Friday 20 July 2018

குர்ஆன் போதிப்பது என்ன ? சிறு தொகுப்பு!!!


*︵︻︵︻︵︻︵︻︵︻︵︻︵︻︵︻*
*✨بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ✨*
*︶︼︶︼︶︼︶︼︶      
குர்ஆன் போதிப்பது என்ன ?
சிறு தொகுப்பு!!!

..  ஒப்பந்தங்களை முறித்துமாறு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:27,16:92*
.. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.
*குர்ஆன் 2:27,47:22*
.. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.
*குர்ஆன் 2:42*
..  நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.
*குர்ஆன் 2:44 61:2*
.. பூமியில் குழப்பம் செய்து திரிய கூடாது.
*குர்ஆன் 2:60*
..  ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்க கூடாது.
*குர்ஆன் 2:79*
.. பெற்றோருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும்
*குர்ஆன் 2:83*
... வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது.
*குர்ஆன் 2:84*
.. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்றியுங்கள்.
*குர்ஆன் 2:109*
..  நல்லவற்றை/ தூயவற்றையே சாப்பிட வேண்டும்.
*குர்ஆன் 2:168 ,172*
.. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்ற கூடாது.
*குர்ஆன் 2:170*
.. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும்,  ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளுக்கும் கொடுத்து, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.
*குர்ஆன் 2:177*
.. மற்ற மனிதர்களின் சொத்துக்களை அபகரிக்க கூடாது. லஞ்சம் கொடுக்க கூடாது.
*குர்ஆன் 2:188*
.. உங்களுடன் போர் புரிபவர்களோடே போர் புரிய வேண்டும். அதிலும் வரம்பு மீற கூடாது. போர் செய்யாது விலகிக்கொண்டால், அநியாய காரர்கள் மீதே தவிர வேறு எவர் மீதும் பகைமை கொல்ல கூடாது.
*குர்ஆன் 2:190-193*
எதிரிகளில் ஒருவன் அடைக்களம் கேட்டால் கொடுத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும்
*குர்ஆன் 9:6*
உங்களுடன் போரிட சக்தியற்றவர்களுடன் போர் செய்ய கூடாது. அவர்கள் எதிரியாக இருந்தாலும் சரி
*குர்ஆன் 4:90*
எதிரிகள் சமாதானத்தை விரும்பினால், சமாதனமாக வேண்டும்.
*குர்ஆன் 8:61*
அப்பாவிகளை பலவீனர்களை காப்பாற்றவே போர் செய்ய வேண்டும்.
*குர்ஆன் 4:75*
..  பூமியில் குழப்பம் செய்ய, விவசாயத்தை அழிக்க கூடாது..
*குர்ஆன் 2:205*
.. நல்ல வழியில் அநாதைகளுக்கு குடும்பத்திற்க  வழிப்போக்கர்களுக்கு தர்மம் செய.
*குர்ஆன் 2:215*
.. மதுபானம் சூதாட்டம் கூடாது.
*குர்ஆன் 5:90*
.. அநாதைகளை சீர்திருத்தி பராமரிக்க வேண்டும்.
*குர்ஆன் 2:220*
...மாதவிடாய் காலத்தில் உடலுறவு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:222*
... தர்மத்தை தனக்கு தரும் கடனாக இறைவன் பார்க்கிறான். அக்கடனை திருப்பி கொடுத்துவிடுவான்.
*குர்ஆன் 2:245*
.. . மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
*குர்ஆன் 2:256 10:99 18:29*
,... தர்மம் செய்து விட்டு சொல்லிக்காட்ட கூடாது.
*குர்ஆன் 2:262-264*
.. நல்லதையே தர்மம் செய்ய வேண்டும்..
*குர்ஆன் 2:267*
... தேவையுள்ளவர்களை கண்டுபிடித்து உதவ வேண்டும்.
*குர்ஆன் 2:273*
....வட்டி வாங்க கூடாது.
*குர்ஆன் 2:275-276,279*
... கடன் வாங்கியவருக்கு திருப்பி தர முடியாவிட்டால், அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
*குர்ஆன் 2:280*
....கடன்  கொடுக்கல் வாங்கல்களை எழுதி கொள்ள வேண்டும். அதற்காக நல்ல சாட்சியாளர்களை வைத்து கொள்ள வேண்டும்.
எழுத முடியாவிட்டால், அடைமானங்களை வைத்து செய்ய வேண்டும்.
*குர்ஆன் 2:281-282*
... .நன்மையானவற்றை ஏவி தீயதை தடு.
*குர்ஆன் 3;104,110,114*
..கோபத்தை அடக்கிகொள்.  மனிதர்களை மன்னித்து விடு.
*குர்ஆன் 3:134*
.. தவறு என்று அறிந்த பின் அதில் தொடர்ந்து இருக்காதே.
*குர்ஆன் 3:135*
... மற்றவர்களுடன் மென்மையாக நடந்து,சொல்லில் கடுமையாக இல்லாமலும், மற்றவர்களுடன் ஆலோசனை செய்பவராக இருக்க வேண்டும்.
*குர்ஆன் 3:159*
... கஞ்சத்தனம் கூடாது.
*குர்ஆன் 3:180*
.. மற்றவர்களின் நோவினை செய்யும் வார்த்தைகளை கேட்டாலும், பொறுமையாக இரு.
*குர்ஆன் 3:186*
...வானங்கள் பூமியின் படைப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும்.
*குர்ஆன் 3:190-191*
.. நற்கூலி வழங்கப்படுவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை.
*குர்ஆன் 3:195 4:124 16:97 40:40*
....இறந்தவர் விட்டு செல்லும் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு.
*குர்ஆன் 4:7*
... சொத்து பிரிக்கும் போது அவ்விடத்திற்கு,  அநாதையோ, ஏழையோ வந்தால்  அவர்களுக்கும் ஏதாவது கொடுத்து, அன்பான வார்த்தைகளை அவர்களுக்கு கூற வேண்டும்.
*குர்ஆன் 4:8*
... அநாதைகளின் சொத்துக்களை  , அவர்களை பராமரிப்பதாக கூறி சாப்பிட கூடாது..
*குர்ஆன் 4:6,10*
... பெண்களை வற்புருத்தி திருமணம் முடிக்க கூடாது.
மனைவிகளுடன் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் விசயத்திலும் அநேக நன்மைகள் இருக்கும்.
*குர்ஆன் 4:19*
.... திருமணம் முடிக்க, பெண்ணுக்கு மனக்கொடையை ஆண் கொடுக்க வேண்டும்.
அவளை விவாகரத்து செய்யும்போது, ஒரு பொற்குவியலை கொடுத்திருந்தாலும் திருப்பி கேட்க கூடாது.
*குர்ஆன் 4:4,20*
..நெருங்கிய இரத்த உறவுகளை, திருமணம் முடிக்க கூடாது.
*குர்ஆன் 4:22-23*
,.. மற்றவர்களின் சொத்தை அநியாயமாக உண்ண கூடாது.
தங்களை தாங்களே அழித்து கொள்ள கூடாது.
*குர்ஆன் 4:29*
.... ஆண்களே பெண்களுக்கு செலவழிக்க வேண்டும்.
*குர்ஆன் 4:34*
... பெற்றோருக்கு,உறவினர், அநாதைகளுக்கு, ஏழைகளுக்கு, உறவினரான அயலவர், உறவினரல்லாத அயலவர், நண்பர்கள், வழிப்போக்கர்கள், அடிமைகளுக்கு உபகாரம் செய்ய வேண்டும்.
*குர்ஆன் 4:35*
....  மனிதர்களுக்கு தீர்ப்பு கூறினால் நீதமாக தீர்ப்பளிக்க வேண்டும்.  ஒப்படைக்கப்பட்டவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*குர்ஆன் 4:58*
....அப்பாவிகளை பாதுகாக்கவே போர்.
*குர்ஆன் 4:75*
..நன்மையானவற்றிற்காக பரிந்துரைத்தால், அந்நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு..
*குர்ஆன் 4:85*
...உங்களை எதிர்த்து போரிட இயலாத எதிரிகளை ஒன்றும் செய்ய கூடாது.
*குர்ஆன் 4:90*
.. மோசடி காரர்களுக்காக வாதாட கூடாது.
*குர்ஆன் 4:107*
.. பாதிக்கப்படுவது நீங்களாக, உங்கள் உறவினராக இருந்தாலும் நீதியை நிலை நிறுத்தியே சாட்சி சொல்ல வேண்டும்.
*குர்ஆன் 4:135*
*_..நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும்._*
*_பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடாது._*
*குர்ஆன் 5:2*
*_ .. ஒரு உயிரை நியாயமின்றி,கொலை செய்தால் அவர் முழு மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்._*
*_ஒரு உயிரை வாழ வைத்தால், அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்._*
*குர்ஆன் 5:32*
*_முஸ்லிம் அரசாங்கத்தின் கீழ் வாழும் ஒரு முஸ்லிமல்லாதவரை அநியாயமாக கொலை செய்பவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது._*
*(புஹாரி)*
*_... கெட்டவை அதிகமாக இருந்தாலும் , நல்லவையும் கெட்டவையும் சமமல்ல.._*
*குர்ஆன் 5:100*
*_. .. மாற்று மதத்தவர்களால் கடவுளென நம்பப்படுபவர்களை ஏச கூடாது._*
*குர்ஆன் 6:108*
*_.. பெரும்பாண்மையை  வைத்து எதையும் நல்லது என்று தீர்மானிக்க கூடாது_*
*குர்ஆன் 6:116*
*_..   தம் குழந்தைகளை  வறுமைக்கு பயந்து கொல்ல கூடாது._*
*_மானக்கேடானதில் இரகசியமானவற்றையோ, வெளிப்படையான வற்றையோ நெருங்க கூடாது._*
*_எந்த உயிரையும் உரிமையின்றி கொல்ல கூடாது._*
*குர்ஆன் 6:151*
*_.. அளவை நிறுவையில் நேர்மையாக இரு.._*
*_பாதிக்கபடுவது உறவினராக இருந்தாலும் நீதத்தையே கூறு._*
*குர்ஆன் 6:152*
*_.. ஒருவரின் பாவச்சுமைகளை மற்றவர் சுமக்க முடியாது._*
*குர்ஆன் 6:164*
*..இறைவனை பிரார்த்தனை செய்யும்போது, பணிவாகவும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.!*
*குர்ஆன் தரவேண்டும்.*,,,,,
*_.. அளவை நிறுவையில் மோசடி கூடாது._*
*குர்ஆன் 7:85*
*_ ..  மன்னிப்பதை கைக்கொண்டு, நன்மையை ஏவி, அறிவிலிகளை புறக்கணித்து விடு._*
*குர்ஆன் 7:199*
*_ ..  பெற்றோருக்கு நன்றி செலுத்த வேண்டும்._*
*_மார்க்க விசயத்திலே மட்டுமே கட்டுபட கூடாது._*
*_அவர்கள் முதுமையை அடைந்தால், அவர்களுக்கு 'சீ' என்று கூட கண்ணிய குறைவாக பேச கூடாது._*
*_அவர்களை விரட்டிவிட கூடாது._*
*_அவர்களுடன் பணிவாக இரக்கமாக நடக்க வேண்டும்._*
*குர்ஆன் 17:23-24 31:14-15*
*_இறைவனுக்கு நன்றி செலுத்து என்பதுடன் இணைத்து பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று கூறுகிறது._*
*குர்ஆன் 31:14*
*_ .. வீண் விரயம் செய்ய கூடாது. கஞ்சத்தனம் கூடாது._*
*குர்ஆன் 17:27-29*
*_...விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவும் கூடாது._*
*குர்ஆன் 17:32*
*_...கர்வம் கொண்டு நடக்க கூடாது. பணிவாக நடக்க வேண்டும்._*
*குர்ஆன் 17:37 31:18 25:63*
*_....பேசினால் நல்லதையே பேச வேண்டும்._*
*குர்ஆன் 17:53*
*_ .. பார்வையை தாழ்த்தி கற்பை பாதுகாத்துக்கொள்._*
*குர்ஆன் 24:30-31*
*_.. பொய் சாட்சி சொல்ல கூடாது._*
*_வீணான காரியங்களில் ஈடுபடாதே._*
*குர்ஆன் 25:72*
*_...  மற்ற மனிதர்களிடமிருந்து முகத்தை திருப்பிக்கொள்ளாதே!_* *_கர்வமாக நடக்காதே!_*
*_சத்தத்தை தாழ்த்திக்கொள்!_*
*குர்ஆன் 31:18-19*
*_..  மற்றவரை கேலி செய்யாதே!_*
*_கெட்ட பெயர் வைத்து கூப்பிடாதே!_*
*_புறம் பேசாதே!_*
*_துருவி துருவி மற்றவனை குறை தேடாதே!_*
*குர்ஆன் 49:11-12*
*_... மனிதர்கள் அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளே!_*
*_எவருக்கும் எவரை விடவும் சிறப்பு இல்லை!_*
*_கோத்திரங்கள், கிளைகளை ஆக்கியது அறிமுகமாகிக்கொள்வதற்காகவே!_*
*_உங்களில் சிறந்தவர் பயபக்தி உடையவரே!_*
*குர்ஆன் 49:13*
*_.... உங்களுடன் மார்க்க விசயத்தில் போரிடாத, வீட்டிலிருந்து வெளியேற்றாத மாற்று மதத்தவர்களுக்கு நன்மை செய்._*
*குர்ஆன் 60:8.*
*_....ஏழைகளுக்கு உணவளி, உணவளிக்க மற்றவர்களை தூண்டு!_*
*_இதை செய்யாதவர்களுக்கு கேடு.. நரகமே தங்குமிடம்._*
*குர்ஆன் 74:42-44 107:1-3*
*_சுவர்க்கம் போக இது முக்கிய காரணம்._*
*குர்ஆன் 76:8-12*
*_. .. குறை கூறி புறம் பேசி திரியாதே!_*
*குர்ஆன் 104:1*
*_அநாதைகளை ஒடுக்காதே!_*
*_யாசிப்போரை விரட்டாதே!_*
*குர்ஆன் 93:9-10*
*_பசித்தோருக்கு உணவளி._*
*குர்ஆன் 90:13-16*

No comments:

Post a Comment