Thursday 7 March 2019

மாதவிடாய்!!!



#மாதவிடாய்

மாதத்தில் 25 நாட்கள் நாம்மோடு நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை உரணர்த்துபவள் 5 நாட்கள் மட்டும் நரகத்தில் வாழ்கிறாள் என்பதை நாம் உணர்வது இல்லை....

அவள் அந்த நாட்களில் நிம்மதியாக அமருவதும் இல்லை.. பொது இடங்களில் செல்வதும் இல்லை....

அதை அவளாக விரும்பி ஏற்றுக் கொள்ள வில்லை அதை அவளால் தடுக்கவும் முடியாது...

தன் சகோதரனின் கூட சொல்ல முடியாது அந்த வேதனையை.....

ஒரு சில ஆண்மகன்கள் அவளின் உதிரத்தின் வாடையில் கொமட்டலும் வாந்தியும் வரும் என்று கூறும்போது அவளிடம் இருந்து சுகத்தை பருகும் போது எங்கே சென்றது என தெரியவில்லை.....

அவள் அந்த நாட்களில் அடையும் வேதனையை அந்த கடவுளும் அறியானோ.....

உனக்காக 25 நாட்கள் உன்னோடு வாழும் அவளுக்காக 5, நாட்கள் அவளுக்காக வாழுங்கள் வேற ஏதும் வேண்டாம்...

அவளை ஒதுக்கி வைக்காமல் அவளிடம் அன்பாக பேசி அவளின் வேதனையை புரிந்து கொள்ளுங்கள்..

அவள் மீதம் உள்ள நாட்களில் உங்களுக்காக வாழ்வாள்...

உன் ஆடையில் ஏதோ ஒரு சிறிய கரை பட்டாலே அசிங்கமாக நினைக்கும் நீ அவளை பார்த்து சிரித்துக் கொள்வது ஏனோ...

அவளுக்கு அந்த முதல் நாள் எப்படி எங்கே தொடங்கும் என தெரியாமல் அவள் அடையும் வேதனையை வார்த்தைகளால் கூறி விட முடியாது....

நீ ஒரு பெண்ணுக்கு எந்த உறவாக வேணாலும் இரு ஆனால் அந்த நாட்களில் 2 வயது குழந்தைக்கு தாயாக இருப்பது போல் இரு.. அதுவே போதும் அவளுக்கு உனக்காக வாழ்வாள்.....

*ஆண்களுக்கு அந்த வேதனையை கொடுக்காத இறைவன்*

♾🌹♾🌹♾🌹♾🌹♾🌹♾
         

No comments:

Post a Comment