رب العالمين

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலம்

Wednesday 12 June 2019

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-



01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.

06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்
கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக்
கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால்
ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து
கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச
வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில்
அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா
செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க
வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப்
பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று
எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட
வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க
வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய
வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது
உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை,
மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்
மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,
தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன்
கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம்
சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க
வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய
பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்
கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Tuesday 11 June 2019

70 பெரும் பாவங்கள்:

🌹🌹 *70 பெரும் பாவங்கள்*..,⁉

✒ கட்டுரை :- *ஹாஜி M.A அப்துல் நசீர், சேலம்., திருக்குர்ஆன் வசனம் குரூப்கள் அட்மீன்*.,  *93608 97222*

🌹  *தொடர் பதிவுகள்* *150/1*

1. ஷிர்க் *அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்*
2.   கொலை,
3.   சூனியம்,
4.   தொழுகையை விடுதல்,
5.   ஜக்காத்தை கொடுக்க மறுத்தல்,

6.   நோன்பை விடுதல்,
7.   ஹஜ்ஜு செய்யாமை,
8.   பெற்றோரைத் துன்புறுத்தல்,
9.   உறவினர்களை வெறுத்தல்,
10. விபச்சாரம்,
11. ஆண் புணர்ச்சி,
12. வட்டி,
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்,
14. அல்லாஹ்வின் மீதும் ரஸூலின் மீதும் பொய்யுரைத்தல்.,
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்,
16. தலைவன் அநீதி செய்தல்,
17. பெருமை,
18. பொய்ச்சாட்சி கூறல்,
19. மது அருந்துதல்,
20. சூது,
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்,
22. மோசடி செய்தல்,
23. களவு,
24. வழிப்பறி,
25. பொய்ச் சத்தியம்,
26. அநீதி இழைத்தல்,
27. கப்பம் பெறல்,
28. தகாத உணவு,
29. தற்கொலை,
30. பொய்,
31. கெட்ட நீதிபதி,
32. அதிகாரியின் இலஞ்சம்,
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்,
34. கூட்டிக் கொடுத்தல்,
35. ஆகாததை ஆகுமாக்குபவன்,
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை,
37. முகஸ்துதி,
38. கற்ற கல்வியை மறைத்தல்,
39. சதி செய்தல்,
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்,
41. விதியைப் பொய்ப்படுத்தல்,
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்,
43. கோளுரைத்தல்,
44. திட்டுதல்., *சபித்தல்*
45. வாக்கு மாறுதல்,
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்,
47. கணவனுக்கு மாறு செய்தல்,
48. உருவப் படம் வரைதல்,
49. ஒப்பாரி வைத்து அழுதல்,
50. கொடுமை செய்தல்,
51. வரம்பு மீறுதல்,
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்,
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்,
54. துறவிகளைத் துன்புறுத்தல்,
55. மமதையும், தற்பெருமையும்,
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்,
57. அடிமை ஒளிந்தோடல்,
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்,
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்,
60. மேலதிக நீரைத்தடுத்தல்,
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்,
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்,
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்,
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்,
65. தனித்துத் தொழுதல்,
66. ஜும்ஆவைத் தவற விடல்,
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்,
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்,
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்,
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்..,‼

🌹 *நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நடை முறையை பின் பற்றி வாழ்ந்து மீட்சி பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக*❗

🌹 *அல்லாஹ் இவர்களை பொருந்தி கொள்வானாக*.

🌹 *ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்*

🖊 *இஸ்லாமிய தொடர் பதிவுகள்*🖊

Monday 10 June 2019

சிறப்புடன் வாழ (108) வாழ்வியல் நெறிகள்.

👌👌👌🙏👍🙏👌👌👌

*சிறப்புடன் வாழ (108) வாழ்வியல் நெறிகள்.*

1.      கடமையை செய்.
2.      காலம் போற்று.
3.      கீர்த்தனை பாடு.
4.      குறைகள் களை.
5.      கெட்டவை அகற்று.
6.      கேள்வி வேண்டும்.
7.      கை கொடு.
8.      கோவிலுக்குச் செல்.
9.      கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100.  சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103.  வன்மம் வைக்காதே.
104.  சொல் தவறாதே.
105.  தோள் கொடு.
106.  பேராசைப் படாதே.
107.  புன்னகை அணி.
108.  நீடுழி வாழ்.   

👌👌👌👍🙏👍👌👌👌

﷽﷽﷽ "இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம்

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
"இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம்"



وتحبون المال حبا جما
நீங்கள் பொருளை அளவுகடந்து நேசிக்கிறீர்கள் (89 ; 20)
அல்லாஹ்வின் கிருபையால் நாம் குர்ஆனின் இறுதிப்பகுதியை நெருங்கி விட்டோம்.இன்றைக்கு நமது சிந்தனைக்கு விருந்தாக தேன்மறையின் ஒரு துளி.சூரத்துல் ஃபஜ்ரில் ஒரு வசனம்.நமது மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கின்ற ஓர் வசனம்.

இது திருமறைக்குர்ஆனின் எச்சரிக்கையூட்டும் வசனங்களில் ஒன்று.
உண்மையில் செல்வந்தர்கள் என்றால் யார் ? எவரிடம் பணம்,பொருள், வசதி எல்லாம் அதிகமாக இருக்கிறதோ அவர் தான் செல்வந்தர் என்று நாம் விளங்கி வைத்திருக்கிறோம்.ஆனால் செல்வந்தர் என்பதற்கு நபி ஸல் அவர்கள் கூறும் முகவரி வித்தியாசமானது.
عن أبي هريرة -رضي الله عنه- قال -صلى الله عليه وسلم-:
( ليس الغنى عن كثرة العَرَض، ولكن الغنى غنى النفس ) (1) متفق عليه
பொருள் அதிகமாக இருப்பது செல்வமல்ல. போதுமென்ற மனமே செல்வமாகும்.
அல்லாஹ் எனக்கு கொடுத்தது போதும், அல்ஹம்துலில்லாஹ்! என்று தனக்கிருக்கும் வசதியைக் கொண்டு தன்னிறைவோடு வாழ்பவர் தான் உண்மையில் செல்வந்தர்.நிறைய செல்வங்கள் இருந்தும் திருப்தி இல்லாமல் இது போதாது என்று சொல்பவர், என்று நினைப்பவர் அண்ணல் நபி ஸல் அவர்களின் பார்வையில் செல்வந்தரே அல்ல.
இதன்படி பார்த்தால் இன்றைக்கு உலகில் நிறைய பணக்காரர்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள்.அதனால் அவர்கள் செல்வம் இருந்தும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
போதுமென்ற தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

قوله -صلى الله عليه وسلم-: ( قد أفلح من أسلم، ورزق كفافا، وقنعه الله بما آتاه )
رواه مسلم والترمذي وأحمد وابن ماجة عن ابن عمرو
போதுமென்ற மனம் கொடுக்கப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார் என்பது நபிமொழியாகும்.

وكان من دعائه صلوات الله وسلامه عليه: ( اللهم إني أعوذ بك من قلب لا يخشع، ومن دعاء لا يسمع، ومن نفس لا تشبع، ومن علم لا ينفع، أعوذ بك من هؤلاء الأربع ) رواه الترمدي
அல்லாஹ்வை அஞ்சாத உள்ளம்,பதிலளிக்கப்படாத பிரார்த்தனை, நிரம்பாத உள்ளம்,பயன் தராத கல்வி இந்நான்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்பது நபி ஸல் அவர்கள் கேட்கும் துஆக்களில் ஒன்றாகும்.(திர்மிதி)
قال سعد بن أبي وقاص لابنه: "يا بني، إذا طلبت الغنى فاطلبه بالقناعة. فإن لم تكن قناعة. فليس يغنيك مال .. "
நீ செல்வத்தைத் தேடுவதாக இருந்தால் போதுமென்ற தன்மையோடு தேடு. அந்த தன்மை இல்லையென்றால் எந்த பொருளும் உன்னை நிறைவாக்காது என்று ஸஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்கள் தன் மகனுக்கு கூறுவார்கள்.
مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا). رواه الترمذي
உங்களில் யார் நிம்மதி பெற்றவராகவும் உடல் ஆரோக்கியம் பெற்றவராகவும் அன்றைய நாளின் உணவு கையில் இருக்கும் நிலையில் காலையில் எழுகிறாரோ அவருக்கு உலகமே கொடுக்கப்பட்டவரைப் போல. (திர்மிதி)

وعن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "من يأخذ عني هؤلاء الكلمات، فيعْمَل بهن، أو يُعَلم مَن يعمَل بهن"؟ فقال أبو هريرة: فقلت: أنا يا رسول الله، فأخذ بيدي فعدّ خمسا، وقال: "اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الضحك، فإن كثرة الضحك تميت القلب". أخرجه الإمام أحمد …
அமல் செய்வதற்கோ அல்லது அமல் செய்பவருக்கு கற்றுக் கொடுப்ப தற்கோ என்னிடமிருந்து இந்த வார்த்தைகளை எடுத்துக் கொள்பவர் யார் என்று நபி ஸல் அவர்கள் கேட்ட போது ஹள்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் “நான்” என்று கூறினார்கள்.உடனே நபி ஸல் அவர்கள் அபூஹுரைரா ரலி அவர்களின் கரத்தைப் பிடித்து 5 விஷயங்களைச் சொன்னார்கள். 1, அல்லாஹ் தடுத்தவைகளைத் தவிர்ந்து கொள் நீ  மக்களில் வணக்கசாலியாக ஆகி விடுவாய். 2, அல்லாஹ் உனக்கு பங்கிட்டதை பொருந்திக் கொள்.நீ மக்களில் செல்வந்தனாக ஆகி விடுவாய். 3, உன் அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய். நீ முஃமினாக ஆகி விடுவாய். 4, உனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்பு.நீ முஸ்லிமாக ஆகி விடுவாய். 5, அதிகம் சிரிக்காதே. அதிகம் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்து விடும். (அஹ்மது)

وفي الصحيحين عن حَكيم بن حزام رضي الله عنه، قال: سألت رسول الله صلى الله عليه وسلم، فأعطاني، ثم سألته فأعطاني، ثم سألته فأعطاني، ثم قال: "يا حَكيم، إن هذا المال خَضِرَة حُلوة، فمن أخذه بسخاوة نفس بورك له فيه، ومن أخذه بإشراف نفس لم يُبارَك له فيه، كالذي يأكل ولا يشبع، اليد العليا خير من اليد السفلى"، قال حكيم: فقلت: يا رسول الله، والذي بعثك بالحق لا أرزأ أحدا بعدك شيئا حتى أفارق الدنيا، فكان أبو بكر رضي الله عنه، يدعو حكيما إلى العطاء، فيأبى أن يقبله منه، ثم إن عمر رضي الله عنه دعاه ليعطيه فأبى أن يقبل منه شيئا، فقال عمر: إني أشهدكم يا معشر المسلمين على حكيم، أني أعرض عليه حقه من هذا الفيء فيأبى أن يأخذه، فلم يرزأ حكيم أحدا من الناس بعد رسول الله صلى الله عليه وسلم حتى توفي.
தன் தேவை குறித்து நபி ஸல் அவர்களிடம் ஹகீம் பின் ஹிஸாம் ரலி அவர்கள் மீண்டும் மீண்டும் முறையிட்ட போது, பொருள் என்பது இனிப்பானது,பசுமையானது.நிறைவான மனதோடு யார் அதை எடுத்துக் கொள்வாரோ அவருக்குத்தான் அதில் பரக்கத் ஏற்படும் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.அதன் பிறகு அந்தத் தோழர் தன் மரணம் வரை யாரிடத்திலும் தேவையாக வில்லை.(புகாரி,முஸ்லிம்)


وروى مسلم في صحيحه عن عمر بن الخطاب رضي الله عنه قال: ((دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو مضطجعٌ على حصيرٍ، فجلست، فأدنى عليه إزاره وليس عليه غيره، وإذا الحصير قد أثر في جنبه، فنظرت ببصري في خزانة رسول الله صلى الله عليه وسلم، فإذا أنا بقبضةٍ من شعيرٍ نحو الصاع، ومثلها قرظًا في ناحية الغرفة، وإذا أفيقٌ معلقٌ، قال: فابتدرت عيناي، قال: ما يبكيك يا ابن الخطاب؟ قلت: يا نبي الله، وما لي لا أبكي، وهذا الحصير قد أثر في جنبك، وهذه خزانتك لا أرى فيها إلا ما أرى، وذاك قيصر وكسرى في الثمار والأنهار، وأنت رسول الله صلى الله عليه وسلم، وصفوته، وهذه خزانتك، فقال: يا ابن الخطاب، ألا ترضى أن تكون لنا الآخرة ولهم الدنيا؟، قلت: بلى.. )). (القَرَظ) هو ورَق السَّلَم تدبغ به الجلود. (أفيق) جلد لم يدبغ.
நபி ஸல் அவர்கள் சாதாரண பாயின் மீது படுத்திருந்தார்கள்.அந்த பாயின் அடையாளம் நபியின் மேனியில் தெரிந்தது.அதைப் பார்த்த உமர் ரலி அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்.உலகில் மற்ற தலைவர்களெல்லாம் எத்தனை வசதிகளோடு வாழுகிறார்கள்.ஆனால் உங்களின் நிலை இவ்வாறு இருக்கின்றதோ என்று கூறினார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள், அவர்களுக்கு உலகம் கிடைத்திருக்கிறது.ஆனால் நமக்கு மறுமை கிடைக்கும் என்றார்கள்.  (முஸ்லிம்)
எனவே இருப்பதை போதுமாக்கிக் கொண்டு தன்னிறைவோடு வாழ்வோம். அல்லாஹ் அருள் புரிவானாக.

           ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

Thursday 30 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. தி.மு.கவை நிறுவியவர் யார்?*

 அண்ணாதுரை

*2. தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்?*

 சர் தாமஸ் மன்றோ

*3. சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?*

 புதுமைப்பித்தன்

*4. கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று?*

 வானம்பாடி

*5. தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்?*

 கோமல் சுவாமிநாதன்

*6. ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது?*

 குளத்தங்கரை அரச மரம்

*7. குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல்?*

 சிலப்பதிகாரம்

*8. தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக?*

உம்மைத் தொகை

*9. மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு?*

 உவமைத் தொகை

*10. பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் ?*

பாரி.

True Happiness!!




If you have 60 seconds give this a read. Game changer!

Steve Jobs' last words
He died a billionaire at 56yrs of Pancreatic Cancer and here are his last words on the sick bed:

"I reached the pinnacle of success in the business world. In others’ eyes my life is an epitome of success.

However, aside from work, I have little joy. In the end, wealth is only a fact of life that I am accustomed to.

At this moment, lying on the sick bed and recalling my whole life, I realize that all the recognition and

wealth that I took so much pride in, have paled and become meaningless in the face of impending death.

You can employ someone to drive the car for you, make money for you but you cannot have someone to bear the sickness for you.

Material things lost can be found. But there is one thing that can never be found when it is lost – "Life".

When a person goes into the operating room, he will realize that there is one book that he has yet to finish reading – "Book of Healthy Life".

Whichever stage in life we are at right now, with time, we will face the day when the curtain comes down.

Treasure Love for your family, love for your spouse, love for your friends...

Treat yourself well. Cherish others.

As we grow older, and hence wiser, we slowly realize that wearing a $300 or $30 watch - they both tell the same time...

Whether we carry a $300 or $30 wallet/handbag - the amount of money inside is the same;

Whether we drive a $150,000 car or a $30,000 car, the road and distance is the same, and we get to the same destination.

Whether we drink a bottle of $300 or $10 wine - the hangover is the same;

Whether the house we live in is 300 or 3000 sq ft - loneliness is the same.

You will realize, your true inner happiness does not come from the material things of this world.

Whether you fly first or economy class, if the plane goes down - you go down with it...

Therefore.. I hope you realize, when you have mates, buddies and old friends, brothers and sisters, who you chat with, laugh with, talk with, have sing songs with, talk about north-south-east-west or heaven and earth, .... That is true happiness!!

Five Undeniable Facts of Life :
1. Don't educate your children to be rich. Educate them to be Happy. So when they grow up they will know the value of things not the price.

2. Best awarded words in London ... "Eat your food as your medicines. Otherwise you have to eat medicines as your food."

3. The One who loves you will never leave you for another because even if there are 100 reasons to give up he or she will find one reason to hold on.

4. There is a big difference between a human being and being human.
Only a few really understand it.

5. You are loved when you are born. You will be loved when you die. In between, You have to manage!

NOTE: If you just want to Walk Fast, Walk Alone! But if you want to Walk Far, Walk Together!

Six Best Doctors in the World
1. Sunlight
2. Rest
3. Exercise
4. Diet
5. Self Confidence and
6. Friends

Maintain them in all stages of Life and enjoy a healthy life.

God loves you!

Wednesday 29 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக?*

 பண்புப்பெயர்

*2. வாழ்க இலக்கணக்குறிப்பு?*

வியங்கோள் வினைமுற்று

*3. தடந்தோள் இலக்கணக்குறிப்பு?*

உரிச்சொற்றொடர்

*4. ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க?*

வினைத்தொகை

*5. முடைந்தவர் இலக்கணக்குறிப்பு?*

வினையாலணையும் பெயர்

*6. பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல்?*

 கலம்பகம்

*7. தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்?*

 சேக்கிழார்

*8. தமிழ்மறை என அழைக்கப்படும் நூல்?*

 திருக்குறள்

*9. இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்?*

 போபால்

*10. மேட்டூர் அணையின் வேறு பெயர்?*

ஸ்டான்லி அணை.

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்?*

 திருமதி சரோஜினி நாயுடு

*2. ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது?*

ஒய்-குரோமோசோம்

*3. டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்?*

 சமூக அமைப்பின் கூறுகள்

*4. ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்?*

 தோஸ்த் அலி

*5. 200 நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்?*

 மக்காச் சோளம்

*6. உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி?*

வடமேற்கு அட்லாண்டிக்

*7. பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?*

 1982

*8. எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?*

இரண்டாவது

*9. காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு?*

 1915

*10.இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு?*

1957

Wednesday 22 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1.டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்?*

குத்புதின் ஐபெக்

*2. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?*

1949

*3. அற இயல் கற்பிப்பது?*
ஒழுக்கக் கொள்கை

*4. அளவையியல் என்பது?*

 உயர்நிலை விஞ்ஞானம்

*5. இயற்கை கவிதை தத்துவ அறிஞர்?*

 ரவிந்திரநாத் தாகூர்

*6. ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர்?*

ஸ்ரீஅரவிந்தர்

*7. தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி?*

திருநீலகண்டர்

*8. சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர்?*

அம்பேத்கார்

*9. அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம்?*

 மஹாராஷ்டிரா

*10. இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி?*

திருவனந்தபுரம்

Tuesday 21 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு?*

உருவகம்

*2. தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை?*

தன்வினை

*3. போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது? இது எவ்வகை வினை?*

எதிர்மறை

*4. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்?*

 உடன்பாடு

*5.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்?*

கழிவு வீதம்

*6. தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது?*

தூத்துக்குடி

*7. அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர்?*

அபுல் ஃபாசல்

*8. மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?*

 1971

*9. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?*

 65 வயது

*10. இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது?*

 ஆங்கிலம்

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது?*

 சேலம்

*2. திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?*

காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்.

*3. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது?*

 ஜெனிவா

*4. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?*

மூன்றாம் ராஜேந்திரன்

*5. மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது?*

அரிஸ்டாடில்

*6. நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்?*

 பி.டி.ராஜன்

*7. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?*

 26 நவம்பர்,1949

*8. யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?*

20

*9. இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்?*

5 ஆண்டுகள்

*10.மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?*

துணை சபாநாயகர்.

கவலைகளை விட்டொழியுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்:




🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

Thursday 16 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் ?*

– _அஃறிணை_

*2. ஷேக்ஸ்பியர் ?*

– _ஆங்கில நாடக ஆசிரியர்_

*3. மில்டன்?*

 – _ஆங்கிலக் கவிஞர்_

*4. பிளேட்டோ?*

– _கிரேக்கச் சிந்தனையாளர்_

*5. காளிதாசர்*

– _வடமொழி நாடக ஆசிரியர்_

*6. டால்ஸ்டாய்?*

– _ரஷ்யநாட்டு எழுத்தாளர்_

*7. பெர்னார்ட்ஷா?*

 – _ஆங்கில நாடக ஆசிரியர்_

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மெய்யெழுத்து?*

 – அரை மாத்திரை

*2. உயிரெழுத்து (குறில்)?*
– ஒரு மாத்திரை

*3. உயிரெழுத்து (நெடில்)?*

 – இரு மாத்திரை

*4. உயிர்மெய் (குறில்)?*

 – ஒரு மாத்திரை

*5. உயிர்மெய் (நெடில்)?*

 – இரு மாத்திரை

*6. காய்களின் இளமைப் பெயர்கள்?*

 – அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.

*7. சொல் பொருள் : களஞ்சியம்?*

 – தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி – கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி – உலகம்

Saturday 11 May 2019

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள் :-

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள் :-



1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?*

_தண்ணீர்._

*2. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?*

_மார்ச் 21._

*3. இதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?*

_4_

*4. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?*

_ஓடோமீட்டர்._

*5. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?*

_கிரண்ட்டப்._

*6. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?*

_எட்டயபுரம்._

*7. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?*

_காம்டே._

*8. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?*

_ஜார்கண்ட்._

*9. தமிழகத்தின் புகழ் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?*

_ஈரோடு._

*10. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?*

_ஜெர்மனி._

*11. 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?*

_பால்._

Friday 10 May 2019

ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள்

*ஏராளமான நன்மைகளையைப் பெற்றுத் தரக்கூடிய நாவிற்கு எளிதான சில திக்ருகள்* 👇🏻

_அவ்வப்போது கண்ட கண்ட பாடல்களை முணுமுணுப்பதை விடவும். இந்த திக்ருகளை மொழிவதில் நம்முடைய நாவைத் திளைக்க செய்தால், ஏராளமான நன்மைகள் பெற்று மறுமை வாழ்வை வளமாக்கலாம். இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக._

1) *சுப்ஹானல்லாஹ்* (100 முறை)

பொருள்: அல்லாஹ் தூயவன்.

சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன.

     - முஸ்லிம் 5230

2) *அல்ஹம்துலில்லாஹ்*

பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.

     - முஸ்லிம் 381

3) *சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி* 

பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.

     - முஸ்லிம் 381

சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்.

4) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி* (100 முறை)

பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்.

சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.

     - புஹாரி 6405

5) *சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்*

பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்.

சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஜான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப்  பிரியமானவை.

     - புஹாரி 7563

6) *அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா*

பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன.

     - முஸ்லிம் 1052

7) *அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி*

பொருள்: தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.

சிறப்பு: 12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை நிறைந்தது.

     - முஸ்லிம் 1051

8) *லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்* (100 முறை)

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்.

சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும்.

     - புஹாரி 3293

9) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்.

பொருள்: இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப்புகழும், அவன் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை.

சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

     - முஸ்லிம் 1302

➡ நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல்  இதே நிலையில்தான் நீ  இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:)

*சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி*

பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.

     - முஸ்லிம் 5272

Thursday 9 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*வினாக்கள் பகுதி - 9*

*1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?*

*2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?*

*3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?*

*4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?*

*5. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?*

*6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?*

*7. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?*

*8. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?*

*9. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?*

*10. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?*

🔘 *பதில்கள் பகுதி - 9*

_1.ஒரே ஒரு முறை,_

_2. ஓம்,_

_3. இத்தாலி,_

_4. இங்கிலாந்து,_

_5. யூரி,_

_6. சிக்ஸ்,_

_7. எகிப்து நாட்டவர்கள்,_

_8. வில்கின்சன்,_

_9. 1912-ல்,°°_

_10. ரோஸ்._

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*வினாக்கள் பகுதி - 6*

*1. முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?*

*2. குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?*

*3. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?*

*4. சர்வதேச உணவுப்பொருள் எது ?*

*5. காகமே இல்லாத நாடு எது ?*

*6. எரிமலை இல்லாத கண்டம் எது ?*

*7. கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?*

*8. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?*

*9. தமிழ்நாட்டின் மரம் எது ?*

*10. முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?*

🔘 *பதில்கள் பகுதி - 7*

*1. மெக்கா,*

*2. விஸ்வநாதன் ஆனந்த்,*

*3. மூன்று,*

*4. முட்டைகோஸ்,*

*5. நீயூசிலாந்து,*

*6. ஆஸ்திரேலியா,*

*7. SPRUCE,*

*8. கருவிழி,*

*9. பனைமரம்,*

*10. பெரு.*

நோன்பின் சட்டங்கள்

*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*
             நோன்பின் சட்டங்கள்
*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*
                        🌹🌹🌹🌹


      நோன்பின் சட்டங்களை அறிந்து நோன்பு நோற்கவேண்டும். மனம் விரும்பியவாறு நோன்பு வைத்தால் நாள்முழுதும் பசித்திருந்ததைத் தவிர வேறு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.



👉   *குறைந்தளவு வாந்தி வந்தால் நோன்பு முறியாது. வாய் நிரம்ப வாந்தி வந்தால் நோன்பு முறிந்துவிடும்.*


👉  *மிஸ்வாக் செய்வதால் நோன்பு முறியாது.*


👉 *நோன்பு நினைவிருக்க வாய் கொப்பளிக்கும்போது தண்ணீர் தொண்டையினுள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்து விடும்.*


👉 *கண்களுக்கு சுருமா இடுவது, எண்ணெய் தேய்ப்பது, சோப்பு போட்டுக் குளிப்பது, அத்தர் பூசுவது இவைகளால் நோன்பு முறியாது.*


 👉  *பீடி, சிகரெட், பொடி போன்றவைகளை உபயோகித்தால் நோன்பு முறிந்து விடும்.*


👉 *குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நோன்பு முறியாது.*


👉   *மாதத் தீட்டின் போது பெண்கள் நோன்பு வைக்க கூடாது. ஆனால் விடுபட்ட நோன்புகளை அவசியம் களாச் செய்யவேண்டும்.*


👉 *முடி வெட்டுவது, நகம் வெட்டுவது இவைகளால் நோன்பு முறியாது.*


 👉 *நோன்பு வைக்க எழும்போது பஜ்ரு பாங்கு சொல்லப்பட்டு விட்டால் எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் நோன்பின் நிய்யத்துடன் தொடரலாம்.*


 👉 *நோன்பாளி பொய், புறம், கோள், கெட்டவார்த்தைகள் பேசுவது மாபெரும் குற்றமாகும். நோன்பை முறிக்கா விட்டாலும் நோன்பின் நன்மைகளை அழித்து விடும்.*


  👉 *எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது.*


  👉 *நோன்பு வைத்த நிலையில் நோன்பு திறக்கும் நிய்யத்தைச் சொல்வதால் நோன்பு முறியாது.*


  👉 *தாமதம் செய்யாமல் குறித்த நேரத்தில் நோன்பு திறப்பது நோன்பின் நிபந்தனையாகும்.*


  👉  *தூங்கி எழுந்ததும் கனவின் மூலம் ஸ்கலிதம் ஆகியிருந்தால் அவரது நோன்பு முறியாது. குளித்துக் கொள்ளலாம்.*


  👉 *குளிப்பு கடமையானவர் ஸஹர் நேரம் குறைவாக இருப்பின் ஒளுசெய்துவிட்டு சஹர் செய்தபின் குளித்துக்கொள்ளலாம். நேரம் இருப்பின் குளித்துவிட்டு ஸஹர் செய்யவேண்டும்.*


  👉 *உடல் நலமில்லாவிட்டால் நோன்புடன் ஊசி போடலாம்.*


  👉 *சிறுவயது பிள்ளைகளை நோன்பு வைக்க, பழக்கப்படுத்த வேண்டும்.*


  👉 *பகலில் நோன்பிருக்கும் நினைவுடனேயே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும்.*


  👉  *நோன்பு வைக்க முடிகிறது. ஆனால் தொழ முடியவில்லை என சிலர் நோன்பையும் விட்டுவிடுகின்றனர். நோன்பு ஒரு தனி கடமையாகும். தொழுகை தனி கடமையாகும். ஒன்றை காரணம் காட்டி ஒன்று விடுவது பெரும் குற்றமாகும். கண்டிப்பாக தொழ வேண்டும்.*


 👉 *ரமலான் மாதம் முழுவதும் நோன்புடைய காலமாகும். எனவே ஒருவர் ஸஹர் செய்து நிய்யத் வைக்காமல் தூங்கிவிட்டு காலையில் எழுந்து  நிய்யத் வைக்க மறந்து விட்டோமே என்று எண்ணம் வேண்டியதில்லை. நோன்பை தொடர்ந்து கொள்ளலாம்.*


👉 *தக்க காரணமின்றி வேண்டுமென்றே நோன்பை ஒருவர் முறித்தால் அது பெரும் பாவமாகும். அந்த நோன்புக்குப் பகரமாக 60 நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டும். 60-ல் ஒரு நோன்பு இடையில் தவறினாலும், மீண்டும் 60 நோன்பு வைக்கவேண்டும் என குர்ஆனில் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நோன்பு விஷயத்தில் அதிக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.*


                 🌼🌻🌼🌻🌼🌻

*நாமும் தெரிந்து கொள்வோம். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.*

          *ஜாஸ்ஸாகள்ளாஹ்*

🌹🌙🌹🌙🌹🌙🌹🌙🌹🌙🌹

Wednesday 8 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

🔘 *வினாக்கள் பகுதி - 5*

*1. கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?*

*2. சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?*

*3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?*

*4. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?*

*5. பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?*

*6. திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?*

*7. இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?*

*8. ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?*

*9. கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?*

*10. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?*

🔘 *பதில்கள் பகுதி - 5*

*1. இந்தியா,*

*2. வன்மீகம்,*

*3. இந்தியா,*

*4. வானம்பாடி,*

*5. விக்டோரியா மகாராணி,*

*6. பிரதமர்,*

*7. விசாகப்பட்டினம்,*

*8. அல்பேனியா,*

*9.அமெரிக்கா,*

*10. சுவிட்சர்லாந்து.*

இன்றைய பழமொழி :

இன்றைய பழமொழி :

*79. பழமொழி/Pazhamozhi*
நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.

*பொருள்/Tamil Meaning*
கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்?

*Transliteration*
```Nerru vettina kinarrile munthaanal vantha mutalai pola.```

*தமிழ் விளக்கம்/Tamil Explanation*
சமீபத்தில் தெரிந்துகொண்டதை ரொம்பநாள் தெரிந்தவன் போலப் பேசும் ஒருவனிடம் அங்கதமாகக் கூறுவது.


பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

🔘 *வினாக்கள் பகுதி - 3*

*1. இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?*

*2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?*

*3. சீனாவின் புனித விலங்கு எது ?*

*4. மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?*

*5. ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?*

*6. தங்கப்போர்வை நிலம் எது ?*

*7. தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?*

*8. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?*

*9. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?*

*10. சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?*

🔘 *பதில்கள் பகுதி - 3*

_1. பாடலிபுத்திரம்,_

_2. 8 ஆயிரம் லிட்டர்,_

_3. பன்றி,_

_4. இந்தியா,_

_5. கிமோனா,_

_6. ஆஸ்திரேலியா,_

_7. மூன்று,_

_8. வில்லோ மரம்,_

_9. நீயூசிலாந்து,_

_10. பிட்மேன்._

Thursday 2 May 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

🔳 *வினாக்கள் பகுதி - 2*

*1. உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?*

*2. மில்லினியம் டோன் எங்குள்ளது ?*

*3. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?*

*4. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?*

*5. லில்லி பூக்களை உடைய நாடு எது ?*

*6. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?*

*7. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?*

*8. சோகத்தை குறிக்கும் ராகம் எது ?*

*9. நதிகள் இல்லாத நாடு எது ?*

*10. சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?*

◾ *பதில்கள் பகுதி - 2*

*1. லெனின்,*

*2. கிரீன்விச்,*

*3. கரையான்,*

*4. சலவைக்கல்,*

*5. கனடா,*

*6. 55 மொழிகளில்,*

*7. 22 மாதம்,*

*8. முகாரி,*

*9. சவூதி அரேபியா,*

*10. மீத்தேன்.*

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*வினாக்கள் பகுதி 1*

*1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?*

*2. கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?*

*3. சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?*

*4. இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?*

*5. பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?*

*6. கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?*

*7. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?*

*8. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?*

*9. செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?*

*10. மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?*

*பதில்கள் பகுதி - 1*

*1. அன்னை தெரசா,*

*2. கெப்ளர்,*

*3. ரஷ்யர்கள்,*

*4. 1860,*

*5. ஜனவரி 3,*

*6. கோமுகம்,*

*7. எருசேலம் நாட்டில்,*

*8. லிக்னோஸ்,*

*9. இர்வின் லாங்மூர்,*

*10. ஜப்பான்.*

Thursday 18 April 2019

ஏழு செயல்களால் வறுமை சீக்கிரம் வந்து விடும்:

🌹🌹🌹 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🌹🌹
____________________________
ஏழு செயல்களால் வறுமை சீக்கிரம் வந்து விடும்

(1) வேக வேகமாக தொழுவது.

(2) நின்று கொண்டு சிறு நீர் கழிப்பது.

(3) சிறு நீர் கழித்த இடத்தில் ஒலு செய்வது.

(4) நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது.

(5) விளக்கை வாயால் ஊதி அனைப்பது.

(6) நகத்தை பல்லால் கடிப்பது.

(7) அணிந்திருக்கும் ஆடையைக் கொண்டு முகத்தை துடைப்பது.
________🌹🌹🌹🌹________
ஏழு செயல்களால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

(1) குர்ஆன் அதிகமாக ஓதுவது.

(2) ஜந்து நேரம் விடாமல் தொழுவது.

(3) அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது.

(4) ஏழைகளுக்கு உதவி செய்வது.

(5) பாவங்களிலிருந்து விலகிக் கொள்வது. மற்றும்
பாவ மன்னிப்புத் தேடுவது.

(6) பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடு நல்ல முறையில் சேர்ந்து வாழ்வது.

(7) காலையில் சூரா யாசீன் ஓதுவது. மாலையில் சூரா வாகிஆ ஓதுவது.

 வறுமையை உண்டாக்கக்கூடிய அந்த ஏழு செயல்கலில்யிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.ஆமீன்

இன்னும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் ஏழு செயல்களை செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள்புரிவானாக.

ஆமீன் ஆமீன் ஆமீன்.

     (நூல்: خطبات ذوالفقار)

Tuesday 16 April 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மஞ்சரி என்றால் என்ன?*

ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட

பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

*2. மலரின் உறுப்புகள் என்ன?*

பூவடிச் செதில்,
பூக்காம்பூச் செதில், பூத்தளம்,
புல்லிவட்டம், அல்லிவட்டம்,
 மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்

*3. மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?*
                                ஆகாயத்தாமரை

*4. கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?*
                                காந்தள்(Gloriosa)

*5. அல்லி வகைகள் என்ன ?*

குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்

பகலில் மட்டுமே பூக்கும்,

ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.

*6. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?*

தாமரை

*7. எந்த மலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்?*

மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர்  என்றழைக்கிறார்கள்.

*8. எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?*

மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.

இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

*9. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?*

ஹரி சிங்.


*10. 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?*
                                 ஜபுலணி(Jabulani).

*11. ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?*
மும்பை தாராவி.

Monday 15 April 2019

மகத்தான நற்பாக்கியங்களைப் பெற்றுத் தரக் கூடிய முப்பது சிறந்த அமல்கள்.

மகத்தான நற்பாக்கியங்களைப் பெற்றுத் தரக் கூடிய முப்பது சிறந்த அமல்கள். இவற்றைப் பேணுதலாகச் செய்து அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெற்ற சிறந்த அடியானாக மாற நாம் ஒவ்வொருவரும் முயற்சிப்போமாக!..இன்ஷா அல்லாஹ்!..

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6) எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7) எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.) எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையைப் பேணுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்...

9) எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10) எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11) எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12) எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13) எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்தஃவதித் தாம்மஹ் வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதனில் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14) எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15) எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16) எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17) அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18) எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19) ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20) ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21) எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22) யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23) ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24) எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25) ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26) எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27) எவர் ஒருவரின் கடனை இலகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளான மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28) எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ என்று ஓதுவாராகின், அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29) எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30) நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?*

அணுக்கள் பிளக்ககூடியவை.

*2. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?*

எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

*3. அணு எண் என்றால் என்ன?*
             
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள

        *4.ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும். தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?*

நெல்சன் மண்டேலா

*5. மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?*

27 ஆண்டுகள்

*6.மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?*
                                    ராபன்தீவில்

*7. மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?*

பிப்ரவரி 2 1990 ஆண்டு

*8. மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?*
                                                    71

*9. அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?*
                                             1993

*10. மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?*

 பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.

*11. மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?*
நெல்சன்ரோபிசலா மண்டேலா

Friday 12 April 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. சீனாவின் தலைநகரம் எது?*

அ) தாய்லாந்து

ஆ) பீஜிங்

இ) ஹாங்காங்

ஈ) சிட்னி

*2. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?*

அ) காவிரி

ஆ) சட்லஜ்

இ) பிரம்மபுத்ரா

ஈ) ரவி

*3. பாரதியார் பிறந்த ஊர் எது?*

அ) பூம்புகார்

ஆ) மதுரை

இ) எட்டயபுரம்

ஈ) மயிலாப்பூர்

*4. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?*

அ) நரி

ஆ) புலி

இ) சிறுத்தை

ஈ) பூனை

*5. தமிழகத்தின் பரப்பளவு?*

அ) 130,058 சதுர கி.மீ.,

ஆ) 10,000 சதுர கி.மீ.,

இ) 22,500 சதுர கி.மீ.,

ஈ) 99,338 சதுர கி.மீ.,


*விடைகள் :-* 1(ஆ), 2(இ), 3(இ), 4(அ), 5(அ).

Wednesday 10 April 2019

திருக்குறள் இனியவைகூறல்:


            *_திருக்குறள் 100_*
          *10.இனியவைகூறல்*                                           
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*குறள்: 100:-*
*_இனிய உளவாக இன்னாத கூறல்_*
*_கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று._*
*பால் வகை:-* 1. அறம்
*இயல்:-* 2. இல்லறவியல்
*அதிகாரம்:-* 10. இனியவைகூறல்
*சாலமன் பாப்பையா உரை:-*
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
*மு. வரதராசனார் உரை:-*
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
*மு. கருணாநிதி உரை:-*
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
*மணக்குடவர் உரை:-*
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
*ஆங்கிலம்:-*
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
*ஆங்கில உரை:-*
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

Wednesday 27 March 2019

மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்.

மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்.

* காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழலாம்!

தொழுகையும் தடைகளும்:

தொழுகையும் தடைகளும்
+++++++++++++++++++

        *சுபஹ்*
            -------
சுருண்டு படுக்க
சுகம் வரும்.
கூதல்
மோதல் செய்யும்.
எப்போதோ சுகமான
ஏதோவொரு நோய்
இப்ப ஞாபகம் வந்து
எழும்பாதே என்று சொல்லும்.
இலேசான மழை
இருக்கிற பத்வாவை
எடுத்துக் காட்டும்.
எல்லாவற்றையும்
எடுத்தெறிந்து
எழுபவனே
ஈமான்தாரி.

          *ளுஹர்*
          +++++++
சூட்டுச் சூரியன்
சோதிக்கும்.
பார்த்த செய்தி
பாதியில் இருக்கும்.
வியர்வை அலுப்பு
வேண்டாம் என்று சொல்லும்.
லெப்பைமார் சிலரே
லேட்டாகித் தொழுவது
லேசாக ஞாபகம் வரும்.
உள்ள பிரச்சினையை
ஓரமாக்கி வைத்து விட்டு
பள்ளிக்குச் செல்பவனே
பக்குவ முஸ்லிம்.

               *அஸர்*
                   +++++
லுஹர் பின் உண்டது
லொள்ளு பண்ணும்.
கண்றாவித் தூக்கம்
கண்களைத் தாக்கும்.
கிளைமாக்ஸ் சீன்
கிக்காகப் போகும்.
மொபைல் போன் கால் (call)
மொக்கை போடும்.
அத்தனையும் ஒதுக்கி விட்டு
அஸருக்குப் பள்ளி செல்.
ஈமான் வளரும்
இதயம் மலரும்.

            *மஹ்ரிப்*
                 +++++
உழைத்த களைப்பு
ஓய்வெடுக்கச் சொல்லும்.
விளையாட்டில் இருப்போர்க்கு
விறுவிறுப்பு ஏறும்.
அடுத்த தொழுகையும்
அவசரமாய் வருவதால்
இரண்டு தரம் போக
இயலாது என்று தோன்றும்.
கூடுகின்ற கூட்டங்களில்
கூடும் சுவாரஸ்யம்.
அடுப்பில் டீ கொதிக்கிறது
அம்மணியின் குரல் கேட்கும்.
இடுப்பில் உள்ள பிள்ளை
இறங்க இயலா என்று சொல்லும்.
இத்தனையும் தாண்டி
எழுந்து மக்ரிப் செல்
சுத்தமான ஈமான்
சுரக்கத் தொடங்கும்.

              *இஷா*
                +++++
இப்பதானே போய் வந்த
என்று மனம் சொல்லும்.
அப்பாடா என்று சொல்லி
ஆறுதலாய் இருக்கச் சொல்லும்.
காப்பியைக் கொண்டு வந்து
குழந்தை படம் காட்டும்.
சில்லறைக் கடை வாசலிலே
சிலர்க்கு பிஸியாகும்.
சீரியல் நாடக்த்தில்
சிந்தனை லயித்திருக்கும்.
ஊர் பலாய் கழுவுதலில்
உற்சாகம் பீறிடும்.
இததனையும் ஒதுக்கி
இஷாத் தொழச் சென்றால்
பாவமெல்லாம்
மறையத் தொடங்கும்

Tuesday 26 March 2019

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!

முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .

1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
1211  : அல்தமிஷ்
1236  : ருக்னுத்தீன் ஷா
1236  : ரஜியா சுல்தானா
1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266  : கியாசுத்தீன் பில்பன்
1286  : ரங்கிஷ்வர்
1287  : மஜ்தன்கேகபாத்
1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :அலாவுதீன் கில்ஜி
1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா
1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக் வம்சம்
1320  :கியாசுத்தீன் துக்ளக்
1325  :  முஹம்மது பின் துக்ளக்
1351  :பெரோஸ்ஷா துக்ளக்
1388  : கியாசுத்தீன் துக்ளக்
1389 : அபுபக்கர்ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா
1394  : நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :கஜர்கான்
1421  :மெஹசுத் தீன் முபாரக் ஷா
1434  :  முஹம்மது ஷா
1445  :அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)
முகலாயர் ஆட்சி
1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
1628  :ஷாஜஹான் 
1659 : ஒளரங்கசீப்
1707 :ஷாஹே ஆலம்
1712  :பஹதூர் ஷா  1713 :பஹாரோகஷேர்   1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754  :ஆலம்கீர்  1759 :ஷாஹேஆலம்
1806 :அக்பர் ஷா
1837 :பஹதூர்ஷா ஜஹபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி
1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ;லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ்கர்னல்
1905: லார்டு
கில்பர்ட்
1910 :லார்டு
சார்லஸ்
1916 :லார்ட் பிடரிக்
1921 : லார்ட் ரக்ஸ்
1926:.லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936 :லார்டு ஐ கே
1943:லார்டு அரக்பேல்
1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்   1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P.V. நரசிம்மராவ்
1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி
1996:  A.J. தேவகொளடா
1997: I.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

இதை தொகுத்த நண்பருக்கு நன்றி!

Wednesday 20 March 2019

பெருமானார் ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னறிவிப்புகளில் ஒருசில...

பெருமானார் ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹிவ‌ஸ‌ல்ல‌ம் அவ‌ர்க‌ளின் முன்னறிவிப்புகளில் ஒருசில...*
==========

o  ” *ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது”* (முஸ்லிம் -157)

o  *தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும்.* (இப்னுமாஜா)

o  *ஒரு காலம் வரும் ”மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்* ”. (புஹாரி : 5581, 5231)

o  *என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர்.* (அபூதாவூத்)

o 🎯 *அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.* (புகாரி)

o  *ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர்.* (முஸ்லிம் : 3921)

o  *சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்* .(திர்மிதி)

o  *காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள்.* (திர்மிதி)

o  *எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.* (முஸ்லிம்)

o  *முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள்.* (புகாரி)

o  *பூகம்பங்கள் அதிகம் ஏற்படும்.* (புகாரி)

o  *பூமி அலங்கரிக்கப்படும்* . (திர்மிதி)
 *
o  *பருவ மழைக்காலம் பொய்க்கும்.*

o  **திடீர் மரணங்கள்* *அதிகரிக்கும்,* *மனித ஆயுள் குறையும்.*
*
o  *முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.*

o  *பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.* (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

o  *யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ”இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்’*

o  *வியாபாரமுறைகள் மாறும்* (புகாரி)

o  *பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும்* . (முஸ்லிம்)

o  *ஒரு தடவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.* (முஸ்லிம்)

o  *திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாட்டார்கள். (பைஹகி) சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.*

o   ( *குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும்.* (புகாரி, முஸ்லிம்)

o  *சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.*

o  *பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்* .

o  *சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும். பொருளாதார வள்ச்சி அதிகமாகும்.* (புகாரி : 7121,1036,1424)

o  🎯 *பொய் மிகைத்து நிற்கும்.** (திர்மிதி)

o  *அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும்.* *மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும்.* (புகாரி)

o  *முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.*

o  *பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும்.* (அபூதாவூத்)

Tuesday 19 March 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது?*

 – அனிச்சம்

*2. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு எது?*

 – சுவீட்சர்லாந்து

*3. மழையின் அளவை கணக்கிட உதவும் கருவி எது?*

 – ரெயின் கேஜ்

*4. பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது?*

-- எட்டு

*5. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?*

– 12,500

*6. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது?*

– டென்மார்க்

*7. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?*

 – இங்கிலாந்து

*8. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?*

– மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்)

*9. எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?*

 – அர்ஜென்டீனா மற்றும் உருகுவே