Wednesday 20 August 2014

குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா?- மௌலவியா எம். வை. மஸிய்யா B.A هل يستطيع الإنسان أن يغير أخلاقه؟

காட்டில் வாழ்கின்ற மிருகங்களைக் கூட அவற்றின் குணங்களை மாற்றி மனிதனுடன் வாழப்பழக்க முடிகின்றது. இதற்கு வேட்டை நாய்கள், பந்தயக் குதிரைகள் போன்றவறரை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வாறு பல பயங்கரமான மிருகங்கள்  அவைகளுடைய இயல்பான குணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு மனிதனுடன் சேர்ந்து வாழப்பழக்கப்பட்டுள்ளனவே!
மனிதனுடைய குணங்களை மாற்றிடலாம் என்பதையே அல்குர்ஆனும், நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன. அவை நற்குணங்களைத் தூண்டிக் கொண்டும், கெட்டகுணங்களை எச்சரிக்கை செய்துகொண்டும் இருக்கின்றன. குணங்களை மாற்றிக்கொள்வது அசாத்தியமானது என்றிருந்தால் அல்குர்ஆனோ, சுன்னாவோ அதனை வலியுறுத்தியிருக்கமாட்டா. அல்லாஹ் கூறுகிறான்:

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا

சிலர் கெட்டவர்களாகவும், தீய குணம் கொண்டவர்களாகவும், கடின சித்தம் உடையவர்களாகவும் இருப்பதை இன்று நாம் நிதர்சனமாகக் காண்கின்றோம். இவர்களில் யாராவது தனது ஆன்மாவை நற்குணங்களுக்கு பழக்கப்படுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி, அதற்காக முயற்சி செய்தால் தனது குணங்களைத் திருத்திப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும். அவர் தனது குணங்களைத் திருத்திக் கொள்ளத் தக்க காரணிகளைக் காட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.
குணங்கள் மாற்றங்களுக்கு உடன்பாடானவை என்பதை அறிந்து கொண்டது போலவே தீய குணங்களை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலானவர்கள் தீயகுணங்களை அறிந்து வைத்துள்ளனர் . எனவே, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டுள்ளனர். ஆகவே, நற்குணங்களை எடுத்து நடப்பதற்கான வழிமுறைகளையும், தீய குணங்களிலிருந்த விடுபடுவதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
காட்டில் வாழ்கின்ற மிருகங்களைக் கூட அவற்றின் குணங்களை மாற்றி மனிதனுடன் வாழப்பழக்க முடிகின்றது. இதற்கு வேட்டை நாய்கள், பந்தயக் குதிரைகள் போன்றவறரை உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வாறு பல பயங்கரமான மிருகங்கள்  அவைகளுடைய இயல்பான குணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு மனிதனுடன் சேர்ந்து வாழப்பழக்கப்பட்டுள்ளனவே!
மனிதனுடைய குணங்களை மாற்றிடலாம் என்பதையே அல்குர்ஆனும், நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன. அவை நற்குணங்களைத் தூண்டிக் கொண்டும், கெட்டகுணங்களை எச்சரிக்கை செய்துகொண்டும் இருக்கின்றன. குணங்களை மாற்றிக்கொள்வது அசாத்தியமானது என்றிருந்தால் அல்குர்ஆனோ, சுன்னாவோ அதனை வலியுறுத்தியிருக்கமாட்டா. அல்லாஹ் கூறுகிறான்:

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا

சிலர் கெட்டவர்களாகவும், தீய குணம் கொண்டவர்களாகவும், கடின சித்தம் உடையவர்களாகவும் இருப்பதை இன்று நாம் நிதர்சனமாகக் காண்கின்றோம். இவர்களில் யாராவது தனது ஆன்மாவை நற்குணங்களுக்கு பழக்கப்படுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி, அதற்காக முயற்சி செய்தால் தனது குணங்களைத் திருத்திப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள முடியும். அவர் தனது குணங்களைத் திருத்திக் கொள்ளத் தக்க காரணிகளைக் காட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.
குணங்கள் மாற்றங்களுக்கு உடன்பாடானவை என்பதை அறிந்து கொண்டது போலவே தீய குணங்களை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலானவர்கள் தீயகுணங்களை அறிந்து வைத்துள்ளனர் . எனவே, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டுள்ளனர். ஆகவே, நற்குணங்களை எடுத்து நடப்பதற்கான வழிமுறைகளையும், தீய குணங்களிலிருந்த விடுபடுவதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment