Sunday, 19 May 2024

🌺இஸ்லாத்தில் ஐந்து கலிமா- தமிழ் மொழிப்பெயர்ப்புடன்🌺

 🌺இஸ்லாத்தில் ஐந்து கலிமா- தமிழ் மொழிப்பெயர்ப்புடன்🌺


1.  அவ்வல் கலிமா தய்யிப்


லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்


பொருள்: வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹு தஆலாவைத் தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள்.


2.  இரண்டாம் கலிமா ஷஹாதத்


அஷ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு


பொருள்: நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவனுடைய அடியாரும் இன்னும் அவனுடைய திருத்தூதருமாக இருக்கிறார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.


3.  மூன்றாம் கலிமா தம்ஜீத்


ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹில் அலிய்யில் அலீம்.


பொருள்: அல்லாஹு தஆலா மிகப் பரிசுத்தமானவன். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன். (பாவங்களை விட்டுத்) திரும்புதலும், இன்னும் (நன்மைகள் செய்யச்) சக்தியும் அல்லாஹு தஆலாவின் உதவியைக் கொண்டே தவிர இல்லை.


4.  நான்காம் கலிமா தவ்ஹீத்


லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பிய திஹில் கைரு வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்


பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு யாதோர் இணையுமில்லை. ஆட்சியெல்லாம் அவனுக்கே, புகழனைத்தும் அவனுக்கே, அவனே (எல்லாப் பொருட்களுக்கும்) உயிர் கொடுக்கிறவன்; அவனே (எல்லாப் பொருட்களையும்) மரணிக்கச் செய்கிறவன், நன்மையெல்லாம் அவன் கைவசமே இருக்கின்றன. அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி உடையவன்.


5.  ஐந்தாம் கலிமா ரத்துல் குப்ர்


அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அன் உஷ்ரிக பிக ஷைஅன்(வ்) வஅன அஃலமு வஅஸ்தஃபிருக லிமாலா அஃலமு இன்னக அன்த அல்லாமுல் குயூப் துப்து அன்ஹு வதபர்ரஃது அன் குல்லி தீனின் ஸிவாதீனில் இஸ்லாம் வ அஸ்லம்து வ ஆமன்து வ அகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி


பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் அறிந்தவனாயிருக்கும் நிலையில் உனக்கு எப்பொருளையும் இணை வைப்பதை விட்டும் உன்னிடம் நான் காவல் தேடுகிறேன். நான் அறியாமல் செய்த பாவங்களுக்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவன். நான் (பாவங்களான) அதனை விட்டும் தவ்பாச் செய்து மீண்டேன். இஸ்லாம் மார்க்கத்தைத் தவிர மற்றெல்லா மார்க்கங்களை விட்டும் நான் நீங்கி விட்டேன். அல்லாஹ்வுக்கு நான் வழிபட்டு விட்டேன். நான் ஈமான் கொண்டேன். லாஇலாஹ இல்லலல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று நான் கூறுகிறேன்.

Tuesday, 26 March 2024

ஜமாஅத் தொழுகைக்கு முன் கூட்டியே வருவதால் நாம் அடையும் நன்மைகள்⭐

 ஜமாஅத் தொழுகைக்கு முன் கூட்டியே வருவதால் நாம் அடையும் நன்மைகள்⭐


✅ தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது உடைய நன்மையை அறிந்தால் அதற்காக விரைந்து செல்வார்கள்.


புகாரி 615


✅ பஜ்ர் மற்றும் இஷா தொழுகையை ஜமாத்தோடு தொழுவதின் நன்மையை அறிந்தால் தவழ்ந்தாவது வருவார்கள்.


புகாரி 615


✅ முதல் வரிசையில் நின்று தொழுவதின் நன்மையை அறிந்தால் அதற்காக போட்டி போடுவார்கள் சீட்டு குலுக்கி போடும் நிலைக்கு செல்வார்கள்..


புகாரி 615


✅ பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது..


அஹ்மத் 13357


✅ தொழுகைக்காக காத்திருக்கும் வரை தொழுத நன்மையே கிடைக்கும்


புகாரி 5869


✅ ஒருவர் தொழுகைக்காக காத்திருக்கும் வரை இறைவா இவரை மன்னித்துவிடு இவருக்கு கருணை காட்டு என்று மலக்குமார்கள் துஆ செய்வார்கள்


புகாரி 659


✅ உளூ செய்து விட்டு பள்ளிவாசலுக்கு நடந்து வந்தால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் பத்து நன்மைகளை இரு வானவர்களும் பதிவு செய்கின்றனர்...


இப்னு ஹிப்பான் 2045


✅ பள்ளிவாசலுக்கு நடந்து வரும் ஒவ்வொரு எட்டும் தர்மம் ஆகும்


புகாரி 2891


✅ பள்ளிவாசலுக்கு நடந்து வரும் இரு காலடிகளில் ஒன்று பாவத்தை அழிக்கின்றது மற்றொன்று அந்தஸ்தை உயர்த்துகின்றது


முஸ்லிம் 1184


✅ பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் அல்லாஹ் சொர்க்கத்தில் அவருக்கு ஒரு இடத்தை தயார் செய்கின்றான்


புகாரி 662


✅ தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவது 27 மடங்கு சிறந்தது


புகாரி 645


✅ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வரும் போதெல்லாம் வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும்போது அவருடைய குடும்பத்தார்கள்  சந்தோஷப்படுவதைப் போன்று அல்லாஹ் சந்தோஷப்படுகின்றான்


முஸ்னத் அஹ்மத் 8065


✅ தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்பவர் அல்லாஹ்வின் விருந்தாளியாவார் விருந்தாளியை கண்ணியப்படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்


அல்முஃஜம் அல்கபீர்  6145


✅ இஷா தொழுகையை ஜமாத்தோடு தொழுதவர் இரவில் பாதி வரை நின்று தொழுதவர் போல் ஆவார்


முஸ்லிம் 1162


✅ பஜ்ர் தொழுகையை ஜமாத்தோடு தொழுதவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போல ஆவார்


முஸ்லிம் 1162


✅ ஃபஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்


முஸ்லிம் 1163


✅ ஐவேளை தொழுகையை பேணுதலாக தொழுபவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கம் கிடைக்கும்


அல்குர்ஆன் 23:9,10,11


✅ பஜ்ரையும் அஸரையும் பேணித் தொழுதவர் சொர்க்கம் புகுவார்


புகாரி 574


✅ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகையின் போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் சந்தித்துக் கொள்கின்றனர்.


புகாரி 7486


 ✅ஃபஜ்ர் நேர தொழுகை அல்லாஹ்விடத்தில் சாட்சி சொல்ல கூடிய நேரமாக இருக்கின்றது


புகாரி 648


✅ பஜ்ரையும் அஸரையும் பேணித் தொழுதவர் முழு நிலவை நெருக்கடி இன்றி பார்ப்பது போல் அல்லாஹ்வை மறுமையில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்


புகாரி 554


✅ அஸரைப் பேணி தொழுதவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு


முஸ்லிம் 1510


✅ ஜமாத் தொழுகையில் ஆண்களின் வரிசையில் சிறந்தது முதல் வரிசையாகும் தீயது கடைசி வரிசையாகும்


முஸ்லிம் 749


✅ முதல் வரிசையில் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான் வானவர்கள் அருளை வேண்டுகின்றனர்


அஹ்மத் 18506


✅ நபியவர்கள் முதல் வரிசையில் தொழுபவருக்கு மூன்று முறையும் இரண்டாவது வரிசையில் தொழுபவருக்கு ஒரு தடவையும் பாவமன்னிப்பு கேட்பவராக இருந்தார்கள்


அஹ்மத் 17141


✅ தொழுகையில் இமாம் ஆமீன் கூறும் பொழுது நீங்கள் ஆமீன் கூறுங்கள் யாருடைய ஆமின் மலக்குமார்களுடைய ஆமினோடு ஒத்துப் போகின்றதோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது


புகாரி 780


குறிப்பு:ஜவேளை தொழுகையில் சப்தமிட்டு ஓதும் ரக்அத்கள் 6 மட்டுமே 


✅ இமாம் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன


புகாரி 796


அன்பானவர்களே இவ்வுலகில் கிடைக்கும் கோடி ரூபாயை விட மறுமையில் கிடைக்கும் ஒரு நன்மை சிறந்தது நன்மைக்கு முந்திக்கொள்ளுங்கள்.