Tuesday 25 December 2018

☆☆☆"வாங்க சிரிக்கலாம்"..☆☆☆

☆☆☆"வாங்க சிரிக்கலாம்"..☆☆☆

■""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.''
●""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.''

■""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?''
●""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.''

■""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?''
●""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!''

■""ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?''
●""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!''

■கேள்வி: Love marriage’கும் arranged marriage’கும் என்ன வித்தியாசம்???
●பதில்: நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!, அப்படியில்லாம பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!!

■ஒருவர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
●இன்னொருவர்: யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
■ஒருவர்: நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

■ஒருவர்: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவிக் கொடுக்குறீங்க?
●இன்னொருவர்: டாக்டர் தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

■ஒருவர்: தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு?
●இன்னொருவர்: ஏன்?
ஒருவர்: டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு ■பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

■ஒருவர்: தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
●இன்னொருவர்: இருய்யா.. எனக்கு ஒரு செருப்புத் தான் கிடைச்சிருக்கு...!

■தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
●மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

■ஒருவர்: எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
●இன்னொருவர்: என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
■ஒருவர்: இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
●இன்னொருவர்: இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

■ஒருவர்: ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
●இன்னொருவர்: இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"

■ஒருவர்: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகும் கூட ஆள் மாறவே இல்லைங்க.!
மற்றொருவர்: அப்படியா.. பரவாயில்லையே!
●ஒருவர்: அட நீங்கவேற., அவர் எனக்கு தர வேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் திருப்பி தரவேயில்லைன்னு சொல்லவந்தேன்.

■ஒருவர்: உன்னுடைய மாத வருமானம் ரூபாய் 500-ன்னு உன்னோட ரேசன் கார்டுல போட்டிருக்கே அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய பங்களாவை உன்னால கட்ட முடிஞ்சது..?
●மற்றொருவர்: இதெல்லாம் நான் என்னுடைய ‘நாள்’ வருமானத்தில கட்டினது..!

■நீதிபதி: ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது நூறு ரூபாய் அபராதம் இரண்டில் எது வேண்டும் உனக்கு..?
●குற்றவாளி: நூறு ரூபாய் கொடுங்க சாமி அது போதும்..!

■மனைவி: என்னங்க இது., ஒருவாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்றீங்க..?
●கணவன்: (கோபமாக) நீதானடி ‘டெய்லி’ காலண்டர் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னே..!

■நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
●டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

No comments:

Post a Comment