Wednesday 26 December 2018

மனமெனும் நப்ஸின்* *வகைகளும்* *அவைகளின் தன்மைகளும்* ‼

🌹 *மனமெனும் நப்ஸின்* *வகைகளும்*
*அவைகளின் தன்மைகளும்* ‼

 📣  ​​​*நப்ஸின்* *வகைகள்*

​1)  *அம்மாரா*

2)  *லவ்வாமா*

3)  *முல்ஹிமா*

4)  *முத்மயின்னா*

5)  *ராளியா*

6)  *மர்ளிய்யா*

7)  *காமிலா*

🌹 *​அம்மாராவின் தன்மைகள்*

கஞ்சத்தனம், மனக்கோட்டை, பேராசை, பெருமை, பொறாமை, விளம்பர மோகம், மதிமயக்கம்.

🌹 *​லவ்வாமாவின் தன்மைகள்*

பச்சாதாபம், சிந்தனை சுயநலம், தற்பெருமை, எடுத்துக் காட்டுதல்.

🌹​ *முல்ஹிமாவின் தன்மைகள்*

தர்மசிந்தனை, உள்ளதைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, ​சேவை உணர்வு.

🌹 *முத்மயின்னாவின் தன்மைகள்*

தவக்குல், சகிப்புத்தன்மை, வணக்க வழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.

🌹 *ராளியாவின் தன்மைகள்*

பற்றற்றவாழ்க்கை, மனத்தூய்மை, பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல்.

🌹 *மர்ளியாவின் தன்மைகள்*

நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அன்பை அடைய முயலுதல், அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாகப் பொறுந்திக் கொள்ளுதல்.

🌹 *காமிலாவின் தன்மைகள்*

*அம்மாராவில் உள்ள* தன்மைகளை விட்டு முற்றும் நீக்கம் பெற்று.

*லவ்வாமாவிலுள்ள* சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல் என்ற விஷயங்களை விட்டும் நீங்கி பச்சாதாபம், சிந்தனை.

*முல்ஹிமாவில்* உள்ள தர்மசிந்தனை, உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, சேவை உணர்வு.

*முத்மயின்னாவில்* உள்ள தவக்குல் சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.

*ராளியாவில் உள்ள* பற்றற்ற வாழ்க்கை, மனத்தூய்மை பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல்.

*மர்ளியாவிலுள்ள* நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல். அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாக பொருந்திக் கொள்ளுதல்.

​​இவ்வாறு *நப்ஸின் முந்திய ஆறு வகைகளையும் கடந்து, நப்ஸூடன் யுத்தம் செய்து, வெற்றி கொண்டு காமிலா* என்ற.,

*ஏழாவது நப்ஸின் தன்மைகளை முழுமையாக அடைந்து கொண்டவர்கள்* தான்.,

*குதுபுக்கள், ஹெளதுகள்,  முக்தார்கள், அவ்த்தாதுகள், அன்வார்கள், உரஃபாக்கள், அக்பார்கள், புதலாக்கள், நுஜபாக்கள், நுகபாக்கள் எனும் அவ்லியாக்கள்*.

✍ *ஹாஜி அப்துல் நசீர் சேலம்*

No comments:

Post a Comment