Wednesday 20 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?*

3 ஆண்டுகள்

*2. ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டு?*

1 ஆண்டு

*3. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?*

பொதுச்சபையால். (மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெரும்பான்மையில்)

*4. ஐ.நா. பொருளாதார சமூகச்சபை எத்தனை பிரதிநிதிகளை கொண்டது?*

54 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள்

*5. ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் பணிகள் என்ன?*

பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம்.

*6. ஐ.நா. பொறுப்பாண்மைக் குழுவின் (Trusteeship Council) தலைமையகம் எங்குள்ளது?*

நியூயார்க்

*7. ஐ.நா. பொறுப்பாண்மைக்குழுவின் உறுப்பினர்கள் யார்?*

சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.

*8. ஐ.நா. பொறுப்பாண்மைக்குழு எதற்கு அமைக்கப்பட்டது?*

சுயஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது.

*9. ஐ.நா.பொறுப்பாண்மைக் குழுவின் தலைமைப் பதவி எந்த நாட்டிடம் உள்ளது?*

ஒவ்வொரு நாடும் ஒரு வருடம் மட்டும் என்ற சுழற்சி முறையில் (5 நாடுகள் மட்டும்)

*10. ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது?*

International Court of Justice திஹேக், நெதர்லாந்து

Tuesday 19 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ஐ.நா சபையின் பொதுச்சபையின் செயலரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்?*

5 ஆண்டுகள்

*2. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் எங்குள்ளது?*

 நியூயார்க்

*3. சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை யார் தேர்ந்தெடுப்பது?*

ஐ.நா. பாதுகாப்புசபை (Security Council)

*4. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது யார்?*

 ஐ.நா. பாதுகாப்புசபை

*5. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன?*

5 நாடுகள்

*6. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் எவை?*

 சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.

*7. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது யார்?*

ஐ.நா. பொதுச்சபை

*8. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் தற்காலிக உறுப்பினராக, இந்தியா எந்தெந்த ஆண்டுகளில் இருந்தது?*

 1951-1952, 1967-1968, 1977-1978, 1991-1992

*9. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எந்த முக்கிய நாடுகள் கோரி வருகிறது?*

 இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் இன்னும் பிற நாடுகள்.

*10. ஐ.நா. பொருளாதார (Economic & Social Council) தலைமையகம் எங்குள்ளது?*

 நியூயார்க்.

Monday 18 February 2019

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் சீதனம்:

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் சீதனம்

01. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்
.20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்."
#

ஏழு விதமான ஆச்சரியங்கள்

✅ *ஏழு விதமான ஆச்சரியங்கள்* ....!!!¡¡¡

                1. *மரணம்*
என்பது
நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை
அறிந்த மனிதர்கள்,
கவலைப்படாமல்,
தன் கடமைகளச்
செய்யாமல்
*சிரித்துக் கொண்டிருப்பது*
ஆச்சரியம்.!!!

                2. ஒரு நாளில் *இவ்வுலகம் அழிந்து போகும்* என்பதை அறிந்த மனிதன், *உலகத்தின்மீது*
*மோகம்* கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

              3. எந்த ஒரு செயலும்
*இறைவன் விதித்தபடியே நடக்கும்* என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை
எண்ணி *கவலைப்பட்டுக் கொண்டிருப்பது* ஆச்சரியம்...!!!

               4. *மறுமை வாழ்க்கைக்கான தீர்வு* இவ்வுலகிலேயே இருப்பதை
நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி *அக்கறையின்றி* வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...!!!

              5. *நரக நெருப்பின் வேதனை* பற்றி அறிந்த மனிதன்,
அது பற்றி சிந்திக்காமல் *தொடர்ந்தும் பாவம், தவறு* செய்வது ஆச்சரியம்...!!!

               6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர *வேறு எவருக்கோ வணக்கத்தை*
நிறை வேற்றுவது ஆச்சரியம்...!!!

                 7. *நரகம், சொர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், *உலக செல்வங்களை சேர்த்து* வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது
*ஆச்சரியம்*..!!!!!!!"

Saturday 16 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன?*

ஐக்கிய நாடுகள் சபை (United Nations – UN)

*2. ஐ.நா. சபை ஏன் உருவானது?*

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.

*3. அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன?*

உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.

*4. அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது?*

14.08.1941

*5. 1941-இல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்?*

அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

*6. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?*

இலண்டன்

*7. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?*

1946

*8. ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்?*

பிராங்ளின் ரூஸ்வெல்ட்

*9. ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது?*

லீக் ஆப் நேஷன்ஸ்

*10. லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது?*

1920

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. இந்தியா பாகிஸ்தான் எல்லை கமிஷன் அமைத்தது யார்?*

*விடை:* _சர் சிரில் ராட்கிளிப் (சர் சிரில் ராட்கிளிப்)_

*2. இந்தியா விடுதலையாவதற்கு முன்பு நேரு எத்தனை முறை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்?*

*விடை:* _5 முறை ( 1929, 1930,1936,1937,1946)_

*3. 1948 ஆம் ஆண்டு என்று காந்தி கொல்லப்பட்டார் :*

*விடை:*  _ஜனவரி 30_

*4. நேருவின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற இரண்டாம் பொது தேர்தல்?*

*விடை:* _1957 பிப்ரவரி 25 முதல் மார்ச் 4_

*5. இந்தியா சீனா போர் தொடக்கம் நிகழ்ந்தது எப்போது?*

*விடை :* _1962_

*6. லோக்யுக்தா என்ற அமைப்பு இந்தியாவின் மகாராஷ்டிராவில் இந்தியாவில் ஏறப்படுத்தப்பட்டஆண்டு?*

*விடை:*  _21_

*7. ஒரு மசோதாவை பண மசோதா என முடிவு செய்வது யார்?*

*விடை:*  _சபா நாயகர்_

*8. பாராளுமன்றம் என்பது?*

*விடை:* _ஜனாதிபதி, கீழ் சபை மற்றும் மேல் சபை_

*9. காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணையம் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?*

*விடை:* _1999_

*10. ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சி அதிகாரி ?*

*விடை:* _முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும்_

Friday 15 February 2019

ஜூம்ஆவின் ஒழுங்குகள்:

*ஜூம்ஆவின் ஒழுங்குகள்*

*1. ஜூம்ஆ நேரத்தில் கொடுக்கல் வாங்கலை  விட்டு விட வேண்டும்*
*(அல்குர்ஆன் 62:9)*

*2. குளிப்பு கடமையைப் போல் குளிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1530)*

*3. பல் துலக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*4. தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1538)*

*5. நறுமணம் பூச வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*6. இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1540)*

*7. வாகனத்தில் செல்லாமல் நடந்தே பள்ளிக்கு செல்வது*

*யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு*

*(வாகனத்தில் செல்லாமல் நடந்து) அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*(சூனன் நஸயீ 1364)*

*8. ஜும்ஆ தொழுகைக்காக இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேர காலத்துடன் செல்லுதல், அப்போதுதான் மலக்கு மார்களின் பட்டியலில் பெயரைப் பதித்துக்கொள்ள முடியும் குர்பானியின் நன்மை ஒட்டகம் மாடு ஆடு கோழி முட்டை என்ற வரிசையில் கிடைக்கும்*
*( ஸஹீஹ் புகாரி 929)*

*9. பள்ளிக்குல் நுழைந்த உடன் இடம் இல்லையெனில் யாரையும் நகர சொல்லாமல் யாரையும் பிரிக்காமல் தனக்கு கிடைத்த இடத்தில் நின்று அமர்வதற்கு முன் கூடுதல் தொழுகை தொழ வேண்டும் தொழாமல் அமரக் கூடாது*

*(ஸஹீஹ் புகாரி 910 911,ஸஹீஹ் முஸ்லிம் 1585)*

*10. இமாம் உரை நிகழ்த்த ஆரம்பித்த உடன் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்து உரையை கவனிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1556)*

*11. அருகில் இருப்பவரிடம் மெளனமாக இருங்கள் என்று கூறினாலும் வீண் காரியத்தில் ஈடுபட்டதாக அமைந்துவிடும் (ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1542)*

*12. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.(ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம்_1557)*

*13. இமாம் உரையை கவனமாக செவி தாழ்த்தி கேட்டு விட்டு தொழுகையையும் இமாமமுடன் தொழ வேண்டும்..*
*(ஸஹீஹ்முஸ்லிம்_1556)*

*மேற்கண்ட இவற்றை எல்லாம் சரியாக செய்தீர்கள் ஆனால் முழு ஜூம்ஆ வையும் அடைந்ததாக அமையும் ஜூம்ஆ உடைய கூலி இன்ஷா அல்லாஹ் முழுமையாக கிடைக்கும்*

*மேலும் அடுத்த ஜூம்ஆ வரையும் மேற்க்கொண்டு மூன்று நாட்கள் மொத்தம் வரக்கூடிய 10 நாட்கள் ஏற்படக்கூடிய பாவத்திற்கு பரிகாரமாக அமையும்*

*(ஸஹீஹ்_முஸ்லிம்_1556)*

Wednesday 13 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?*

*2. செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?*

*3. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?*

*4. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?*

*5. இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?*

*6. ’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?*

*7. போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?*

*8. அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?*

*9. ’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?*

*10. ’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?*

📌 *வினாக்கள் :-* _1. வாசுகி, 2. விழுப்புரம், 3. லிட்டில்பாய், 4. காபூல், 5. தியாகம், 6. கிரான்ஸ்டட், 7. நாங்கிங், 8. தைராக்ஸின், 9. பங்காளதேஷ், 10. கே.ஆர்.நாராயணன்.._

Tuesday 12 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?*

*2. அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?*

*3. கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?*

*4. உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?*

*5. ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது ?*

*6. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?*

*7. மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?*

*8. முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?*

*9. செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை கண்டுபிடித்தவர் யார் ?*

*10. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?*


*பதில்கள் :* _1. 100 கோடி, 2. திருவண்ணாமலை, 3. மரினோ, 4. நார்வே அரசு, 5. இந்தோனேஷியா, 6. வைட்டமின் ‘பி’, 7. ஆண் குரங்கு, 8. இங்கிலாந்து, 9. எர்னஸ்ட் வெர்னர், 10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்._

Monday 11 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?*

அ) எம்.எஸ்.சி., சித்ரா

ஆ) எஸ்.எம்., கங்கா

இ) ஆர்.எம்., யமுனா

ஈ) எம்.எம்., அர்ஜூன்

*2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?*

அ) உமர் அப்துல்லா

ஆ) லாலு பிரசாத்

இ) சுரேஷ் கல்மாடி

ஈ) கவாஸ்கர்

*3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?*

அ) போட்டோ போபியா

ஆ) சீட்டோ போபியா

இ) மால்டோ போபியா

ஈ) அகஸ்டிகோ போபியா

*4. உலகின் சிறிய கடல் எது?*

அ) ஆர்டிக் கடல்

ஆ) பசிபிக் கடல்

இ) அன்டார்டிகா கடல்

ஈ) அட்லான்டிக் கடல்

*5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?*

அ) கிரிக்கெட்

ஆ) கூடைப்பந்து

இ கால்பந்து   
ஈ) செஸ்

*6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?*

அ) ரவிவர்மா

ஆ) டேவிட் வர்மா

இ) மைக்கல் ஏன்ஜலோ

ஈ) ஆஸ்டின்

*7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?*

அ) அல் கொய்தா

ஆ) அல் ஜசீரா

இ) மாவோயிஸ்ட்

ஈ) நக்சலைட்

*8. டில்லியின் தற்போதைய முதல்வர் பெயர் என்ன?*

அ) அரவிந்த் கெஜரிவால்

ஆ) மாயாவதி

இ) நிதிஸ் குமார்

ஈ) மோடி

*9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?*

அ) ஜப்பான்

ஆ) நியூசிலாந்து

இ) பிரேசில்

ஈ) பாகிஸ்தான்

*10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?*

அ) கிரிக்கெட்

ஆ) டென்னிஸ்

இ) பாட்மின்டன்

ஈ) கால்பந்து

📌 *விடைகள்*

1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),  9(இ), 10(அ)

உணவு முறையும் உடல் நலமும்.







உணவு முறையும் உடல் நலமும்.

⚅ " கடுமையான நோய்கள் அதை மனிதர்கள் தாங்களாகவே வரவழைக்கிறார்கள்..,

⚄ " அந்த நோய்களிலிருந்து நமது நல்ல செயல்கள்மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம் ,

⚃ " அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .

⚂" நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :-
" சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .

⚁ "சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் ,

⚀ "சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்,

⚅ " சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.

⚄ "மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்..

⚃ " இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் .

⚂ " இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே

⚁ " நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை.

⚀ தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது.

⚅ "தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது.

⚄ " தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.

⚃ "தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ்.

⚂ " தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது.

⚁ " தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன்.

⚀ " அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்.,

⚅ " ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்.,

⚄ " மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல்,

⚃ " உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை,

⚂ " சந்தோஷத்திர்கு திக்ர்.,

⚁ " நல்ல விஷயங்கள் தர்மமாகும்.,

⚀ " நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான்,

⚅ " அப்போது இந்தநன்மைகள் நம்மை "இன்ஷா அல்லாஹ் " வந்தடையும்...!

இன்ஷா அல்லாஹ்!
படித்ததும்..,
பகிர்ந்துவிட்டேன்...
பயனுள்ளது...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வாபரக்காத்துஹூ

Sunday 10 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?*

சகுந்தலா தேவி

*2. மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?*

யாமினி

*3. ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?*

ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்

*4. டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?*

முகம்மது அசாருதீன்

*5.ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?*

வெர்னர் வான் பிரவுன்

*6. எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?*

ஜேம்ஸ் பக்கிள்

*7. நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?*

எட்வர்ட் டெய்லர்

*8. அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?*

ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்

*9. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?*

பி.வான்மாஸர்

*10. பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?*

ஏ.ஜே.கார்னரின்

Friday 8 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?*

ஜப்பான்

*2. உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?*

பேரீச்சை மரம்

*3. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?*

1801

*4. ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?*

Write Once Read Many

*5. பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?*

பனிச் சிறுத்தை

*6. நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை என்னவென்று அழைப்பர்?*

கூகோல்

*7. விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?*

இத்தாலி

*8. தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?*

கூழாங்கல்

*9. எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?*

தவறு

*10. மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?*

சரி

Wednesday 6 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ராகங்கள் மொத்தம் எத்தனை?*

16

*2. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?*

குடை

*3. இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?*

காண்டாமிருகம், யானை, புலி

*4. அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?*

ஸ்வீடன்

*5. ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?*

பூடான்

*6. ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?*

அங்கோலா

*7. ”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?*

தாய்லாந்து

*8. மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?*

மெக்சிகோ

*9. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?*

அமெரிக்கா

*10. அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?*

ரஷ்யா

Tuesday 5 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?*

ஃபின்லாந்து

*2. 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?*

எம்.எஸ்.சுப்புலட்சுமி

*3. ”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?*

கிரேஸி கிரியேஷன்ஸ்

*4. பட்டம்மாளின் பேத்தி யார்?*

நித்யஸ்ரீ மஹாதேவன்

*5. 2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?*

ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)

*6. ”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?*

பி.ஜி.வுட் ஹவுஸ்

*7. இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?*

திரிபுரா

*8. சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?*

ஜி.ஆர்.விஸ்வநாத்

*9. சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?*

டைகர்

*10. இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?*

கூத்தனூர்

Sunday 3 February 2019

வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!!

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

🌏68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.

🌏800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.

🌏400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.

🌏200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.

🌏உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....

🌏சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...

🌏100000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்களாம்...
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....

மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழனடா நீ!!!!!!!!!

🙏தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!!!

🙏தமிழன்டா..........
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

கண்டிப்பாக படித்து பகிரவும் ....

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

'''வாழ்க தமிழ் வளர்க தமிழ்.''' 🌷

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?*

16

*2. இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?*

4

*3. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?*

சேலம்

*5. நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?*

மூன்று

*6. உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?*

உயிரியல்

*7. நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?*

கன்னத்தில் முத்தமிட்டால்

*8. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?*

ராஜகோபாலச்சாரி

*9. ISRO-ன் விரிவாக்கம்?*

Indian Space Research Organization

*10. PSLV-ன் விரிவாக்கம்?*

Polar Satellite Launch Vehicle

Friday 1 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?*

கார்பெட் தேசிய பூங்கா

*2. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*

1983

*3. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?*

ஸ்ரீவில்லிபுத்தூர்

*4. SPCA என்பது?*

Society for the Prevention of Cruelty to Animals

*5. பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?*

தலைமையாசிரியர்

*6. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?*

வீடு

*7. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?*

லாசேன் (சுவிட்சர்லாந்து)

*8. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?*

350

*9. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக்கண்டார்?*

10

*10. முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?*

டெர்மன்