Tuesday 1 January 2019

குர்ஆன் போதிப்பது என்ன❓❓❓ சிறு தொகுப்பு!!!

*📚📚📚குர்ஆன் போதிப்பது என்ன❓❓❓ சிறு தொகுப்பு!!!📚📚📚*



..  ஒப்பந்தங்களை முறித்து மாறு செய்ய கூடாது.
*📚குர்ஆன் 2:27,16:92*

.. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.
*📚குர்ஆன் 2:27,47:22*

.. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.
*📚குர்ஆன் 2:42*

..  நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.
*📚குர்ஆன் 2:44 61:2*

.. பூமியில் குழப்பம் செய்து திரிய கூடாது.
*📚குர்ஆன் 2:60*

..  ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்க கூடாது.
*📚குர்ஆன் 2:79*

.. பெற்றோருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும்
*📚குர்ஆன் 2:83*

... வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது.
*📚குர்ஆன் 2:84*

.. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்றியுங்கள்.
*📚குர்ஆன் 2:109*

..  நல்லவற்றை/ தூயவற்றையே சாப்பிட வேண்டும்.
*📚குர்ஆன் 2:168 ,172*

.. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்ற கூடாது.
*📚குர்ஆன் 2:170*

.. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும்,  ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளுக்கும் கொடுத்து, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.
*📚குர்ஆன் 2:177*

.. மற்ற மனிதர்களின் சொத்துக்களை அபகரிக்க கூடாது. லஞ்சம் கொடுக்க கூடாது.
*📚குர்ஆன் 2:188*

.. உங்களுடன் போர் புரிபவர்களோடே போர் புரிய வேண்டும். அதிலும் வரம்பு மீற கூடாது. போர் செய்யாது விலகிக்கொண்டால், அநியாய காரர்கள் மீதே தவிர வேறு எவர் மீதும் பகைமை கொல்ல கூடாது.
*📚குர்ஆன் 2:190-193*

எதிரிகளில் ஒருவன் அடைக்களம் கேட்டால் கொடுத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும்
*📚குர்ஆன் 9:6*

உங்களுடன் போரிட சக்தியற்றவர்களுடன் போர் செய்ய கூடாது. அவர்கள் எதிரியாக இருந்தாலும் சரி
*குர்ஆன் 4:90*

எதிரிகள் சமாதானத்தை விரும்பினால், சமாதனமாக வேண்டும்.
*📚குர்ஆன் 8:61*

அப்பாவிகளை பலவீனர்களை காப்பாற்றவே போர் செய்ய வேண்டும்.
*📚குர்ஆன் 4:75*

..  பூமியில் குழப்பம் செய்ய, விவசாயத்தை அழிக்க கூடாது..
*📚குர்ஆன் 2:205*

.. நல்ல வழியில் அநாதைகளுக்கு குடும்பத்திற்க  வழிப்போக்கர்களுக்கு தர்மம் செய.
*📚குர்ஆன் 2:215*

.. மதுபானம் சூதாட்டம் கூடாது.
*📚குர்ஆன் 5:90*

.. அநாதைகளை சீர்திருத்தி பராமரிக்க வேண்டும்.
*📚குர்ஆன் 2:220*

...மாதவிடாய் காலத்தில் உடலுறவு செய்ய கூடாது.
*📚குர்ஆன் 2:222*

... தர்மத்தை தனக்கு தரும் கடனாக இறைவன் பார்க்கிறான். அக்கடனை திருப்பி கொடுத்துவிடுவான்.
*📚குர்ஆன் 2:245*

.. . மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
*📚குர்ஆன் 2:256 10:99 18:29*

,... தர்மம் செய்து விட்டு சொல்லிக்காட்ட கூடாது.
*📚குர்ஆன் 2:262-264*

.. நல்லதையே தர்மம் செய்ய வேண்டும்..
*📚குர்ஆன் 2:267*

... தேவையுள்ளவர்களை கண்டுபிடித்து உதவ வேண்டும்.
*📚குர்ஆன் 2:273*

....வட்டி வாங்க கூடாது.
*📚குர்ஆன் 2:275-276,279*

... கடன் வாங்கியவருக்கு திருப்பி தர முடியாவிட்டால், அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
*📚குர்ஆன் 2:280*

....கடன்  கொடுக்கல் வாங்கல்களை எழுதி கொள்ள வேண்டும். அதற்காக நல்ல சாட்சியாளர்களை வைத்து கொள்ள வேண்டும்.
எழுத முடியாவிட்டால், அடைமானங்களை வைத்து செய்ய வேண்டும்.
*📚குர்ஆன் 2:281-282*

... .நன்மையானவற்றை ஏவி தீயதை தடு.
*📚குர்ஆன் 3;104,110,114*

..கோபத்தை அடக்கிகொள்.  மனிதர்களை மன்னித்து விடு.
*📚குர்ஆன் 3:134*

.. தவறு என்று அறிந்த பின் அதில் தொடர்ந்து இருக்காதே.
*குர்ஆன் 3:135*

வணக்கம் காலை 10.30
... மற்றவர்களுடன் மென்மையாக நடந்து,சொல்லில் கடுமையாக இல்லாமலும், மற்றவர்களுடன் ஆலோசனை செய்பவராக இருக்க வேண்டும்.
*📚குர்ஆன் 3:159*

... கஞ்சத்தனம் கூடாது.
*📚குர்ஆன் 3:180*

.. மற்றவர்களின் நோவினை செய்யும் வார்த்தைகளை கேட்டாலும், பொறுமையாக இரு.
*📚குர்ஆன் 3:186*

...வானங்கள் பூமியின் படைப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும்.
*📚குர்ஆன் 3:190-191*

.. நற்கூலி வழங்கப்படுவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை.
*📚குர்ஆன் 3:195 4:124 16:97 40:40*

....இறந்தவர் விட்டு செல்லும் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு.
*📚குர்ஆன் 4:7*

... சொத்து பிரிக்கும் போது அவ்விடத்திற்கு,  அநாதையோ, ஏழையோ வந்தால்  அவர்களுக்கும் ஏதாவது கொடுத்து, அன்பான வார்த்தைகளை அவர்களுக்கு கூற வேண்டும்.
*குர்ஆன் 4:8*

... அநாதைகளின் சொத்துக்களை  , அவர்களை பராமரிப்பதாக கூறி சாப்பிட கூடாது..
*📚குர்ஆன் 4:6,10*

... பெண்களை வற்புருத்தி திருமணம் முடிக்க கூடாது.

மனைவிகளுடன் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் விசயத்திலும் அநேக நன்மைகள் இருக்கும்.
*📚குர்ஆன் 4:19*

.... திருமணம் முடிக்க, பெண்ணுக்கு மனக்கொடையை ஆண் கொடுக்க வேண்டும்.
அவளை விவாகரத்து செய்யும்போது, ஒரு பொற்குவியலை கொடுத்திருந்தாலும் திருப்பி கேட்க கூடாது.
*குர்ஆன் 4:4,20*

..நெருங்கிய இரத்த உறவுகளை, திருமணம் முடிக்க கூடாது.
*📚குர்ஆன் 4:22-23*

,.. மற்றவர்களின் சொத்தை அநியாயமாக உண்ண கூடாது.
தங்களை தாங்களே அழித்து கொள்ள கூடாது.
*குர்ஆன் 4:29*

.... ஆண்களே பெண்களுக்கு செலவழிக்க வேண்டும்.
*📚குர்ஆன் 4:34*

... பெற்றோருக்கு,உறவினர், அநாதைகளுக்கு, ஏழைகளுக்கு, உறவினரான அயலவர், உறவினரல்லாத அயலவர், நண்பர்கள், வழிப்போக்கர்கள், அடிமைகளுக்கு உபகாரம் செய்ய *📚குர்ஆன் 4:58**

....அப்பாவிகளை பாதுகாக்கவே போர்.
*📚குர்ஆன் 4:75*

..நன்மையானவற்றிற்காக பரிந்துரைத்தால், அந்நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு..
*📚குர்ஆன் 4:85*

...உங்களை எதிர்த்து போரிட இயலாத எதிரிகளை ஒன்றும் செய்ய கூடாது.
*குர்ஆன் 4:90*

.. மோசடி காரர்களுக்காக வாதாட கூடாது.
*📚குர்ஆன் 4:107*

.. பாதிக்கப்படுவது நீங்களாக, உங்கள் உறவினராக இருந்தாலும் நீதியை நிலை நிறுத்தியே சாட்சி சொல்ல வேண்டும்.
*📚குர்ஆன் 4:135*

..நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும்.
பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடாது.
*📚குர்ஆன் 5:2*

 .. ஒரு உயிரை நியாயமின்றி,கொலை செய்தால் அவர் முழு மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்.
ஒரு உயிரை வாழ வைத்தால், அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்.
*📚குர்ஆன் 5:32*

முஸ்லிம் அரசாங்கத்தின் கீழ் வாழும் ஒரு முஸ்லிமல்லாதவரை அநியாயமாக கொலை செய்பவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது.
*(புஹாரி)*

... கெட்டவை அதிகமாக இருந்தாலும் , நல்லவையும் கெட்டவையும் சமமல்ல..
*குர்ஆன் 5:100*

. .. மாற்று மதத்தவர்களால் கடவுளென நம்பப்படுபவர்களை ஏச கூடாது.
*குர்ஆன் 6:108*

.. பெரும்பாண்மையை  வைத்து எதையும் நல்லது என்று தீர்மானிக்க கூடாது
*குர்ஆன் 6:116*

..   தம் குழந்தைகளை  வறுமைக்கு பயந்து கொல்ல கூடாது.
மானக்கேடானதில் இரகசியமானவற்றையோ, வெளிப்படையானவற்றையோ நெருங்க கூடாது.

எந்த உயிரையும் உரிமையின்றி கொல்ல கூடாது.
*குர்ஆன் 6:151*

.. அளவை நிறுவையில் நேர்மையாக இரு..
பாதிக்கபடுவது உறவினராக இருந்தாலும் நீதத்தையே கூறு.
*குர்ஆன் 6:152*

.. ஒருவரின் பாவச்சுமைகளை மற்றவர் சுமக்க முடியாது.
*குர்ஆன் 6:164*

..இறைவனை பிரார்த்தனை செய்யும்போது, பணிவாகவும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
*குர்ஆ,,,,,

.. அளவை நிறுவையில் மோசடி கூடாது.
*📚குர்ஆன் 7:85*

 ..  மன்னிப்பதை கைக்கொண்டு, நன்மையை ஏவி, அறிவிலிகளை புறக்கணித்து விடு.
*📚குர்ஆன் 7:199*

 ..  பெற்றோருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

மார்க்க விசயத்திலே மட்டுமே கட்டுபட கூடாது.

அவர்கள் முதுமையை அடைந்தால், அவர்களுக்கு 'சீ' என்று கூட கண்ணிய குறைவாக பேச கூடாது.

அவர்களை விரட்டிவிட கூடாது.

அவர்களுடன் பணிவாக இரக்கமாக நடக்க வேண்டும்.
*📚குர்ஆன் 17:23-24 31:14-15*

இறைவனுக்கு நன்றி செலுத்து என்பதுடன் இணைத்து பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று கூறுகிறது.
*குர்ஆன் 31:14*

 .. வீண் விரயம் செய்ய கூடாது. கஞ்சத்தனம் கூடாது.
*📚குர்ஆன் 17:27-29*

...விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவும் கூடாது.
*📚குர்ஆன் 17:32*

...கர்வம் கொண்டு நடக்க கூடாது. பணிவாக நடக்க வேண்டும்.
*📚குர்ஆன் 17:37 31:18 25:63*

....பேசினால் நல்லதையே பேச வேண்டும்.
*📚குர்ஆன் 17:53*

 .. பார்வையை தாழ்த்தி கற்பை பாதுகாத்துக்கொள்.
*📚குர்ஆன் 24:30-31*

.. பொய் சாட்சி சொல்ல கூடாது.
வீணான காரியங்களில் ஈடுபடாதே.
*📚குர்ஆன் 25:72*

...  மற்ற மனிதர்களிடமிருந்து முகத்தை திருப்பிக்கொள்ளாதே!  கர்வமாக நடக்காதே!
சத்தத்தை தாழ்த்திக்கொள்!
*📚குர்ஆன் 31:18-19*

..  மற்றவரை கேலி செய்யாதே!
கெட்ட பெயர் வைத்து கூப்பிடாதே!
புறம் பேசாதே!
துருவி துருவி மற்றவனை குறை தேடாதே!
*குர்ஆன் 49:11-12*

... மனிதர்கள் அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளே!
எவருக்கும் எவரை விடவும் சிறப்பு இல்லை!
கோத்திரங்கள், கிளைகளை ஆக்கியது அறிமுகமாகிக்கொள்வதற்காகவே!
உங்களில் சிறந்தவர் பயபக்தி உடையவரே!
*📚குர்ஆன் 49:13*

.... உங்களுடன் மார்க்க விசயத்தில் போரிடாத, வீட்டிலிருந்து வெளியேற்றாத மாற்று மதத்தவர்களுக்கு நன்மை செய்.
*குர்ஆன் 60:8.*

....ஏழைகளுக்கு உணவளி, உணவளிக்க மற்றவர்களை தூண்டு!
இதை செய்யாதவர்களுக்கு கேடு.. நரகமே தங்குமிடம்.
*📚குர்ஆன் 74:42-44 107:1-3*

சுவர்க்கம் போக இது முக்கிய காரணம்.
*📚குர்ஆன் 76:8-12*

. .. குறை கூறி புறம் பேசி திரியாதே!
*📚குர்ஆன் 104:1*

... அநாதைகளை ஒடுக்காதே!
யாசிப்போரை விரட்டாதே!
*📚குர்ஆன் 93:9-10*

..பசித்தோருக்கு உணவளி.
*📚குர்ஆன் 90:13-16*


 *📚📚📚தொகுத்து வழங்கியது இஸ்லாமிய மகளிர் தாவா குழு📚📚📚*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment