Sunday 7 August 2022

ஆஷுரா நாளில் செய்ய வேண்டிய பத்து நற்செயல்கள்:

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஆஷுரா நாளில் செய்ய வேண்டிய பத்து நற்செயல்கள்:


*1-பிறை 9-10 ல் நோன்பு நோற்பது* அதனால் கடந்த ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது 



*2-தன் குடும்பத்திற்கு தாராளமாக செலவு செய்வது*

 அதனால் ஆண்டு முழுவதும் விசாலமான வாழ்வாதாரத்தை அல்லாஹ் வழங்குவான்

 

*3-யாரேனும் ஒருவர் ஒரு நாளில் நோன்பு நோற்று* 

*ஏழைக்கு உணவளித்து நோயாளியை நலன் விசாரித்து ஜனாஸாவில் கலந்து கொண்டால்* 

*அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்* எனவே *ஒரே நாளில் இந்த நான்கு காரியங்களையும்* செய்திட முயற்சிக்க வேண்டும்


* 4-அதிகமாக (ஸதகா)*

*தர்மம் செய்வது* 


*5-நோன்பாளிகளுக்கு ஸஹர் இஃப்தாருக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது* 


*6-குளித்து சுத்தமாக இருப்பது இதனால் ஆண்டு முழுவதும் பெரும் வியாதி லிருந்து பாதுகாப்பு கிடைக்கும்*


*7-தந்தை இல்லாத அனாதை (யதீம்)களின்* *அன்பாக ஆதரவாக தலையை தடவி உதவி செய்வது* 

*அதனால் உள்ளத்தில் இரக்க குணமும் கணக்கிட முடியாத நன்மைகளும் கிடைக்கும்*


*8-பசித்தவர்களுக்கு உணவும் தாகித்தவர்களுக்கு நீரும் கொடுப்பது* 


*9-முடிந்தளவு ஆஷுரா இரவில்  அதிக அமல்கள் செய்வது* 


*10-அதிகமாக துஆக்கள் செய்வது குறிப்பாக சிறப்பு மிக்க துஆக்களை அதிகமாக ஓதுவது*


நமது அமல்களை அல்லாஹ் கபூல் செய்து நிரந்தரமான நிலையான ஈமானையும் நல்அமல்களையும் அஃப்வு என்னும் மன்னிப்பையும் ஆஃபியத் எனும் ஆரோக்கியத்தையும் நம் அனைவருக்கும் அருள்வானாக 

உங்கள் துஆவில் மறக்காமல் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் 

வஸ்ஸலாம்

No comments:

Post a Comment