Friday 28 December 2018

இறுதிநாளின் அடையாளங்கள் ( குர்ஆனிலிருந்து):

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

உலகம் அழியும் போது ஏற்படும் நிகழ்வுகள் குறித்து #இஸ்லாம் கூறும் விளக்கம் :

1. இறுதிநாளின் அடையாளங்கள் ( குர்ஆனிலிருந்து):

1. ய்ஃஜுஜ், மாஃஜுஜ் கூட்டத்தாரின் வருகை
(18:94)(21:96)

2. புகைமண்டலம் உருவாகுதல் (44:10)

3.குர்ஆனை நம்பாதோரை இனங்காட்டி பேசுகின்ற பிராணியின் வருகை
(27:82)

4. ஈஸாநபியின் வருகை
(4:159)(19:33)(43:61)

" #இறுதிநாளின் ஆரம்ப நிகழ்வுகள் :

1. சூரியன் சுருட்டப்படும்.

2. நட்சத்திரங்கள் வானிலிருந்து உதிர்ந்துவிடும்.

3. மலைகள் அனைத்தும் பூமியிலிருந்து பெயர்த்து எடுக்கப்படும்.

4. கருவுற்ற #ஒட்டகங்கள் கவனிப்பாரின்றி திரியும்.

5. விலங்குகள் அனைத்தும் ஒன்றாக திரட்டப்படும்.

6. கடல்கள் தீமூட்டப்பட்டு எரிக்கப்படும்.

7. உயிர்கள் அனைத்தும் தன் உடல்களுடன் ஒன்று சேர்க்கப்படும்.

8&9. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்குழந்தையை எழுப்பி என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டாள் என விசாரிக்கப்படும்.

10. வினைபதிவேடுகள் ( நன்மை, தீமை பதியப்பட்ட ஏடு) விரிக்கப்படும்.

11. வானம் பிளக்கப்பட்டு அகற்றப்படும்.

12. நரகம் கொழுந்துவிட்டு எரிக்கப்படும்.
(81:1to 12 )

13. குழந்தைகள் நரைத்த கிழவர்களைபோல் காட்சி அளிப்பார்கள்.
(73:17)

14. பாலூட்டும்தாய் தனது குழந்தையை மறந்துவிடுவாள். (22:2)

15. கர்பமுடைய #பெண் தன்வயிற்றில் இருக்கும் குழந்தையை பயத்தால் ஈன்றுவிடுவாள்.
(22:2 )

16. மனிதன் தனக்கு எதிராகவே #சாட்சி கூறுவான்.!
(24:24)

17.மனிதனின் உற்றார் உறவினர்கள் அவனைவிட்டு ஓடுவார்கள்.
(6:94)(16:111)(31:33)(35:18)(60:3)(75:10)(80:35)

18. தீயோர் நீலநிறக்கண்களுடன் எழுப்பப்படுவார்கள்.
(20:102)

19. காலோடு #கால் பின்னிக்கொள்ளும்.
(75:29, 30)

20. மனிதன் செருப்புஅணியாத நிலையில் எழுப்பப்படுவான்.!
புகாரி :4740

21. மனிதன் #ஆடை அணியாத நிலையில் எழுப்பப்படுவான்.!
புகாரி : 4740

22. மனிதன் #விருத்தசேனம் (சுன்னத்) செய்யப்படாத நிலையில் எழுப்பப்படுவான்.!
புகாரி :4740

" நடந்து முடிந்த #ஐந்து மறுமைநாளின் அடையாளங்கள் யாவை? "

1. புகை.

2. ரோமர்கள் பாரசீகர்களால்
தோற்கடிக்கப்பட்டு மீண்டும்
வெற்றிபெற்றது.

3.சந்திரன் பிளந்தது.

4. பத்ருப்போரில் ஏதிரிகள் வெற்றியடைந்தது.

5.இறைவனின் #தண்டனை ( 7ஆண்டுகள் ஏற்பட்ட கடும் பஞ்சம். ஆதாரம் : புகாரி :4820, 4825

" #இறுதிநாளின்^அடையாளங்கள் "
NOTE : ஹதீஸிலிருந்து தொகுக்கப்பட்டவை :

1. ஒரு அடிமைப்பெண் தன் எஜமானை பெற்றெடுப்பாள்.
புகாரி :4777

2. காலில் செருப்பணியாத, நிர்வாணமாணவர்கள் மக்களின் தலைவராவார்கள்.
புகாரி : 4777

3. #தர்மம் செய்யப்படும் பொருட்களை மனிதர்கள் வாங்கமறுப்பார்கள் (அந்த அளவு செல்வம் கொழிக்கும்).
புகாரி : 1411, 1412, 1413, 1414, 1424

4. ஈஸா நபியின் வருகை.
புகாரி : 2222

5. #ஈஸா_நபி " சிலைகளை " உடைப்பார்கள்.
புகாரி :2222

6. ஈஸா நபி #பன்றியை கொல்வார்கள்.
புகாரி : 2222

7. ஈஸா நபி ஜிஸ்யாவரியை நீக்குவார்கள்.
புகாரி : 2222

8. #செல்வம் கொழிக்கும்.
புகாரி :2222, 1036

9. #கல்வி குறைந்துபோகும்.
புகாரி : 80, 81, 1036

10. அறியாமை வெளிப்படும்.
புகாரி : 80, 81

11. #விபச்சாரம் பகிரங்கமாக நடக்கும்.
புகாரி : 80, 81

12. 50 பெண்களுக்கு 1 ஆண் என்ற பிறப்புவிகிதம் ஏற்ப்படும் .
புகாரி :80, 81, 5231, 5577, 6808

13. இறுதிநாளின் முதல் அடையாளம் ஒரு நேருப்பு கிழக்கிலிருந்து மக்களை துரத்திக்கொண்டு வந்து மேற்குத்திசையில் ஒன்று சேர்க்கும் புகாரி : 4480 , முஸ்லிம் : 5162

14. "#தஜ்ஜாலின் " வருகை
முஸ்லிம் :5228, 5237
திர்மீதி : 2163

15. #மதுபானம் பெருகும்.
புகாரி : 80, 81

16. கருத்த ஒட்டகங்களை மேய்தவர்கள் உயரமான கட்டிடங்களைகட்டி தமக்குள் பெருமையடித்துக் கொள்வார்கள். புகாரி : 50

17. பெண்கள்! ஒட்டகத்திமில் போல் கொண்டை அணிந்துயிருப்பார்கள் .

18. #பூகம்பங்கள் அதிகரிக்கும்.
புகாரி : 1036, 7121

19. காலம் சுருங்கும்.
புகாரி : 1036, திர்மிதீ : 2254

20. குழப்பங்கள் அதிகரிக்கும்.
புகாரி : 1036, 3176

21. கொலைகள் அதிகரிக்கும்.
புகாரி : 85 ,1036, 6037, 7061.

22. குடிசைகள் கோபுரமாகும்.
புகாரி : 7121

23. தகுதியற்றவர்களிடம் பொருப்புகள் ஒப்படைக்கப்படும். புகாரி :59 6496

24. பாலைவனம் சோலைவனமாகும்.
முஸ்லிம் : 1681

25. பள்ளிவாசல்களை கட்டி ( அதைக்காட்டி) தமக்குள் பெருமையடித்துக்கொள்வார்கள்.
நஸயி : 682,
அபூதாவூத் : 379,
இப்னுமாஜா : 731
அஹ்மத் : 11931, 12016, 12079, 12925, 13509

26. நெருக்கமான கடைவீதிகள் ஏற்படும்.
அஹ்மத் : 10306

27. ஆடைஅணிந்தும் #நிர்வாணமாக காட்சியளிக்கும் பெண்கள்
தோன்றுவார்கள்.
முஸ்லிம் : 3971, 5098

28. உயிரற்ற பொருட்கள் பேசும். அஹ்மத் : 11365

29. பேச்சை தொழிலாக்கி #பொருள் திரட்டப்படும்.
அஹ்மத் : 1511

30. தெரிந்தவர்களுக்கு மட்டும் " #ஸலாம் " சொல்லும் காலம் வரும். ஹாக்கிம் : 4/493

31. பள்ளிவாசல்களை போக்குவரத்துக்கு பொதுப்பாதையாக பயன்படுத்தும் #காலம் வரும்.
ஹாக்கிம் : 4/493

32. மனிதன் மரணிப்பதற்கு ( #தற்கொலை செய்துகொள்ள) ஆசைப்படுவான்.
புகாரி : 7115, 7121

33. 30 பொய்யர்கள் தன்னை " #இறைத்தூதர் " என சொல்லும் காலம்வரும்.
புகாரி : 3609, 7121

34. முந்தைய சமுதாயமக்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றும் காலம்வரும். அவர்கள் #உடும்பு பொந்தில் நுழைந்தால் இவர்களும் நுழைவார்கள்.
புகாரி : 3456, 7319

35. யூதர்களுடன் முஸ்லிம்கள் மாபெரும் #போர் தொடுப்பார்கள். புகாரி : 2926

36. " #காபா " ஆலயம்! கால்கள் சிறுத்த அபிசீனியர்களால் சேதப்படுத்தப்படும். ( அல்லாஹ் காப்பாற்றுவானாக)
புகாரி : 5179

37. #யூப்ரடீஸ் ( ஃபுராத்) நதியில் தங்கப்புதையல் கிடைக்கும் அதைஎடுக்க வேண்டாம்.
புகாரி : 7119

38. யமன் நாட்டு #கஹ்தான் இன மன்னரின் ஆட்சி ஏற்படும்.
புகாரி : 3517, 7117

39. அல் ஜஹ்ஜாஹ் மன்னரின் #ஆட்சி ஏற்படும்.
முஸ்லிம் : 5183

40. ஒரு மன்னர் தன் ஆட்சியில் கொடைவள்ளலாக திகழ்ந்து மக்களுக்கு வாரிவழங்குவார்.
முஸ்லிம் : 5191

No comments:

Post a Comment