Monday 2 May 2022

ஈதுல் ஃபித்ர் (ஈகை பெருநாள்) நல்வாழ்த்துக்கள்

நோன்புப்பெருநாள் அன்று நாம்  கடைப்பிடிக்க வேண்டிய சுன்னத்தான காரியங்கள்:





1.. அதிகாலையில் விரைவாகஎழுந்து விட வேண்டும்..அதில் பரகத் இருக்கிறது

2.. மிஸ்வாக் செய்து வாயை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்

3.. *பஜ்ர் தொழுகையை* உரிய நேரத்தில் தவறாமல் தொழ வேண்டும்

4..ஈதுல் பித்ர் தொழுகைக்காக குளிக்கிறேன் என *நிய்யத்* வைத்து குளிப்பது 

5.. *புத்தாடை அல்லது இருப்பதில் நல்ல சுத்தமான ஆடையை  அணிவது

6.. *நறுமணம்* பூசிக்கொள்வது
7..மார்க்கத்துக்கு முரண் ஆகாதவாறு *அலங்காரம்* செய்து கொள்வது.

8.. 3/5 என ஒற்றைப்படையாக *பேரீத்தம்பழம் அல்லது வேறு ஏதேனும் இனிப்பு சாப்பிடுவது

9..பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்பே  *ஸதகத்துல் பித்ர்*  கொடுப்பது.

10..பிறை பார்த்ததில் இருந்து பெருநாள் தொழுகை முடியும் வரை அதிகதிமாக *தக்பீர்* ஓதிக் கொள்வது.

11.. உறவினர்களை சந்தித்து பெருநாள் *வாழ்த்துக்கள்* சொல்வது.
 12..எல்லோருடனும் *முஸாபஹா* செய்வது.

13..அன்றைய நாளில் *சந்தோஷமாக* இருக்க வேண்டும்.

14.. அக்கம் பக்கத்தில்  உள்ளவர்களுக்கு உணவு களை பரிமாறிக் கொள்வது*

15.. *அன்பளிப்பு* களை பரிமாறிக் கொள்வது

16.. பெருநாள் தொழுகைக்கு போகும்போது ஒரு *பாதையிலும் வரும்போது ஒரு பாதையிலும்* வருவது

17..அல்லாஹ்விடம் அதிகமாக *துஆ* செய்ய வேண்டும்

18.பெருநாளைக்கு அடுத்த நாளிலிருந்து (ஷவ்வால் மாதம்) 
6 நோன்பு வைப்பது 

***ஈதுவாழ்த்தாக.                        
                            .تقبل الله منا ومنكم صالح الأعمال18.பெருநாளைக்கு
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால் (எல்லா நல் அமல்களையும் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் அல்லாஹ் கபூல் செய்வானாக) என்ற துஆவை கூறுவது 
 
**நமது அனைத்து நல்லமல்களை கபூல் செய்து ஈருலக பாக்கியங்களை அருள்வானாக ஆமீன்  

***அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் (ஈகை பெருநாள்) நல்வாழ்த்துக்கள் 🤲🤲🏻🤲🏽🤲🤲🏻🤲🏽🕌🕌