Wednesday, 25 June 2025

குர்ஆனிய தொடர்பு...

 

குர்ஆனிய தொடர்பு...

குர்ஆனை ஓதுகின்ற குர்ஆனோடு தொடர்பு
கொள்கின்ற மனிதர்கள் நால்வகைப் படுகிறார்கள்.என நபி (ஸல்) அவர்கள் வகைப்
படுத்தி கூறினார்கள்.

1. ஸாலிஹான மனிதர் குர்ஆனை ஓதுவார்:
அதனைப்ற்றி ஆராய்வார், அதனுடைய வழியில்
தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வார். இவர் கொழுமிச்சங்காயைப்
போன்றவர். கொழுமிச்சங்காய் அழகிய நறுமணம் மிக்கது நற்சுவையுள்ளது.

2. குர்ஆனை ஓதாத ஸாலிஹான மனிதர்:
குர்ஆனை அடிக்கடி ஓத மாட்டார். ஆயினும்
குர்ஆனுடைய வழியில் தன்னுடைய
வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்.
குர்ஆனைப் பின்பற்றுபவர். இவர்  பேரீச்சம்
பழத்தை போன்றவர். பேரீச்சம் பழம் நல்ல
சுவையுள்ளது. ஆயினும் மணமில்லாதது.

3. குர்ஆனை ஓதும் தீயவன்:
குர்ஆனைப் பின்பற்றும் நோக்கமில்லாமல்
வேறு வேறு நோக்கங்களுக்காக குர்ஆனை
ஓதுபவன். குர்ஆனை உபதேசிப்பவன்.
மக்களிடம் எடுத்துரைப்பவன். இவன் காட்டு
மலருக்கு ஒப்பானவன். காட்டு மலருக்கு
மணமுண்டு ஆனால், சுவையோ பயங்கர
கசப்பு.

4. குர்ஆனை ஓதப் படிக்காத தெரியாத தீயவன்:
படிக்கவும் மாட்டான். பின்பற்றவும் மாட்டான்.
இவனுடைய நிலை எட்டிக்காய்க்கு ஒப்பானது.
எட்டிக்காய் கசப்போ கசப்போ. எந்த மணமும்
கிடையாது. ( நூல்: புகாரி, முஸ்லிம் )

இந்த
நான்கு நிலைகளில் நம்முடைய நிலை
எந்த நிலை உங்கள் மனதிடம் கேள்வியாக!

இறைவா!
குர்ஆனுடைய வாழ்க்கையை வாழும்
பாக்கியத்தைத் தருவாயாக!!

*ஆமீன் ! ஆமீன்!*
*யாரப்பில் ஆலமீன்!!*
.____________
*°,¸¤ª“˜¨¨¯¯¨🍃🌸*

Monday, 23 June 2025

கியாமத் நாளின் 32 சிறிய அடையாளங்கள்

 கியாமத் நாளின் 32 சிறிய அடையாளங்கள்


இது வரை ஏற்பட்டு உள்ள அடையாளங்கள்


 1. மகளின் தயவில் தாய் இருப்பாள்


ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் ! பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள் . இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் !


 ( நூல் : ஸஹீஹ் புகாரி : 50 )


2. பின் தங்கியவர்கள் உயர் நிலை அடைதல்


கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல் .


3. விபச்சாரமும் , மதுப்பழக்கமும் பெருகும்


யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும் , மதுவும் பெருகி விடும் !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 50 )

( நூல் : ஸஹீஹ் புகாரி : 80 )


4. தகுதியற்றவர்களிடம் பொறுப்பு இருக்கும்


ஆட்சியதிகாரம் , நீதி நிர்வாகம் போன்ற எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள் !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 6496 )


5. பாலை வனம் சோலை வனமாகும் அரபுப் பிரதேசம் நதிகளும் , சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது


( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் )


 6. காலம் சுருங்குதல்


காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது .

( இன்றைய ) ஒரு வருடம் ( அன்று ) ஒரு வாரம் போலாகி விடும் . ( இன்றைய ) ஒரு வாரம் ( அன்று ) ஒரு நாள் போலாகும் . ( இன்றைய ) ஒரு நாள் ( அன்று ) ஒரு மணி நேரம் போல் ஆகும் . ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் !


 ( நூல் : திர்மிதீ : 2254 )


 7. கொலைகள் பெருகி விடும் 


கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் ஆகும் !


 ( நூல் : ஸஹீஹ் புகாரி : 1036 ) 


8. நில அதிர்வுகளும் , பூகம்பங்களும் அதிகரித்தல்


பூகம்பங்கள் அதிகமாகும் வரை கியாம நாள் ஏற்படாது !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 1036 )


9. பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது


மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் !


( நூல் : நஸயி : 682 )


10. நெருக்கமான கடைவீதிகள் ஏற்படும்


நெருக்கமான கடை வீதிகள் ஏற்படும் கடைகள் பெருகி அருகருகே அமைவதும் , நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் ஆகும் ! 


( நூல் : அஹ்மத் : 10306 )


11. பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்


ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும் .


( நூல் : ஸஹீஹ் புகாரி : 81 )


12. ஆடை அணிந்தும் நிர்வாணிகள்


ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் !


 ( நூல் : ஸஹீஹ் முஸ்லிம்: 3971 )


13. தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்


தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று ! 


( நூல் : ஹாகிம் : 493 )


14. மரணிக்க ஆசைப்படுதல்


கபூரில் உள்ளவரை பார்த்து நானும் இது போன்று இருந்து இருக்க கூடாதா ! என்று எண்ணம் தோன்றும் !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 7115 )


15. முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள்


ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 7121 )


16. பேச்சைத் தொழிலாக்கி அதன் மூலம் சாப்பிடுவார்கள்


தங்கள் நாவுகளை ( மூல தனமாகக் ) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது !


( நூல் : அஹ்மத் : 1511 )


17. அமல்கள் குறையும் - கஞ்சத்தனம் ஏற்படும் காலம் சுருங்கிவிடும் !


அமல் குறைந்துபோய்விடும் ! மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும் !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 7061 )


18. ஹலால் - ஹராம் தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் ( இனி ) வரும் !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 2059 )


19. காரணம் இன்றி கொலை


கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது . கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது ! 


( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 5574 )


20. புதிய வகை நோய்


புதிய வகை நோய் வந்து அதிகமானோர் மரணம் அடைவார்கள் : ஆடுகளுக்கு வருகிற ( ஒரு வகை ) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் ( அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள் ) 


( நூல் : ஸஹீஹ் புகாரி : 3176 )


21. நபி ( ஸல் ) அவர்களின் மரணம்


என்னுடைய மரணம் ஏற்பட்டு விட்டால் கியாமத் நாளை எதிர்பாருங்கள் !


 ( நூல் : ஸஹீஹ் புகாரி : 3176 )


22. உயிரற்ற பொருட்கள் பேசுவது


விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி . 


( நூல் : அஹ்மத் : 11365 )


இது வரை நிகழாத அடையாளங்கள்


23. மாபெரும் யுத்தம்


இரண்டு மகத்தான சக்திகளுக்குமிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது . அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும் . இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள் .


( நூல் : புகாரி : 3609 )


24. யூதர்கள் உடன் போர்


 நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 2926 )


25. கஃபா சேதப்படுத்தப்படுதல்


அபிஸினியாவைச் சேர்ந்த , மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள் .


 ( நூல் : ஸஹீஹ் புகாரி : 1596 )


26. யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்


யூப்ரடீஸ் ( ஃபுராத் ) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும் . அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் ! 


( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 7119 )


27. கஹ்தான் இன மன்னரின் ஆட்சி


கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 3517 )


28. அல்ஜஹ்ஜாஹ் மன்னர்


ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது !


 ( நூல் : ஸஹீஹ் முஸ்லீம் : 5580 )


29. வாரி வழங்கும் கலீஃபா


கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா ( ஆட்சியாளர் ) தோன்றுவார் . அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார்


( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் )


30. செல்வம் பெருகும்


செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது ! எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் அதனை அற்பமாகக் கருதுவார் !


( நூல் : ஸஹீஹ் புகாரி : 3176 )


31. தர்மப் பொருள்


தம் தர்மப் பொருளை பெற யாரும் இருக்க மாட்டார்கள் ! 


( நூல் : ஸஹீஹ் புஹாரி : 7120 )


32. பைத்துல் முக்கதிஸ்


இறுதி நாளின் அடையாளம் பைத்துல் முக்கத்திஸ் வெற்றி கொள்ளப்படும் !


 ( நூல்  : ஸஹீஹ் புஹாரி : 3176 )